அனுபவம்

உண்டாட்டு

திருவண்ணாமலையில் நடைபெற்ற உண்டாட்டு நிகழ்வு இலக்கியத் திருவிழா போல நடைபெற்றது. பெங்களூர், கோவை, மதுரை,  சேலம். தஞ்சை, சென்னை, கொச்சி,  புதுச்சேரி எனப் பல்வேறு ஊர்களில் இருந்து இலக்கியவாசகர்களும், எழுத்தாளர்களும் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். பவாவின் ஏற்பாடு எப்போதும் ஆகச்சிறந்ததாகவே இருக்கும். இந்த முறை கொண்டாட்டத்தின் உச்சம். பவாவும், அவரது குடும்பமும் நண்பர்களும் இந்நிகழ்வை மறக்கமுடியாத பெரும் அனுபவமாக உருவாக்கினார்கள். காலை பத்து மணிக்குத் துவங்கி இரவு ஒன்பது வரை நிகழ்வுகள்.  வாசகர்கள் பலரும் எனது படைப்புகள் …

உண்டாட்டு Read More »

ஆசிர்வதிக்கப்பட்ட நாள்.

நேற்று என்னுடைய சொந்த ஊரான மல்லாங்கிணறு கிராமத்தில்  சாகித்ய அகாதமி விருது பெற்றதற்கான பாராட்டுவிழா நடைபெற்றது.  இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளில் இதுவே மிகச்சிறந்தது என்று சொல்வேன். எங்கள் கிராமமே ஒன்று கூடி ஒரு விழா எடுப்பது இதுவே முதன்முறை. இந்த நிகழ்விற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர்கள் அருமை நண்பரும் , சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தன்னரசு, மற்றும் அவரது சகோதரி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன். அவர்களுக்கு என் இதயம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊரின் …

ஆசிர்வதிக்கப்பட்ட நாள். Read More »

திருவல்லிகேணி

புத்தகக் கண்காட்சியில் தற்செயலாக எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் மகன் சாரங்கன் அவர்களைச் சந்தித்தேன். அவரோடு பல ஆண்டுகளுக்கு முன்பாகப் பள்ளியில் படித்த நண்பர்கள் சிலரும் உடனிருந்தார்கள். சாரங்கன் தனது தந்தையைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்து வருகிறார். விளம்பரப் படங்கள். ஆவணப்படங்கள் எடுப்பதில்  சாரங்கன் முன்னோடி கலைஞர். எந்தப் பள்ளியில் படித்தீர்கள் என்று கேட்டேன். திருவல்லிகேணி ஹிண்டு ஹைஸ்கூல் என்றார் சாரங்கன். எங்கள் பேச்சு திருவல்லிகேணியைப் பற்றித் திரும்பியது. சென்னையில் திருவல்லிகேணி மட்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து …

திருவல்லிகேணி Read More »

அரவான்

பழைய புகைப்படங்களைத் தேடிக் கொண்டிருந்த போது அதில் அரவான் நாடகநிகழ்வின் புகைப்படங்கள் கிடைத்தன. அரவான் என்ற எனது நாடகத்தைப் பத்து ஆண்டுகளுக்கும் முன்பாக கருணாபிரசாத் இயக்கி நடித்தார். கருணா பிரசாத் கூத்துப்பட்டறையில் பயின்ற மிகச்சிறந்த நடிகர். தனக்கென ஒரு நாடகக்குழுவை நடத்திவருபவர். அரவான் நாடகத்தை அவருக்காகவே எழுதினேன். ஒரு நபர் நடிக்கும் அந்த நாடகம் 50 நிமிஷங்கள் நிகழக்கூடியது. மகாபாரதத்தில் குருஷேத்திரப் போருக்கு முன்பாக அரவான் களப்பலியிடப்படுகிறான். தன் மரணத்தின் முந்திய இரவில் அரவான் எப்படியிருந்தான் என்பதே …

அரவான் Read More »

