பள்ளித்தமிழ்.
சமீபத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். பொதுவில் ஆசிரியர்கள் யாரையும் தேடிப்போய் பார்ப்பார்கள் என்பது வியப்பானதே. அவர்களை நாம் தான் தேடிப்போய் பாரக்க வேண்டும். இவர் ஆரம்ப பள்ளியில் வேலை செய்கிறார். அவர் என்னைச் சந்திக்க வந்த நோக்கம் எப்படி மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்று எழுத்தாளர்களாகிய நாங்கள் நினைக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். மிகுந்த உற்சாகத்துடன் ஒரு நாள் முழுவதும் அவரோடு செலவிட்டேன். அன்றைய உரையாடல் முழுவதும் ஆரம்பப் பள்ளியில் …