admin

நூலாறு

நேற்று வேலூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.  ஆழிபதிப்பகம் நடத்தும் நண்பர் செந்தில்நாதன்.  தன்னுடைய அரிய முயற்சியால் இந்தப் புத்தக கண்காட்சியைத் தனது ஆழி அறக்கட்டளை மற்றும் வேலூர் வாசகர் பேரவை அமைப்புடன் இணைந்து முதன்முறையாக துவக்கியுள்ளார்.  புத்தகக் கண்காட்சி அல்லது புத்தக திருவிழா என்பதற்கு மாற்றாக நூலாறு 2010 என்று அவர்கள் விளம்பரப்படுத்தியிருந்தது பிடித்திருந்தது. எழுத்தாளர் அழகிய பெரியவன் இந்தப் புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பில் அயராது ஒடியாடி வேலை செய்து கொண்டிருந்தார், புத்தகங்கள் மீது அவர் கொண்ட …

நூலாறு Read More »

இது வேறு சினிமா

பாங்காங்கில் உள்ள திரைப்படவளாகம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். ஒரே இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள்  இருந்தன. ஆனால் அதில் ஒன்றில் கூட பாங்காங்கில் தயாரிக்கபட்ட படங்கள்திரையிடப்படவில்லை. அத்தனையும் ஹாலிவுட் படங்கள்.அந்தத் திரைப்படங்களைக் காண வருகின்றவர்களில் பெரும்பான்மை உள்ளுர் இளைஞர்கள். அவர்களுக்குச் சினிமா பார்ப்பது பெண்களுடன் சேர்ந்து பொழுது போக்குவதற்கான கேளிக்கை நிகழ்வு.. சினிமா அரங்கம் வணிகத்தின் அத்தனை சாத்தியப்பாடுகளும் நிரம்பியதாக இருந்தது. அங்கே சினிமாவும் காட்டுகிறார்கள் என்பதே உண்மை. . அமெரிக்க வணிக சினிமாவின் சந்தை இன்று உலகெங்கும் …

இது வேறு சினிமா Read More »

ஜல்லிக்கட்டு

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எனது நண்பர் ராம்நாராயண் எனும் ராம்ஜி ஹோம்டிவி என்ற நியூடெல்லியில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்திற்காக ஜல்லிகட்டு பற்றிய ஆவணப்படம் ஒன்றினை இயக்க முனைந்தார். அப்போது நான் அவருடைய அறைத்தோழனாக இருந்தேன். ராம்ஜி பூனா திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் பயின்றவர். இன்று தொலைக்காட்சி தொடர்கள், விவாத நிகழ்வுகள் என்று விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது முதல் ஆவணப்படமது என்பதால் நாங்கள் சிறிய குழுவாக செயல்பட்டு அதை சிறப்பாக …

ஜல்லிக்கட்டு Read More »

எனது நூல் வெளியீட்டு விழா

எனது ஐந்து புதிய நூல்களுக்கான வெளியீட்டு விழா செப்டம்பர் 5ம் தேதி காலை 9.30 மணி அளவில் மதுரையில் நடைபெற உள்ளது வெளியிடப்படும் நூல்கள் 1) அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்த்து – சிறுகதைத் தொகுப்பு 2) காண் என்றது இயற்கை – இயற்கை அறிதல் கட்டுரைகள் 3) இருள் இனிது ஒளி இனிது – உலக சினிமா கட்டுரைகள் 4) செகாவின் மீது பனி பெய்கிறது – ருஷ்ய இலக்கிய ஆளுமைகள் 5) குறத்தி முடுக்கின் …

எனது நூல் வெளியீட்டு விழா Read More »

வயது நாலு

நண்பரின் வீட்டில் அவரது நான்கு வயது மகளைச்  சந்தித்தேன்.  உன் பேரு என்னவென்று கேட்டேன். சம்ஷிகா என்றாள். உனக்கு எத்தனை வயசாகுது என்று கேட்டேன். எனக்கு நாலு வயது ஆகுது. இந்த வீட்டிலயே நான் தான் பெரிய ஆள் என்றாள். உங்க அப்பாவுக்கு எவ்வளவு வயசு ஆகுது என்று கேட்டேன். அதை போய் அவர்கிட்டே கேளு என்றாள். உனக்கு என்ன பிடிக்கும் என்றேன். அவள் ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் ரிமோட் கண்ட்ரோல் என்றாள். நண்பர் சிரித்தபடியே …

வயது நாலு Read More »

