நாகார்ஜுனனின் வலைப்பக்கம்.
வலைப்பதிவுகளில் நான் அன்றாடம் வாசிக்கும் பதிவாக மாறியிருக்கிறது நாகார்ஜுனனின் திணை இசை சமிக்ஞை என்ற வலைப்பக்கம். நாகார்ஜுனன் எனது நல்ல நண்பர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய உலகில் கவனத்திற்குரிய விமர்சகர். கோட்பாட்டாளர். பத்திரிக்கையாளர். புனைகதையாசிரியர், பின்நவீனத்துவ சிந்தனையாளர் என்று அவரது ஆளுமை பன்முகப்பட்டது. தற்போது லண்டனில் வசிக்கிறார். அவர் சென்னையில் வசித்த நாட்களில் ஆறேழு வருடம் தினமும் சந்தித்து பேசியிருக்கிறேன். நாகார்ஜுனன் வீட்டு மாடியில் அவரோடு தங்கிக் கொண்டு பல இரவுகள் நானும் கோணங்கியும் ஏதேதோ பேசி …