admin

பள்ளித்தமிழ்.

சமீபத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். பொதுவில் ஆசிரியர்கள் யாரையும் தேடிப்போய் பார்ப்பார்கள் என்பது வியப்பானதே. அவர்களை நாம் தான் தேடிப்போய் பாரக்க வேண்டும். இவர் ஆரம்ப பள்ளியில் வேலை செய்கிறார். அவர் என்னைச் சந்திக்க வந்த நோக்கம் எப்படி மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்று எழுத்தாளர்களாகிய நாங்கள் நினைக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். மிகுந்த உற்சாகத்துடன் ஒரு நாள் முழுவதும் அவரோடு செலவிட்டேன். அன்றைய உரையாடல் முழுவதும் ஆரம்பப் பள்ளியில் …

பள்ளித்தமிழ். Read More »

எழுதத் தெரிந்த புலி

குறுங்கதை மரபு உலகெங்கும் உள்ளது. நான் விரும்பி படிக்கும் போர்ஹே குறுங்கதைகள் எழுதுவதில் கில்லாடி. காப்கா, ஹென்ரிச் ப்யூல், யாசுனரி கவாபதா, மார்க்வெஸ், கால்வினோ என்று பலரும் சிறந்த குறுங்கதைகள் எழுதியிருக்கிறார்கள். அவ்வப்போது எழுதிய சில குறுங்கதைகளை ஒன்றாக தொகுத்து வெளியிடலாம் என்று நினைக்கிறேன். இக்கதை அதில் ஒன்று ** எழுதத் தெரிந்த புலி காட்டிலிருந்து பிடிபட்டு கொண்டுவரப்பட்ட புலி ஒன்று சர்க்கஸ் கூண்டிற்குள் அடைக்கபட்டிருந்தது. கூண்டில் அடைக்கப்பட்ட மற்ற மிருகங்களைப்போல இல்லாமல் பகலும் இரவும் அந்தப்புலி  …

எழுதத் தெரிந்த புலி Read More »

துயிலும் பெண்

எனது முந்தைய பதிவில் எனக்கு பிடித்த கதை என்று The Sleeping Woman : Zakaria Tamer  இணைப்பை தந்து இதை யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் சந்தோஷம் கொள்வேன் என்று குறிப்பிட்டிருந்தேன். நண்பர் அனுஜன்யா அதை சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அவருக்கு என் நிறைந்த மகிழ்ச்சியும் நன்றியும். *** துயிலும் பெண் – ஜகரியா தமேர்  தன் தந்தை, தாய் மற்றும் மூன்று இளைய சகோதரர்கள் முன் தலை தாழ்த்தி சுவாத் அழுதாள். தான் அவமானத்தால் களங்கப்பட்டதை துடைத்திட …

துயிலும் பெண் Read More »

இந்த வாரம் படித்தவை

இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நினைவுகுறிப்புகள், விமர்சனங்கள், ஆய்வியல், உலகசினிமா  என்று வெவ்வேறு இணையதளங்களில் வாரம் ஐம்பதுக்கும் குறையாமல் வாசித்து வருகிறேன். சில படைப்புகளை வாசிக்கும்  போது அவசியம் அதை தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் தோன்றும், உடனே அதை தரவிறக்கம் செய்து வைத்து கொள்வேன். ஆனால் தொடர்ந்த எழுத்து வேலைகள், பயணங்களில் அந்த ஆசை அப்படியே கரைந்து போய்விடும். அதற்குள் இன்னொன்றை வாசித்திருப்பேன். இப்படியாக தொடரும் ஏமாற்றத்திலிருந்து விடுபட நான்  வாசித்தவற்றில் இருந்து …

இந்த வாரம் படித்தவை Read More »

புத்தகம் செல்லும் திசை

சில நாட்களுக்கு முன்பாக பழைய புத்தகக் கடை ஒன்றிற்குச் சென்றிருந்தேன். சென்னை நகரில் உள்ள பெரும்பான்மையான பழைய புத்தகக் கடைக்காரர்கள் எனது நண்பர்கள். எங்கிருந்து அவர்கள் பழைய புத்தகங்களை வாங்கி வந்தாலும் எனக்கு போன் செய்து சொல்வார்கள். ஆனால் சில மாதங்களாக பழைய புத்தகக் கடை பக்கமே போகவில்லை. திடீரென மாலையில் அந்த யோசனை தோன்றியதும்  புத்தககடைக்காரனை தேடிச் சென்றேன். குப்பை போல குவித்து போடப்பட்டிருந்த புத்தகங்களில் இருந்து ஒரு வயதானவர் தமிழ்வாணன் புத்தகமிருக்கிறதா என்று தேடிக் …

