ஒத்திகை.
நேற்று கேரளாவிலிருந்து ஜோஸ் என்ற நவீன நாடக இயக்குனர் என்னைப் பார்க்க வந்திருந்தார். எனது அரவான் நாடகத்தை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து கொள்வது தொடர்பான சந்திப்பு அது. பேச்சு தமிழ் நவீன நாடகச் சூழலைப் பற்றி திரும்பியது. வருடத்திற்கு பத்து நவீன நாடகங்கள் கூட சென்னையில் நடத்தப்படுவதில்லையே அது ஏன் என்று கேட்டார். நவீன நாடகங்கள் பெரும்பாலும் தனிநபர்களின் ஆர்வம் மற்றும் தொடர்ந்த ஈடுபாட்டின் காரணமாக மட்டுமே தமிழில் நடைபெற்று வருகின்றன. நாடகங்களை நிகழ்த்துவதில் உள்ள முக்கியப் …