காட்சிப்பிழை

தமிழ் சினிமா பற்றி கருத்தியல் சார்ந்த தீவிரமான ஆய்வுக்கட்டுரைகள். மாற்று சினிமா குறித்த அறிமுகம் மற்றும் பார்வையாளனின் ரசனை மாற்றங்கள், சினிமா உருவாக்கும் சமுதாயப் பாதிப்புகள் என விரிந்த தளத்தில் இயங்கும் புதிய சினிமா இதழாக வெளியாகி உள்ளது காட்சிப்பிழை, இதன் ஆசிரியர் சுபகுணராஜன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி ,எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ஸ்டிபன் ஹுயூஸ் ,சுந்தர் காளி ,ராஜன் குறை , இவர்களுடன் நானும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். சுபகுணராஜன் நவீன நாடகங்களில் தீவிர ஈடுபாடு கொண்ட நடிகர் மற்றும் …

காட்சிப்பிழை Read More »

மழை இருட்டு

முந்தாநாள் மாலை நான்கு மணியிருக்கும். பாலாவின் அவன்இவன் படப்பிடிப்பு தளத்தில் இருந்தேன். வெளியே பாருங்கள். அதற்குள் இருட்டிவிட்டது என்ற குரல் கேட்டது. அறையை விட்டு வெளியே வந்து நின்று பார்த்தேன். சுற்றிலுமிருந்த மரங்கள் தெரியவில்லை. சட்டென பகல் மறைந்து எங்கும் இருண்டிருந்தது. இது அன்றாடம் காணும் இருளில்லை. சிம்னியை கரிப்புகை மறைத்து கொண்டிருப்பது போல பகல்வெளிச்சத்தை இந்த இருள் மூடிக் கொண்டுவிட்டதோ என்று தோன்றியது. மாலை நான்கு மணிக்கு இப்பிடி இருண்டு போவது அபூர்வம். ஆகாசத்தையே பார்த்துக் …

மழை இருட்டு Read More »

இரண்டு குறுங்கதைகள்

காதல்மேஜை. முள்கரண்டி ஒன்று வெள்ளியால் ஆன ஸ்பூன் ஒன்றை நீண்ட நாட்களாக காதலித்து கொண்டிருந்தது. இருவரும் மிக நெருக்கமாக ஒரே மேஜையில் இருந்தபோதும் ஸ்பூன் தான் ஒரு பேரழகி என்ற பெருமிதத்தில் முள்கரண்டியை  பெரிதாக கண்டு கொள்ளவேயில்லை முள்கரண்டி தீராத காதலின் ஏக்கத்துடன் ஸ்பூனை பார்த்து சொன்னது .”தேனில் கிடந்து ஸ்பூன்களின் குரலும் கூட இனிப்பான இருக்கிறது. அதற்காகவே காதலிக்க விரும்புகிறேன்.” மாறாக ஸ்பூன் சொன்னது .”முள்கரண்டிகள் அருவருப்பானவை. அவை எதையும் லாவகமாக கையாளுவதேயில்லை. குத்தி கிழிப்பது …

இரண்டு குறுங்கதைகள் Read More »

ஒரு மகத்தான பயணம்

கடந்த சில வருசங்களில் நான் பார்த்த ஆகச்சிறந்த படம் இதுவே என்பேன். Le Grand Voyage என்ற இந்த பிரெஞ்சு படத்தை பார்த்துவிட்டு மூன்று நாட்களுக்கு வேறு எதையும் பாரக்கவோ படிக்கவோ மனது நிலை கொள்ளவில்லை. காட்சிகள் மனதில் பச்சென ஒட்டிக் கொண்டுவிட்டன. எப்போதாவது அபூர்வமான தருணங்களில் தான் திரைப்படம் என்னை அழ வைத்திருக்கிறது. இந்தபடமோ நாலைந்து முறை திரையை உறைய செய்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு பார்க்கும் உணர்ச்சிபீறடலை உருவாக்கியது. Ismael Ferroukhi,இயக்கி 2004ம் ஆண்டு வெளியான …

ஒரு மகத்தான பயணம் Read More »

மற்றவள்

எனது கதை ஒன்றினை திரைப்படக்கல்லூரியை சேர்ந்த மாணவர் லோகேஷ் மற்றவள் என்ற குறும்படமாக இயக்கியிருக்கிறார்.  இந்தக் கதை குறும்படத்திற்காகவே எழுதப்பட்டது. அதன் திரைக்கதை வசனத்தை நானே எழுதியிருக்கிறேன். ஒளிப்பதிவு துறையில் பயின்ற லோகேஷ் இக் குறும்படத்தை மிக அழகாக ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக  முரளி மனோகர் இயக்கி எனது கதை வசனத்தில் வெளியான குறும்படமான கர்ணமோட்சம். தேசிய விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெற்றுள்ளது. அதன்பாதையில் மற்றவளும் தற்போது சில குறும்பட …

மற்றவள் Read More »