புத்தகம் செல்லும் திசை Read More »

குறும்படங்கள்

சமீபத்தில் நான் பார்த்த முக்கியமான குறும்படங்கள் இவை. குறும்படங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான உதாரணங்களாக இவற்றைச் சொல்லலாம். ஐந்து நிமிசங்களுக்குள் உருவாக்கபட்ட இந்தப் படங்கள் ஆழமான மனப்பாதிப்பை உருவாக்குகின்றன. எவ்வளவு காட்சிகள் இடம் பெற வேண்டும். எப்படி காட்சிகளை படமாக்க வேண்டும். எப்படி படத்தொகுப்பு செய்ய  வேண்டும் என்று இந்தப் படங்களில் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். குறும்படம் இயக்க நினைப்பவர்கள் இதை தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு தொடர்ந்து பார்த்து அதற்கான திரைக்கதையை ஒளிப்பதிவை …

குறும்படங்கள் Read More »

சினிமா முத்தம்.

        சட்டம் என் கையில் என்ற படம் 1978 ம் ஆண்டு வெளியானது. கமலஹாசன் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த படம். டி.என் பாலு இயக்கியிருந்தார். அப்போது நான்  பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.  சிறிய கிராமம் ஒன்றில் வசித்து கொண்டிருந்தோம். சினிமா பார்ப்பதற்கு அருகாமை நகரங்களுக்கு போய்வர வேண்டும். இதற்காகவே விடுமுறை நாட்களில் கோவில்பட்டிக்கு சென்றுவிடுவேன். அங்கே பாட்டியின் வீடு இருந்தது. இஷ்டமான நேரத்தில் சினிமாவுக்கு போய்வரலாம். சினிமாவிற்கும் இடைவேளையில் முறுக்கு வாங்கி …

சினிமா முத்தம். Read More »

ஷாஜியின் வலைப்பக்கம்.

என் நண்பரும் இசைவிமர்சகருமான ஷாஜி ஆங்கிலத்தில் தனது புதிய வலைப்பக்கத்தை துவக்கியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக உயிர்மை இதழில் அவர் எழுதி வருகின்ற மேற்கத்திய இசை மற்றும் இந்திய திரையிசை சாதனையாளர்கள் பற்றிய கட்டுரைகள் பரந்த வாசகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. ஷாஜி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர். இவரது கட்டுரைகளை ஜெயமோகன் தமிழாக்கம் செய்துவருகிறார். பல்வேறு புகழ்பெற்ற இசை நிறுவனங்களில் ஆலோசகராக , நிர்வாகியாக பணியாற்றியவர். தமிழ் திரையிசை குறித்து விரிவான அறிதலும் தனித்துவமான பார்வைகளும் கொண்டவர் ஷாஜி.  …

ஷாஜியின் வலைப்பக்கம். Read More »

ஆந்த்ரே வாஜ்தா

        The best remedy for political and social problems is to show them and to speak truly about them – Andrzej Wajda ஆந்த்ரே வாஜ்தா ( Andrzej Wajda ) போலந்தின் புகழ் பெற்ற இயக்குனர். சினிமாவை வலிமையானதொரு அரசியல் வடிவமாக மாற்றியவர். இவரது திரைப்படங்கள் போலந்தின் கடந்த கால நினைவுகளுக்குச் சாட்சியாக உள்ளன.  வாஜ்தாவின் படங்களின் வழியே தனது சொந்த அடையாளங்களை இழந்து …

ஆந்த்ரே வாஜ்தா Read More »

நினைவில் வந்த கவிதை.

ஈழத்தின் நவீன கவிஞர்களில் முக்கியமானவர் சி.சிவசேகரம். அவரது நதிக்கரை மூங்கில், செப்பனிட்ட படிமங்கள்,போரின் முகங்கள்,  மிக முக்கியமான கவிதை தொகுப்புகள். சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த சிவசேகரத்தின் கவிதை இது. இன்றுள்ள சூழலில்  வாசிக்கையில் மனது மிகுந்த துயரமும் குற்றவுணர்ச்சியும் கொள்கிறது. ** என் முகத்தில் எதைக் காண்கிறாய் என்று வினவியது போர் இடிபாடுகளை என்றான் ஒரு கிழவன் இழவு வீடுகளை என்றாள் ஒரு கிழவி குருதிக் கோலங்களை என்றான் ஒரு ஓவியன் போர்ப் பறைகளை எனச் …

நினைவில் வந்த கவிதை. Read More »