admin

விட்மன் கவிதைகள்

வால்ட் விட்மன் கவிதைகள் எந்தத் திரைப்படத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய இந்த ஆவணப்படம் விட்மனின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு 2019 ல் வெளியிடப்பட்டுள்ளது

கோயில் பூனைகள்

கோவைக்கிழார் என அறியப்படும் கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார் கோயில் பூனைகள். காட்டு எருமைகள் என்ற இரண்டு முக்கியமான நூல்களை எழுதியுள்ளார் சிறந்த தமிழறிஞரான கோவைக்கிழார் எண்பது நூல்களுக்கும் மேலாக எழுதியிருக்கிறார், இதில் முக்கியமானது கொங்குநாட்டின் வரலாற்றை எழுதியது. வரலாறு, இலக்கியம், மொழிபெயர்ப்பு,கல்வெட்டு, நாட்டுப்புற இலக்கியம்,கோயிற்கலை,சமயம், மானிடவியல் எனப் பல்வேறு துறைகளில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.. மெட்ராஸ் பிரசிடென்சியின் அறநிலையத்துறை ஆணையாளராகப் பணியாற்றிய போது தமிழ்நாட்டில் உள்ள முக்கியக் கோயில்களுக்கு நேரில் சென்று அக்கோயில்களின் வரலாறு, நிர்வாக முறை, …

கோயில் பூனைகள் Read More »

ஏ.கே. செட்டியாரின் காந்தி

காந்தியைப் பற்றிய திரைப்படத்தை ரிச்சர்ட் அட்டன்பரோ உருவாக்குவதற்கு முன்னதாக ஏ.கே.செட்டியார் காந்தி என்ற ஆவணப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். இதற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள். சந்திப்புகள் வியப்பூட்டக்கூடியவை. இந்த அரிய ஆவணப்படம் முழுமையாக நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் மீட்கப்பட்ட சுருங்கிய வடிவம் தற்போது கிடைத்துள்ளது. காந்தி பவுண்டேஷன் இதனை வெளியிட்டுள்ளார்கள். அண்ணல் அடிச்சுவட்டில் என காந்தி ஆவணப்படத்திற்காக ஏ.கே. செட்டியார் மேற்கொண்ட பயணத்தை ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்துள்ளார். 1937 அக்டோபர் 2. நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் கப்பலில் பயணம் …

ஏ.கே. செட்டியாரின் காந்தி Read More »

ஒரு கனவிலிருந்து மறுகனவிற்கு.

மனிதர்கள் கனவைத் துரத்திச் செல்பவர்கள். எவ்வளவு நெருக்கடியிலும் அவர்கள் கனவுகளைக் கைவிடுவதில்லை. ஒரு கனவிலிருந்து இன்னொரு கனவிற்கு மாறிவிடுவார்களே அன்றிக் கனவுகளற்ற வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதுவும் இயற்கைக்கு மிக நெருக்கமாக. தனித்து வாழுகிறவர்கள் எதையும் துணிச்சலோடு சந்திக்கக் கூடியவர்கள். இடர்களை எதிர்கொண்டு வெல்லக்கூடியவர்கள். அப்படி ஒரு மனிதனின் கதையைத் தான் துருக்கியின் சிறந்த படமான COLD OF KALANDAR விவரிக்கிறது. முஸ்தபா காரா இயக்கிய படமிது. 1980 இல் பிறந்த முஸ்தபா காரா, கும்ஹுரியேட் …

ஒரு கனவிலிருந்து மறுகனவிற்கு. Read More »

காந்தி கதைகள்

காந்தியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ்சிறுகதைகளை சுனில் கிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். பரிசல் பதிப்பகம் அதனை வெளியிட்டிருக்கிறார்கள். இத்தொகுப்பில் எனது இரண்டு கதைகள் இடம்பெற்றுள்ளன

ஏன் நாவல்கள் படிக்க வேண்டும்

நண்பர் மயன் மகேஷ் கோவையின் முக்கிய ஆளுமைகள் மற்றும் பல்துறைக் கலைஞர்கள் குறித்து தொடர்ந்து ஆவணப்படங்களை உருவாக்கி வருகிறார். சமீபத்தில் ஒவியர் ஆதிமூலம் குறித்த ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கோவை புத்தகக் கண்காட்சியில் நான் ஆற்றிய உரையைப் பதிவு செய்து அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார். நன்றி மயன் மகேஷ்.

