admin

நிறமுள்ள சொற்கள்

வின்சென்ட் வான்கோ குறித்து Van Gogh: Painted with Words என்ற புதிய டாகுடிராமா வெளியாகியுள்ளது. பிபிசி தயாரிப்பில் உருவான இப் படத்தில் வான்கோவாக நடித்திருப்பவர் பெனடிக்ட் கம்பெர்பாட்ச். வான்கோ எழுதிய கடிதங்களில் உள்ள வரிகளைக் கொண்டே முழுப்படமும் உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு. வான்கோ எழுதிய 903 கடிதங்களில் 650 கடிதங்கள் அவரது சகோதரர் தியோவிற்கு எழுதப்பட்டதாகும். வான்கோவின் சகோதரிகள் , ஓவியர் பால் காகின் மற்றும் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் யாவும் முறையாகத் தொகுக்கப்பட்டு The …

நிறமுள்ள சொற்கள் Read More »

உரிமை கோரப்படாத உடல்

வேலூர் லிங்கன் மிகச்சிறந்த வாசகர். தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் அவரிடம் உள்ளது போல அரிய நூல்களைக் காண்பது அரிது. வீடே பெரிய நூலகம் போலிருக்கிறது. சமீபத்தில் ஒரு நாள் அவர் “அலெக்சாண்டர் குப்ரின் எழுதிய Yama the pit நாவல் போலவே இந்தியில் ஒரு நாவல் வெளியாகியிருக்கிறது. JAGDAMBA PRASAD DIXIT எழுதிய Mortuary என்ற நாவலது. மும்பையிலுள்ள பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றியது“ என்றார். நான் ஜகதம்ப பிரசாத் தீட்சித் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை என்றேன். உடனே …

உரிமை கோரப்படாத உடல் Read More »

வூடி ஆலனின் கேலி

ரஷ்ய இலக்கியங்களைக் கேலி செய்து வூடி ஆலன் இயக்கிய திரைப்படம் Love and Death. 19 ஆம் நூற்றாண்டின் ரஷ்ய நாவல்கள் மற்றும் சோவியத் திரைப்படங்களைப் பகடி செய்து இப் படத்தை உருவாக்கியிருக்கிறார். டால்ஸ்டாய் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கியை ஆழ்ந்து படித்த ஒருவரால் தான் இது போன்ற பகடியை உருவாக்க முடியும். குறிப்பாகக் கரமசோவ் சகோதரர்கள் மற்றும் லியோ டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நாவலை இதை விடக் கேலி செய்ய முடியாது. அதிலும் நெப்போலியன் படையெடுப்பை war and …

வூடி ஆலனின் கேலி Read More »

இருண்ட நினைவுகள்

. நண்பர் ஆம்பூர் அசோகன் ஜெர்மன் மற்றும் ஆஸ்திரிய இலக்கியங்களை மிகவும் விரும்பிப் படிக்கக்கூடியவர். சமீபத்தில் அவர் எனக்கு ஒரு புத்தகத்தைப் பரிசாக அனுப்பி வைத்திருந்தார் What’s to Become of the Boy? Or, Something to Do with Books என்ற அந்தப் புத்தகம் ஜெர்மன் எழுத்தாளர் ஹென்ரிக் போலின் இளமைப்பருவம் பற்றியது. சுயசரிதையாக மட்டுமின்றி ஹிட்லரின் எழுச்சி மற்றும் நாஜிகளின் ஆதிக்கம் வளர்ந்த விதம் பற்றியும் எழுதியிருக்கிறார். 82 பக்கங்களே கொண்ட சிறிய …

இருண்ட நினைவுகள் Read More »

வரலாறு எப்போது நாவலாகிறது

The History of the Siege of Lisbon என்ற ஸரமாகோ நாவலில் பதிப்பகம் ஒன்றில் பணியாற்றும் பிழைத்திருத்துபவர் தான் திருத்தம் செய்யும் நூலில் ஒரு வரலாற்றுத் தகவல் தவறாக இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். தானே ஒரு சொல்லை மாற்றிவிடுகிறார் புத்தகம் வெளியான பிறகு அது கண்டுபிடிக்கப்படுகிறது. அவர் விசாரிக்கப்படுகிறார். ஏன் அந்தச் சொல்லை மாற்றினார் என்று அறியும் பதிப்பாசிரியர் நீ ஏன் சரியான வரலாற்றை எழுதக் கூடாது என்று கேட்கிறார். உண்மை வரலாற்றை ஆராயத் துவங்கும் ரைமுண்டோ …

