admin

நீதியின் குரல்

சாண்டியாகோ மிட்ரே தயாரித்து இயக்கிய Argentina, 1985 திரைப்படம் அர்ஜென்டினாவை ஆட்சி செய்த இராணுவ தலைமையின் மீதான நீதி மன்ற விசாரணையினை மையமாகக் கொண்டது. சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. 1975 இல் விடேலா அர்ஜென்டினா இராணுவத்தின் படைத்தளபதி ஆனார். மார்ச் 1976 இல் ராணுவம் இசபெல் பெரோனுக்கு எதிராக ஒரு சதித்திட்டத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது அதனை அடுத்து விடேலாவின் இராணுவ ஆட்சிக்குழு, தேசிய மறுசீரமைப்புச் செயல்முறை, அரசியல் கட்சிகளைத் தடைசெய்தல் மற்றும் …

நீதியின் குரல் Read More »

அரங்கு எண் 265 & 266

47 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 265 மற்றும் 266. எனது அனைத்து நூல்களும் தேசாந்திரி பதிப்பக அரங்கில் கிடைக்கும்.

புத்தக வெளியீட்டு விழா.

எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். எனது அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்த தோழர் எஸ்.ஏ.பெருமாள். இயக்குநர் ராஜ்குமார், திரு. ஆறுமுகச்சாமிக்கு அன்பும் நன்றியும் விழாவில் உரையாற்றியவர்கள் குறித்த நேரத்திற்குள் நூல் குறித்த சிறப்பான அறிமுகத்தை வழங்கினார்கள். அரங்கில் நிறைய இளைஞர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. புத்தகங்களை நேர்த்தியாகத் தயாரித்து அளித்த மணிகண்டனுக்கும். நிகழ்வைச் சிறப்பாக …

புத்தக வெளியீட்டு விழா. Read More »

துறவியின் ஈரக்காலடிகள்

சீனாவில் வசித்த ஜென் துறவிகளின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். Clouds Thick,Where abouts Unknown என்ற இந்தக் கவிதைத் தொகுப்பில் தாங் வம்சம் (618–907) துவங்கி மிங் வம்சம் (1368–1644) வரையான 750 ஆண்டுக் காலக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. துறவிகளின் ஈரக்காலடித்தடங்களைப் போன்றதே இக்கவிதைகள். வெளிப்புற தூண்டுதல்கள் துறவியின் அகத்தில் ஏற்படுத்தும் உணர்வுகளையே இக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன., மனதின் நுணுக்கங்களை முழுமையாக வார்த்தையில் வெளிப்படுத்திவிட முடியாது. ஆனால் வார்த்தைகளின் வழியே அடையாளம் காட்ட முடியும். என்கிறார் துறவி …

துறவியின் ஈரக்காலடிகள் Read More »

ஹென்றி லாசன் சிறப்புரை

டிசம்பர் 26 மாலை நடைபெறுகிற எனது புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹென்றி லாசன் குறித்து சிறப்புரை ஆற்றுகிறேன். நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். இடம் :. கவிக்கோ மன்றம். மைலாப்பூர். சென்னை நாள் :. டிசம்பர் 26 செவ்வாய்கிழமை மாலை ஆறுமணி.

அழைப்பிதழ்

டிசம்பர் 26 செவ்வாய்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டுகிறேன் ஆறு நூல்களும் சேர்ந்து சிறப்பு விலை ரூ1000 க்கு கிடைக்கும் இந்த நிகழ்வில் ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஹென்றி லாசன் குறித்த சிறப்புரை நிகழ்த்துகிறேன் கவிக்கோ மன்றத்திற்கான வழி இந்த இணைப்பில் உள்ளது https://maps.app.goo.gl/xmo1Abpy1CYMTfG56 தொடர்புக்கு அலுவலகம் : 044 -23644947 அலைபேசி : 9789825280 Desanthiripathippagam@gmail.com