admin

ரிச்சர்ட் பெயின்மென

அறிவியலில் உயர் ஆய்வு செய்யும் நண்பர் ஒருவரை தற்செயலாகச் சந்தித்தேன். சேர்ந்து காபி குடிக்க சென்றோம். வழியில் பேசிக் கொண்டிருந்த போது ரிச்சர்டு பெயின்மெனை  (Richard P. Feynman  )எனக்கு பிடிக்கும். அவரை விரும்பி படித்திருக்கிறேன் என்று சொன்னேன். அவரால் நம்ப முடியவில்லை. வியப்புடன் நீங்கள் பெயின்மெனை எப்படிக் கண்டுபிடித்தீர்கள். எழுத்தாளர்களுக்கும் விஞ்ஞானத்திற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார். நானும் அந்த இடைவெளி அப்படியே தானிருக்கிறது. எனக்கும் பெயின்மேனின் இயற்பியல் …

ரிச்சர்ட் பெயின்மென Read More »

பதில் இல்லாத பரிட்சை.

சென்னையில் எந்தச் சாலையை எப்போது தோண்டுவார்கள். என்ன வேலை நடக்கிறது எப்போது அது முடியும். எந்த சாலை எப்போது திருப்பிவிடப்படும் என்று எவராலும் சொல்லிவிட முடியாது. எந்த முன்னறிவிப்பும் கிடையாது. தொலைக்காட்சி, பண்பலை, இணையம் என்று இத்தனை ஊடகங்கள் இருந்த போதும் காவல்துறையும் மாநகராட்சியும் அதில் எதையும் பயன்படுத்தி முன்கூட்டி தெரிவிப்பதுமில்லை. குறிப்பாக தேர்வு காலங்களில் சென்னை மாநகரம் படும்பாடுகள் எழுதி தீராத வலி நிரம்பியது. மைக்கேல் டக்ளஸ் நடித்த Falling Down  படத்தில் வீடு திரும்பும் மைக்கேல் …

பதில் இல்லாத பரிட்சை. Read More »

உலகசினிமாவில் ஒவியர்கள்.

உலக சினிமாவில் ஒவியர்கள் என்ற தலைப்பில் பிப்ரவரி 28 அன்று கும்பகோணம் அரசு ஒவியக்கல்லூரியில் நடைபெற்ற கவின்கலை விழாவில் பேசினேன். புகழ்பெற்ற ஒவியர்களை பற்றிய ஆவணப்படங்கள் மற்றும் முழுநீளப்படங்கள் என்ன வெளியாகி உள்ளன. ஏன் ஒவியர்களின் வாழ்க்கை படமாக்கபடுகின்றன என்பதை பற்றியதாக எனது உரை அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் மாணவர்கள் மிக உற்சாகத்துடன்  கலந்துரையாடல் செய்தார்கள். முன்னதாக கும்பகோணம் ஒவியக்கல்லூரியின் திறந்த வெளி காட்சிக்கூடத்தில்  சிற்பங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை அந்த …

உலகசினிமாவில் ஒவியர்கள். Read More »

ஜெகதி

மலையாள சினிமாவில் எப்போதும் என் விருப்பத்திற்குரிய நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார். பல படங்களை இவரது நகைச்சுவை காட்சிகளுக்காகவே பார்த்திருக்கிறேன்.  எப்போதாவது ஏசியாநெட் காணும் போது  அவரது நகைச்சுவை காட்சிகளை விரும்பி பார்ப்பதுண்டு. தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு மோகன்லால், மம்முட்டி, திலீப், ஜெயராம் என்று முன்னணி நடிகர்கள் பலரையும் தெரிந்த அளவிற்கு ஜெகதி அறிமுகமாகவில்லை. முக்கிய காரணம் அவர் மலையாளப் படங்கள் தவிர வேறு எதிலும் நடிக்காததே.  என் வரையில் இந்திய அளவிலான சமகால நகைச்சுவை நடிகர்களில் ஜெகதி …

ஜெகதி Read More »

பாடு புஜ்ஜி பாடு.

புத்தக அலமாரியை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த போது மேலடுக்கில் கிடந்த ஒரு தெலுங்கு புத்தகம் கண்ணில் பட்டது. நிறைய ரோஜாப்பூக்கள் கொண்ட அட்டைபடம்.. ஏதோ கோபத்தில் வீசி எறிந்திருக்கிறேன். இன்று தான் மறுபடியும் கண்ணில் படுகிறது.நிச்சயம் ஆறு ஏழு வருசம் இருக்க கூடும். பின்அட்டையில் ஒரு பூங்காவில்  புல்வெளியில் அமர்ந்தபடியே மடியில் ஒரு பேடு, பேனாவுடன் கன்னத்தில் கைவைத்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்தார் கவிஞர் புஜ்ஜி. (அவர் நிஜபெயர் வேண்டாமே ). சபாரி உடை. முகத்திற்கு பொருந்தாத கண்ணாடி.  …

பாடு புஜ்ஜி பாடு. Read More »

