admin

நாகார்ஜுனனின் வலைப்பக்கம்.

வலைப்பதிவுகளில் நான் அன்றாடம் வாசிக்கும் பதிவாக மாறியிருக்கிறது நாகார்ஜுனனின் திணை இசை சமிக்ஞை என்ற வலைப்பக்கம். நாகார்ஜுனன் எனது நல்ல நண்பர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய உலகில் கவனத்திற்குரிய விமர்சகர். கோட்பாட்டாளர். பத்திரிக்கையாளர். புனைகதையாசிரியர், பின்நவீனத்துவ சிந்தனையாளர் என்று அவரது ஆளுமை பன்முகப்பட்டது. தற்போது லண்டனில் வசிக்கிறார். அவர் சென்னையில் வசித்த நாட்களில் ஆறேழு வருடம் தினமும் சந்தித்து பேசியிருக்கிறேன். நாகார்ஜுனன் வீட்டு மாடியில் அவரோடு தங்கிக் கொண்டு பல இரவுகள் நானும் கோணங்கியும்  ஏதேதோ பேசி …

நாகார்ஜுனனின் வலைப்பக்கம். Read More »

போய்வாருங்கள் பொருட்களே.

பார்த்துக் கொண்டிருந்த போதே நம் வாழ்விலிருந்து பல பொருட்கள் நிசப்தமாக வெளியேறி மறைந்து போய்விட்டன. நவீன வாழ்க்கையின் விஞ்ஞான வளர்ச்சியால் பல புதிய பொருட்கள் வாழ்விற்குள் நுழைந்திருக்கின்றன. அதைப் பயன்படுத்துவதில் நமக்கு எவ்விதமான சிரமமும் இல்லை. ஒருவகையில் இந்த மாற்றம் தவிர்க்கமுடியாதது. அது தான் வளர்ச்சியும் கூட. ஆனால் யோசிக்கையில் நம்மை விட்டுச் சென்ற பல பொருட்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டிய அவசியமுள்ளது.  நோபல் பரிசு பெற்ற கவிஞரான பாப்லோ நெருதா  உடைகள், உண்ணும் பழங்கள் …

போய்வாருங்கள் பொருட்களே. Read More »

காற்றில் யாரோ நடக்கிறார்கள்.

        சமகால தமிழ் நாவல்கள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக  மூன்று வாரங்களுக்கு முன்பு சாத்தூர் சென்றிருந்தேன். நாஞ்சில் நாடன், நான், கோணங்கி, கீரனூர் ஜாகிர்ராஜா ஆகிய நால்வரும் உரையாற்றினோம். நிகழ்ச்சி முடிந்து திசைக்கொருவராகப் பிரிந்த போது இரவே சென்னைக்கு கிளம்புவதற்கு பதிலாக குற்றாலம் வரை சென்று வந்தால் என்னவென்று தோன்றியது.  மருத்துவராக உள்ள என் அண்ணன் மற்றும் நண்பர்களுடன் ஒரு வாடகை காரில் பின்னிரவில் புறப்படுவது என்று முடிவு செய்து …

காற்றில் யாரோ நடக்கிறார்கள். Read More »

எண்கள் இல்லாத மொழி

அமேசான் காடுகளுக்குள் வாழும் பிரஹா என்ற ஆதிவாசி இனக்குழுவைப்பற்றிய டேனியல் எவரெட் எழுதிய புத்தகத்தை பற்றி வாசித்து கொண்டிருந்தேன். நவம்பரில் வெளியாக உள்ள புத்தகமது. பிரஹா என்ற ஆதிவாசி பற்றி அறிந்து கொள்வதற்கு தூண்டுதலாக இருந்தது இந்த புத்தக அறிமுகம்.  இன்னும் கானகத்தில் வாழ்ந்து வரும் வேட்டையாடும் ஆதி இனங்களில் ஒன்றான பிரஹா மக்களோடு தங்கி அவர்களின் வாழ்க்கை மற்றும் மொழி குறித்து எழுதப்பட்ட புத்தகமிது. ஆதிவாசிகளை பற்றிய ஆய்வுகளில் பெரும்பாலும் விசித்திரமான தகவல்கள் செய்திகள் நிரம்பியிருக்கும். …

எண்கள் இல்லாத மொழி Read More »

இரண்டு புகைப்படங்கள்

            மேலே உள்ள இரண்டு புகைப்படங்களை பாருங்கள். இரண்டுமே சாவித்திரி தான். ஒன்று திரையுலகில் நடிகையர் திலகமாக புகழ் பெற்று விளங்கிய சாவித்திரி, மற்றது தன்னுடைய மனத்துயரை தாங்கிக் கொள்ள முடியாமல் குடி, போதை மருந்து என்று சரணடைந்து உடல்மெலிந்து தன்னை தானே அழித்துக் கொண்ட சாவித்திரியின் இறுதி நாளின் புகைப்படம். இந்த இரண்டு புகைப்படங்களுக்கு இடையில் எத்தனையோ நினைவுகள் ஒளிந்திருக்கின்றன. இதை உற்று பார்க்கும் போது காலம் கருணையற்றது …