வரலாறு எப்போது நாவலாகிறது Read More »

பெயரில்லாத பெண்ணும் நினைவில்லாத ஆணும்

எகிப்திய திரைப்படமான “feathers” கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் பரிசை வென்றுள்ளது. இயக்குநர் ஓமர் எல் ஜோஹைரியின் முதல் படம். படம் துவங்கிய சில நிமிஷங்களிலே மலையாள இயக்குநர் ஜி.அரவிந்தன் இயக்கிய கும்மாட்டி படம் நினைவில் வந்து போனது. அதே போன்ற கதைக்களம். ஆனால் இப்படம் மையம் கொள்ளும் பிரச்சனைகளும் சித்தரிப்புகளும் வேறுவிதமானவை. ஜோஹைரி பெரும்பாலும் தொழில்முறை அல்லாத நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அது தான் படத்தை மிகவும் யதார்த்தமாக உணரச் செய்கிறது. கமல் சாமியின் ஒளிப்பதிவு …

பெயரில்லாத பெண்ணும் நினைவில்லாத ஆணும் Read More »

மலையாளத்தில்

எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் மலையாளத்தில் வெளியாகிறது. இதனை மாத்ருபூமி பதிப்பகம் வெளியிடுகிறது

மறைமலையடிகள் நாட்குறிப்புகள்

மறைமலையடிகள் 1898 முதல் 1950 வரையில் எழுதிய நாட்குறிப்புகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். இணையத்தில் இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் நூலின் தொகுப்பாசிரியர் மறை. திருநாவுக்கரசு, மறை. தி. ஆலங்காடன். தி. தாயுமானவன். இந்த நூலை ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்திருக்கிறார் தனித்தமிழ் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகள் இளமைப்பருவம் முதல் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டிருந்திருக்கிறார். ஆங்கிலத்தில் நல்ல புலமை கொண்டவர் என்பதால் தனது நாட்குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக உள்ள இந்த நாட்குறிப்புகளிலிருந்து தேர்வு …

மறைமலையடிகள் நாட்குறிப்புகள் Read More »

குற்றவுணர்வின் மணியோசை

கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பத்து சிறுகதைகளின் தொகுப்பு புத்த மணியோசை. கதைகளைத் தேர்வு செய்து மொழியாக்கம் செய்திருக்கிறார் கே.நல்லதம்பி. எதிர் வெளியீடு இதனை வெளியிட்டுள்ளது. சமகாலக் கன்னடச்சிறுகதைகளின் போக்கையும் தனித்துவத்தையும் இத்தொகுப்பு சரியாக அறிமுகம் செய்திருக்கிறது. நேரடியாகத் தமிழில் எழுதப்பட்டது போல அத்தனை நிறைவான மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார் நல்லதம்பி. அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள் இந்தத் தொகுப்பில் பத்து கதைகளுமே சிறப்பாக உள்ளன. குறிப்பாகக் கிருஷ்ணமூர்த்தி சந்தரின் கதை, ஹெச். என் சுபதாவின் கதை, ஸ்ரீகாந்தாவின் சிறுகதை, …

குற்றவுணர்வின் மணியோசை Read More »

நமக்கான புத்தகம்

புத்தகங்களை எப்படி அறிமுகம் செய்வது என்பதைப் பற்றிய உரையாடலில் “எல்லா புத்தகங்களையும் விரிவாக அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. சில புத்தகங்களை எந்த அறிமுகமும் இன்றி அப்படியே கையில் கொடுத்துப் படிக்கச் சொல்ல வேண்டும். வேண்டுமானால் இது உங்களுக்குப் பிடிக்கக்கூடும் என்று சில வார்த்தைகள் சொல்லலாம்“ என்கிறார் ஹென்றி மில்லர் தற்செயலாகக் கையில் கிடைத்தோ, யாரோ கொடுத்தோ அறிமுகமாகும் புத்தகம் நாம் எதிர்பாராத மகிழ்ச்சியை, வியப்பை உருவாக்குவதை உணர்ந்திருக்கிறேன் இதற்காகப் புத்தக அறிமுகமே தேவையில்லையா என்றால் தேவை …

நமக்கான புத்தகம் Read More »