மறக்கப்பட்ட பெண்

நேற்றிரவு திலீப் மேத்தாவின்  The Forgotten Woman  என்ற ஆவணப்படத்தை பார்த்தேன்.  படம் துவங்கிய ஒன்றிரண்டு நிமிசங்களில் இது முக்கியமான படம் என்பதை மனது உணரத்துவங்கியது. இந்தியாவில் இருபது மில்லியன் விதவைகள் இருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் நான்கு வீடுகளில் ஒன்றில் ஒரு விதவை நிச்சயம் இருக்கிறாள். அவள் பிறர் கண்ணில் படாமல், ஒதுக்கபட்டு, விலக்கபட்டு அடையாளமற்றவளாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இந்தியாவில் பெண்களாக இருப்பது எப்போதுமே இரண்டாம் நிலையாகவே கொள்ளபடுகிறது. அதிலும் விதவையாக இருக்க நேர்வது மிகுந்த அவமதிப்பும் புறக்கணிப்பும் …

மறக்கப்பட்ட பெண் Read More »

சிரித்தால் மட்டும் போதுமா ?

நாகேஷை இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். ஆறு வருசங்களுக்கு முன்பு ஒரு முறை இயக்குனரான எனது நண்பர் தனது படத்தில் நடிக்க வைப்பதற்காக நாகேஷை  பார்க்க அழைத்து சென்றார். அந்த நேரத்தில் அவர் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்தார். நட்பிற்காக சில படங்கள் ஒத்துக் கொண்டதோடு சரி.  வீட்டில் எளிமையான நாலு முழ வேஷ்டி, பனியன் அணிந்தபடியே அவர் அமர்ந்திருந்த விதம் வெகு இயல்பாக இருந்தது. படத்தில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று மறுத்துவிட்டார். விடைபெறும் போது இயக்குனரிடம் என்னை எதுக்குப்பா …

சிரித்தால் மட்டும் போதுமா ? Read More »

இந்திய சரித்திரக் களஞ்சியம்

தமிழில் வெளியாகும் பெரும்பான்மை வரலாற்று நூல்கள் படிக்க அலுப்பூட்டும் நடையில் எழுதப்படுகின்றன. அத்தோடு மரபான வரலாற்றுத் தகவல்களைத் தாண்டி அதில் வேறு எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை. காலத்தைப் பிரித்து காட்டும் முறையும் மிகப் பழமையானது.  வரலாற்றை மீள்பார்வை செய்துவரும் சமகாலச் சூழலில் நவீன பிரக்ஞையுடன் கூட மறுவாசிப்பு நூல்களின் தேவை  அவசியமாக உள்ளது. அந்த வகையில் டி.டி.கோசம்பி, ரொமிலா தாபர், மற்றும் பணிக்கரின் இந்திய வரலாற்று மீள்வாசிப்புகள் முக்கியமானவை. இவ்வகையில் ப. சிவனடி எழுதி பதிநான்கு …

இந்திய சரித்திரக் களஞ்சியம் Read More »

நகுலனின் பத்துக் கவிதைகள்

நவீன தமிழ் கவிதையுலகில் எனக்கு விருப்பமான மூன்று கவிஆளுமைகள் பிரமீள், நகுலன் மற்றும் தேவதச்சன் . அவர்கள் தங்களுக்கெனத் தனியான கவித்துவ மொழியும் அகப்பார்வையும் தனித்த கவியுலகமும் கொண்டவர்கள். மூவரது கவிதைகளிலும் அடிநாதமாக தமிழின் கவித்துவமரபும் சங்க இலக்கியம் துவங்கி சமகால உலக இலக்கியம் வரை வாசித்த நுட்பமும் ஒடிக் கொண்டிருக்கும். ஆனால் இந்த மூவருக்கும் பொது ஒற்றுமைகள் கிடையாது. தன்னளவில் இவர்கள் தனித்துவமான ஆளுமைகள். இவர்களின் பாதிப்பு இளம்கவிஞர்களிடம் கண்கூடாக காண முடிகிறது. மூவருடன் பழகி …

நகுலனின் பத்துக் கவிதைகள் Read More »

ஆஸ்கார் நாயகன் ரஹ்மான்.

நான் தொலைக்காட்சி பார்ப்பவனில்லை. ஒரு நாளைக்கு பத்து நிமிசடங்கள் பார்ப்பதே அபூர்வம். பல மாதங்கள் ஒரு நாள் கூட தொலைக்காட்சி பார்க்காமலே கழிந்திருக்கிறது.  என் மனஇயல்பிற்கு தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருப்பது ஏனோ ஒத்துவருவதில்லை. யாராவது நண்பர்கள் பார்க்கும்படி சிபாரிசு செய்தால் ஒரு சில நிகழ்ச்சியை பார்ப்பேன். செய்திகள் அல்லது என்டிவி அரசியல் விமர்சனங்களை எப்போதாவது பார்ப்பதுண்டு. அது போல எங்காவது வெளியூர்களில் தங்கும் நாட்களில் இரவெல்லாம் அனிமல் பிளானெட், அல்லது நேஷனல் ஷியாகிரபி பார்த்து கொண்டிருப்பேன். மற்றபடி …

ஆஸ்கார் நாயகன் ரஹ்மான். Read More »