இரண்டு புகைப்படங்கள் Read More »

சித்திரப்புலி

            Experience is food for the brain – Bill Watterson தினந்தந்தி பேப்பரில் வெளியாகி வரும் கன்னித்தீவை நம்மில் அத்தனை பேரும் சில நாட்களாவது படித்திருப்போம். எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து கன்னித்தீவு வெளிவந்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக கன்னித்தீவு வாசித்தவர்கள் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகமே. ஒருவேளை இருந்தால் அவர்கள் கட்டாயம் நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள். காரணம் இத்தனை வருடங்களுக்குள் அதற்கு வரைந்த ஒவியர்கள் மாறியிருக்கிறார்கள். …

சித்திரப்புலி Read More »

நூரெம்பெர்க் விசாரணை.

      நேற்றிரவு ஹாலிவுட் கிளாசிக் படங்களில் ஒன்றான  ஜட்ஜ்மெண்ட் அட் நூரெம்பெர்க் (Judgment at Nuremberg ) திரைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். தமிழ் சினிமாவில் கோர்ட் ரூம் டிராமா எனப்படும் தனிவகை படங்கள் மிகக் குறைவே. ஆனால் நீதிமன்ற காட்சிகளும் அதன்வாதபிரதிவாதங்களுக்காகவும் பராசக்தி துவங்கி விதி முதலான பல படங்கள் வெற்றிகரமாக ஒடியிருக்கின்றன. குற்றம், தண்டனை குறித்த ஆழ்ந்த பார்வைகள் கொண்ட படங்கள் தமிழில் உருவாக்கபடவேயில்லை. புகழ்பெற்ற எழுத்தாளரான காப்காவின் விசாரணை (The Trail by Franz …

நூரெம்பெர்க் விசாரணை. Read More »

காந்தியின் கடிகாரம்

            காந்தியைப் பற்றி வாசிப்பது எப்போதுமே மனநெருக்கத்தைத் தரக்கூடியது. சில வாரங்களுக்கு முன்பு காந்தியின் கடைசி நாளைப் பற்றிய விரிவான குறிப்புகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது காந்தியின் கடிகாரம் பற்றிய ஒரு குறிப்பை வாசித்தேன், அது  Ingersoll ‘Turnip’ pocket watch, என்ற காந்தி கடிகாரம் குறித்த தேடுதலுக்கு என்னை அழைத்துச் சென்றது. இணையத்திலும் புத்தங்களிலும் தேடி வாசித்த போது காந்தியின் கடிகாரம் ஒரு சிறப்பு அடையாளம் போல மனதில் உருக் …

காந்தியின் கடிகாரம் Read More »

இரண்டு லட்சம் பார்வைகள்

        எனது இணையதளம் கடந்த ஆறுமாதங்களில் இரண்டு லட்சம் பார்வைகளை  (Two lakhs Hits)  எட்டியிருக்கிறது. இதனைச் சாத்தியப்படுத்திய இணைய வாசகர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி. என்னுடைய வலைத்தளத்தை  அறிமுகம் செய்தும், தங்களது வலைப்பக்கத்தில் இணைப்புகள் தந்தும் உள்ள வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். எனது வலைத்தளத்திற்கான தொழில்நுட்ப உதவிகள்  மற்றும் ஆலோசனை செய்து வரும் லீலைராஜன், கோபி மற்றும் ராம்கி ஆகியோருக்கும்  இந்தத் தருணத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். …

இரண்டு லட்சம் பார்வைகள் Read More »

ஒரிடத்தில் ஒரு பயில்வான்

       பத்மராஜனின் படங்கள் மீது எப்போதுமே எனக்கு விருப்பம் உண்டு. நேற்றிரவு அவர் இயக்கிய ஒரிடத்து ஒரு பயில்வான் படத்தை திரும்பப் பார்த்தேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் என்ற சுவடேயில்லை. இன்றைக்கும் மிக நெருக்கமாக உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரம் திரைப்படவிழாவில் பத்மராஜனின் திரைப்படங்களுக்கென தனியான திரையிடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அவரது முக்கியமான பத்து திரைப்படங்களை ஒரு சேரப்பார்த்தேன். மலையாள சினிமாவில் பத்மராஜன் தனித்த ஆளுமை. அவரது முக்கிய …

ஒரிடத்தில் ஒரு பயில்வான் Read More »