admin

நடையால் வென்ற உலகம

இரண்டு வருடங்களுக்கு முன்பாக மதுரையிலிருந்து ஒசூர் சென்று கொண்டிருந்தேன். ரயில் பயணத்தில் என்னோடு வந்த நண்பர் முத்துகிருஷ்ணன் முதன்முதலாக சதீஷ்குமாரைப் பற்றி தெரிவித்தார். முத்துகிருஷ்ணன் சுற்றுச்சூழல் மற்றும் சமகால இந்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து கூர்ந்த அவதானிப்பும் எதிர்வினைகளையும் செய்து வரும் தீவிரமான இளைஞர். இவரது கட்டுரைகள் உயிர்மை, தலித் முரசு, தமிழினி உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அன்றைய பயணத்தில் படித்த புத்தகங்கள், பயணங்களில் கண்டவை, நாட்டார்தெய்வங்கள் என்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். நீங்கள் …

நடையால் வென்ற உலகம Read More »

நீலக்குடை

        ஹிந்தி திரைப்பட உலகம் கடந்த சில ஆண்டுகளுக்குள் மிகப் பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. புதிய கதை சொல்லும் முறை, புதிது புதிதான இளம் இயக்குனர்கள். மாறுபட்ட கதைகள் என்று அதன் வளர்ச்சி உலக அளவில் விரிந்துள்ளது. வழக்கமான கேளிக்கை படங்களின் வருகை ஒரு பக்கம் அதிகரித்திருந்த போதும் மறுபக்கம் மாற்றுமுயற்சிகளுக்கான வாசல் திறந்து விடப்பட்டிருக்கின்றது. குறிப்பாக பெருநகரங்களில் உருவாகியுள்ள மல்டிபிளக்ஸ் எனப்படும் சிறிய அரங்கங்களுக்கான திரைப்படங்கள் அதிகரித்துள்ளன.பெரும்பான்மை ஹிந்தி படங்களின் முக்கிய …

நீலக்குடை Read More »

கரப்பான்பூச்சிகள் காதலிப்பதில்லை.

                                               ருஷ்ய இலக்கியங்கள் அறிமுகமான அளவு தமிழில் மற்ற நாடுகளின் இலக்கியங்கள் அறிமுகமாகவில்லை. பிரெஞ்சு இலக்கியத்தின் மாபசானும் விக்டர் க்யூகோவும் எமிலிஜோலாவும் தமிழுக்கு 1950களில் அறிமுகமானார்கள். அந்த நாட்களில் ஜெர்மனிய இலக்கியத்தைப் பொறுத்தவரை அறிமுகமாகியிருந்த ஒரே பெயர் கதே. அதுவும் அவரது பாஸ்டஸ் நாடகம் மட்டுமே.நவீன ஜெர்மானிய இலக்கியம் பற்றிய அறிமுகம் மிகக் குறைவாகவே உள்ளது . நவீன தமிழ் இலக்கியத்தின் ஊடாக அறிமுகமான முக்கிய ஜெர்மானிய எழுத்தாளர் பிரான்ஸ் காப்கா …

கரப்பான்பூச்சிகள் காதலிப்பதில்லை. Read More »

தொஷிரோ மிபுனே

      ஏப்ரல் 1 மிபுனேயின் பிறந்த தினம். யார் மிபுனே என்று கேட்கிறீர்களா? பெயரைச்சொன்னால் பலருக்கும் தெரிந்திருக்காது ஆனால் அகிரா குரசேவாவின் படங்களில் சாமுராயாக நடித்தவர் என்றால் நிச்சயம் பலருக்கும் அடையாளம் தெரிந்துவிடும்.ஹாலிவுட் நடிகர்களை அறிந்துள்ள அளவு பிறமொழிகளின் நடிகர்களைக் குறித்து நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை. உலகத் திரைப்படங்களைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்த போதும் கூட படத்தின் இயக்குனர் யார் என்பதில் கொள்ளும் கவனம் யார் நடித்திருக்கிறார்கள் என்பதில் இருப்பதில்லை. ஒரு சில முகங்கள் …

தொஷிரோ மிபுனே Read More »

எறும்பின் கால்கள்

எறும்புகள் எப்போது துங்கும் என்றொரு நாள் என் பையன் என்னிடம் கேட்டான். என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இரவானதும் அது துங்கிவிடும் என்று பொய்யாக ஒரு சமாதானம் சொன்னேன். உடனே அவன், இல்லை, ராத்திரியிலும் சமையலறையில் எறும்புகள் போவதைப் பார்த்திருக்கிறேன் என்று சொன்னான்.வேறு வழியில்லாமல் எறும்புகள் எப்போது உறங்கும் என்று எனக்குத் தெரியாது என்றேன். ஏன் தெரியாது என்று திரும்பவும் கேட்டான். கவனித்ததில்லை என்று சற்றே எரிச்சலோடு சொன்னேன். உடனே அவன் ஏன் கவனித்தில்லை …

