admin

அன்னாவும் அரசரும்.

வரலாற்றுப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான கதைகள் ஹாலிவுட்டில் எப்போதும் வெற்றி பெற்றுள்ளன, அப்படியான ஒரு திரைப்படமே Anna and the King of Siam. 1946ல் வெளியானது சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த கலை இயக்கத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ளது. மார்க்ரெட் லாண்டன் நாவலை மையமாகக் கொண்டது. இக்கதை அமெரிக்காவில் இசைநாடகமாக நிகழ்த்தப்பட்டுப் பெரும்புகழ் பெற்றிருக்கிறது. அந்த வரவேற்பே படம் உருவாக முக்கியக் காரணம். சயாம் என்பது இன்றைய தாய்லாந்து. கதை 1862ல் நடக்கிறது. ராமா IV …

அன்னாவும் அரசரும். Read More »

வேரும் விழுதும்

எழுத்தாளர் க.சுப்ரமணியன் கோவையைச் சேர்ந்தவர். பொருளாதாரம் படித்துப் பட்டம் பெற்று டெல்லியில் மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றியவர். கலைமகள் இதழில் நிறையக் கதைகள் எழுதியிருக்கிறார் இவரது வேரும் விழும் நாவலை வாசகர் வட்டம் 1970ல் வெளியிட்டிருக்கிறது. இந்த நாவலை எட்டு ஆண்டுகள் எழுதியிருக்கிறார். எவரும் இதனை வெளியிட முன்வரவில்லை. தி. ஜானகிராமனின் நண்பராக இருந்தவர் சுப்ரமணியன். ஜானகிராமன் இதனைப் படித்துப் பாராட்டி வாசகர் வட்டம் மூலம் நாவலை வெளியிடச் செய்திருக்கிறார். இந்த ஒரே ஒரு நாவலை மட்டுமே …

வேரும் விழுதும் Read More »

ரேடியோ நாடகம்

எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை ரேடியோ நாடகமாகத் தயாரிக்கபட்டு வருகிறது. விரைவில் சென்னை வானொலியில் ஒலிபரப்பு செய்ய இருக்கிறார்கள். இந்தச் சிறுகதை ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. காந்தியை மையமாகக் கொண்ட தமிழ் சிறுகதைகளை சுனில் கிருஷ்ணன் தொகுத்துள்ளார். அதன் தலைப்புக் கதையாகவும் இடம் பெற்றுள்ளது.

சந்தோஷத்தின் பெயரால்

Wang Xuebo இயக்கிய KNIFE IN THE CLEAR WATER  2016ல் வெளியானது. ஷி ஷுகிங்கின் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். சீனாவின் வடமேற்கு நிங்சியா மாகாணத்திலுள்ள சிறிய கிராமம். அங்குள்ள விவசாயி மா ஜிஷானின் மனைவி இறந்துவிடுகிறாள். அவருக்கான இறுதி நிகழ்வில் படம் துவங்குகிறது. இறுதி ஊர்வலத்தில் மா ஜிஷான் தனியே அமைதியாக நடந்து செல்கிறார்.  தனது துயரை அவர் வெளிக்காட்டுவதில்லை. இறந்த மனைவிற்கான நாற்பதாம் நாள் சடங்கில் அவர்களின் எருதைப் பலி கொடுக்கலாம் என்று …

சந்தோஷத்தின் பெயரால் Read More »

கிதார் இசைக்கும் துறவி

விகடன் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள எனது சிறுகதை கிதார் இசைக்கும் துறவி குறித்து நிறையப் பாராட்டுகள் வந்தபடியே இருக்கின்றன. மூன்று நாட்களுக்குள் றாற்பது பேர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். கதை மிகவும் பிடித்திருப்பதாக வண்ணதாசன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். முகநூலிலும் கதை குறித்து எழுதியுள்ளார். அகரமுதல்வன் போனில் அழைத்துக் கதையைப் பாராட்டி உரையாடினார். பேராசிரியர் சரவணன் கதை குறித்து மிக விரிவான மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். இந்தக் கதை மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. கிதார் இசைக்கும் துறவி என்ற தலைப்பில் தான் …

கிதார் இசைக்கும் துறவி Read More »

மதுரையில் ராபர்டோ ரோசலினி

இத்தாலிய நியோ ரியலிச சினிமாவின் நாயகராகக் கொண்டாடப்படுகிறவர் ராபர்டோ ரோசலினி. ரோம் ஓபன் சிட்டி, பைசான். ஸ்ட்ரோம்போலி போன்ற படங்களை இயக்கியவர். இவர் இந்தியாவினைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். India, Matri Bhumi என்ற அந்த ஆவணப்படத்தில் தமிழகத்தின் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன் கோவில், அழகர் கோவில் காட்சிகள். வீதியில் யானை வருவது. காந்தி கிராமத்தின் செயல்பாடுகள். காவிரி ஆறு. ஸ்ரீரங்கம் போன்றவை மிக அழகாகப் படமாக்கபட்டுள்ளன. இன்று அந்தக் காட்சிகளைக் …

மதுரையில் ராபர்டோ ரோசலினி Read More »

கே.ஜி. ஜார்ஜின் திரைப்படங்கள்.

மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜின் நினைவைப் போற்றும் விதமாகச் சிறப்பு மலர் ஒன்றை மலையாளத்தில் கொண்டு வருகிறார்கள். அந்த மலரில் கே.ஜி.ஜார்ஜின் திரைப்படங்கள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன். நண்பர் ஷாஜி இதனை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். **