தலையசைக்கும் மலர்

கவிஞர் க.மோகனரங்கன் நீரின் திறவுகோல் என்ற பிறமொழிக் கவிதைகளின் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். இந்நூலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மோகனரங்கனின் தேர்வும் மொழிபெயர்ப்பும் மிகச்சிறப்பாக உள்ளது. சமகால உலகக் கவிதைகள் மற்றும் இந்தியக் கவிதைகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைத் தேர்வு செய்து மொழிபெயர்த்திருக்கிறார். காட்சித்தன்மையும் நேரடியான விவரிப்பு மொழியையும் கொண்ட கவிதைகளே எனது விருப்பத் தேர்வாக இருந்தது என்கிறார் மோகனரங்கன். அப்படியில்லை. சில எளிய கவிதைகள் போலத் தோற்றம் தரும் சிக்கலான, ஆழ்ந்த கவிதைகளையும் தேர்வு செய்து மொழிபெயர்ப்புச் …

தலையசைக்கும் மலர் Read More »

ஜெயமோகன் சந்திப்பு

திங்கள்கிழமை மாலை ஜெயமோகன் தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வந்திருந்தார். அவரை வரவேற்று உரையாடினேன். ஜெயமோகனுடன் கோவை புத்தகக் கண்காட்சி நிர்வாகிகளும் உடன் வந்திருந்தார்கள். நான் தேர்வு செய்து தொகுத்துள்ள 100 சிறந்த கதைகள் புத்தகம் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றிக் கண்காட்சி நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டார். அஜிதனின் மைத்ரி நாவல் குறித்து அவரிடம் விசாரித்தேன். மாலை அமர்வில் நான் உரையாற்ற வேண்டிய நேரமானதால் ஜெயமோகனுடன் குறைவான நேரமே பேச முடிந்தது. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் பதிப்பகம் முதன்முறையாகக் கோவை …

ஜெயமோகன் சந்திப்பு Read More »

கோவை புத்தகக் கண்காட்சியில்

இரண்டு நாட்களாகக் கோவை புத்தகக் கண்காட்சியிலிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் மக்கள் கண்காட்சிக்கு வந்திருந்தார்கள். பை பையாக நூல்களை வாங்கிச் சென்றார்கள். தேசாந்திரி பதிப்பக அரங்கில் வாசகர்களைச் சந்தித்தேன். எனது புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தேன். ஜாக் லண்டனின் ஒயிட் ஃபேங் நாவலின் மொழிபெயர்ப்பை டாக்டர் சந்திரமௌலி செய்திருக்கிறார். அந்த நூலின் வெளியிட்டு விழா நடைபெற்றது. டாக்டர்  ரவி அதனை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கவிஞர். க.வை.பழனிசாமியின் கவிதையின் அந்தரங்கம் நூலினை வெளியிட்டு உரையாற்றினேன். இதில் விஜயா வேலாயுதம். …

கோவை புத்தகக் கண்காட்சியில் Read More »

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சமையற்காரர்

Kitchen Chronicles: 1001 Lunches with J.Krishnamurti என்ற புத்தகம் படித்தேன். 1970களில் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் க்ரோனென் மெய்தேடலின் காரணமாக இந்தியா வந்திருக்கிறார். அப்போது ஒரு நாள் சென்னையில் நடைபெற்ற ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவு ஒன்றைக் கேட்கிறார். அதில் மயங்கி அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தானும் பயணம் செய்து அவரது உரைகளைத் தொடர்ந்து கேட்கத் துவங்குகிறார். இந்தப் பயணம் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதையே இந்த நூல் விவரிக்கிறது. ஜே.கிருஷ்ணமூர்த்தி அமைப்போடு நெருக்கமான தொடர்பு …

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சமையற்காரர் Read More »