எறும்பின் கால்கள் Read More »

திரைக்கு பின்னால்

        வலைப்பக்கங்களில் சில அபூர்வமான கட்டுரைகள் வாசிக்க கிடைத்திருக்கின்றன. சமீபத்தில் எழுத்தாளர் ஆபீதீனின் வலைப்பக்கத்தில் நாகூர் படைப்பாளிகள் என்ற பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தக் கட்டுரையை வாசித்த போது இவ்வளவு நாட்களாக நான் தேடிக் கொண்டிருந்த ஒரு விஷயம் கவனத்தை ஈர்த்தது. கறுப்பு வெள்ளைப் படங்களைப் பார்க்கும் போது அது யாருடைய கதை, யார் வசனம் எழுதியிருக்கிறார்கள் என்று கவனித்துப் பார்ப்பேன். அது போலவே யார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்பதும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய …

திரைக்கு பின்னால் Read More »

எழுத்தின் அடையாளம்.

            கோவில்பட்டியிலிருந்து ஏழுகிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இடைசெவல் கிராமம். கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள சிறிய கிராமம். கரிசல் பூமி. இந்தச் சிற்றூரில் பிறந்து, ஒன்றாக வளர்ந்து, இசைக்கற்று, தமிழ் இலக்கியத்தின் மீது விருப்பம் கொண்டு எழுத்தாளர்களாகி, இருவருமே சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனும்.இப்படி ஒரே கிராமத்தைச் சேர்ந்த, ஒன்றாக வளர்ந்த இரண்டு நண்பர்கள் வேறு எந்த மொழியிலும் சாகித்ய அகாதமி …

எழுத்தின் அடையாளம். Read More »

நெட் கெல்லி

      நெட் கெல்லியை ஆஸ்திரேலியாவின் கட்டபொம்மன் என்று சொல்லலாம். வெள்ளை அதிகாரத்திற்கு எதிராகப் போராடி பிடிபட்டு தூக்கிலிடப்பட்ட அவரை ஆஸ்திரேலியா மக்கள் போராளியாகக் கொண்டாடுகிறார்கள். நெட் கெல்லி (Ned Kelly) அடைத்து வைக்கபட்ட மெல்போர்னில் உள்ள நூற்றாண்டுப் பழமையான ஹால் (Gaol) எனும் சிறைச்சாலையை ஆஸ்திரேலியா சென்றிருந்த போது பார்த்தேன். இருண்ட சிறைச்சாலை என்பதால் ஜெயில் என்பதற்கு பதிலாக ஹால் என்று குறிப்பிடுகிறது. இது குகை என்று பொருள்படும் லத்தீன் மொழியின் கொச்சை சொல்லாகும்.மெல்போர்ன் …

நெட் கெல்லி Read More »

தேவதச்சனின் கவியுலகம்

கவிதை சொற்களால் உருவாக்கபட்டிருந்த போதும் சொல்லைக் கடந்து செல்வதே அதன் முக்கியப் பணியாக இருக்கிறது. சொற்களை அது முடிந்த ஒன்றாக கருதுவதேயில்லை. மாறாக சொல்லை அதன் நேரடி அர்த்தம் சார்ந்து மட்டும் பிரயோகம் செய்யாமல் சொல்லுக்கும் பொருளுக்குமான இடைவெளியை, சாத்தியப்பாடுகளையும் எதிர்நிலைகளையும் உருவாக்க விளைகிறதுகவிஞன் கவிதையின் வழியாக உலகை ஒன்றிணைக்கவும் சிதறடிக்கவே ஒரே நேரத்தில் விரும்புகிறான். காட்சிகளையும் சப்தத்தையும் படிமங்களையும் கொண்டு உலகின் மீதான தனது வேட்டையை நிகழ்த்துகிறான். கதையாசிரியனைப் போல அவன் சம்பவங்களின் மீதும், சம்பவங்களை …

தேவதச்சனின் கவியுலகம் Read More »

பிரார்த்தனைக்கு அப்பால்.

மதுரையைச்சுற்றியுள்ள எட்டு மலைகளில் காணப்படும் சமணக் குகைகள், அழகர் கோவில், திருப்பரங்குன்றம், திருமோகூர், கூத்தியார்குண்டு, கிண்ணிமங்கலம், பெருங்காமநல்லுர், கீழக்குயில்குடி எனத் தேடித்தேடிப் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் எனது நண்பரான சேவியர் நீங்கள் அவசியம் இடைக்காட்டூரைப் பார்க்க வேண்டும், அது ஒரு கலை எழில் மிக்க தேவலாயம் என்று சொல்லி அழைத்துச் சென்றார். இடைக்காட்டூர் மதுரையிலிருந்து  25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய ஊர். வைகை ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது. மதுரையைச் சுற்றிய கிராமங்களுக்கே உரியே தனித்துவமான தேநீர் கடைகளும், சிவப்பேறிய …

பிரார்த்தனைக்கு அப்பால். Read More »