கலாப்ரியா
நவீன தமிழ் கவிதையுலகின் முக்கிய கவி ஆளுமையான கலாப்ரியா தனது இளமைகால ஞாபகங்களை நினைவின் தாழ்வாரங்கள் என்று தனது வலைப்பக்கத்தில் எழுதி வருவதை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அந்திமழை இணையதளத்தில் இது தொடராக வெளியாகிறது. காலம் அப்படியே புரண்டு படுத்தது போன்ற துல்லியம் கொண்ட அற்புதமான பதிவுகள். கவித்துவமும் ,சுய எள்ளலும் ,கேலியும் கலந்த சரளமான உரைநடை. எவ்விதமான ஒளிவு மறைவுமற்று மனம் திறந்து எழுதப்பட்டிருக்கிறது.. திருநெல்வேலி பற்றி புதுமைபித்தன் எழுதியது ஒரு விதம். வண்ணதாசன் வண்ணநிலவன் …