புதுவை இளவேனில்

பாண்டிச்சேரி போவது என்றாலே இளவேனிலுடன் சுற்றுவது என்று தான் அர்த்தம். எப்போது பாண்டிச்சேரி சென்றாலும் புகைப்படக்கலைஞர் இளவேனிலைச் சந்தித்துவிடுவேன். தேர்ந்த வாசகர். எழுத்தாளர்களை நேசிக்கும் ப்ரியத்துக்குரிய தம்பி. எழுத்தாளர் கிராவை தாத்தா என்றே இளவேனில் அழைக்கிறார். கிராவும் தனது சொந்தப்பேரனைப் போல தான் இளவேனிலை நடத்துகிறார். இளவேனிலுடன் பேசிக் கொண்டிருப்பது உற்சாகம் தரக்கூடியது. சமீபத்தில் அவருக்காக கிரா ஒரு நாவலை எழுதித் தந்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் அந் நாவலை வெளியிட இருக்கிறது. 96வயது வயதில் கிரா ஒரு …

புதுவை இளவேனில் Read More »

நிலாச்சோறு

கூடி உண்ணும் போது உணவிற்குத் தனிசுவை வந்துவிடுகிறது. அதுவும் நிலாவெளிச்சத்தில் அனைவரும் ஒன்று கூடி அருகமர்ந்து உண்ணுவது இன்பமானது. சிறுவயதில் பல இரவுகள் அனைவரும் ஒன்றுகூடி அமர ஆச்சி சோற்றை உருட்டி உருட்டி தருவார். அந்த உருண்டைக்கென்றே தனிருசியிருந்தது. அந்தக் காலத்தில் சித்ரா பௌணர்மி நாளில் ஆற்றின் கரைகளுக்குச் சென்று உணவருந்தும் வழக்கமிருந்தது. வண்டி போட்டுக் கொண்டு ஆற்றின் கரைதேடி போவோம். மணலில் அமர்ந்தபடியே நிலவின் வெண்ணொளியை ரசித்தபடியே சாப்பிட்ட நினைவு அடிமனதில் ஒளிர்ந்து கொண்டேதானிருக்கிறது திடீரென …

நிலாச்சோறு Read More »

ஆனந்தா ஆற்றில் இறங்காதே

கவிஞர்  ஷங்கர்ராமசுப்ரமணியன் வலைப்பக்கத்தில் வாசித்த இக்கட்டுரை மிகவும் பிடித்திருந்தது. சமகால தமிழ்கவிதையுலகில் ஷங்கர் தனித்துவமானர்.  அவரது சிறந்த கவிதைகளும் இந்த வலைப்பக்கத்திலுள்ளன. •• ஒரு நாள் புத்தர் தனது சீடன் ஆனந்தாவுடன் வனத்தைக் கடந்துகொண்டிருந்தார். அது கடுமையான கோடைக்காலம் என்பதால் புத்தருக்குத் தாகமாக இருந்தது. அவர், ஆனந்தனிடம், “கொஞ்சம் திரும்பிப் போனால், மூன்று நான்கு மைல் தூரத்தில் நாம் கடந்த ஒரு சிறு நீரோடை வரும். அதில் இந்தப் பிச்சைப் பாத்திரத்தில் நீர் மொண்டு வா. நான் மிகுந்த …

ஆனந்தா ஆற்றில் இறங்காதே Read More »

காஃப்கா சிரிக்கிறார்

இணையத்தில் இன்று காஃப்காவின் அரிய புகைப்படம் ஒன்றைக் கண்டேன். சட்டை அணியாத சிரித்த முகத்துடன் உள்ள காஃப்காவின் புகைப்படம். கடற்கரையில் எடுக்கபட்ட படம் போலுள்ளது. அருகில் அவரது நண்பன் மாக்ஸ் பிராட் இருக்கிறார். கூச்சத்துடன் கேமிராவை நோக்கியபடி இருக்கிறார் காஃப்கா. காப்காவின் பெரும்பான்மை புகைப்படங்களில் அவர் கோட் அணிந்தபடியே தீவிரமான முகத்துடன் இருப்பார். சில புகைப்படங்களில் கறுப்பு தொப்பி அணிந்திருப்பார். சிலவேளை கையில் ஒரு பையுடன் காணப்படுவார். இந்த படத்திலுள்ள காஃப்காவிடம் காணப்படுவது மெலிந்த இளைஞனின் வெட்கம். …

காஃப்கா சிரிக்கிறார் Read More »

சலூனுக்குள் புத்தகங்கள்

காலையில் தூத்துக்குடியிலிருந்து ஒருவர் தொலைபேசியில் அழைத்து நான் மில்லர்புரத்தில் சலூன் வைத்திருக்கிறேன். புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம். சலூனுக்கு வருபவர்கள் படிப்பதற்காகச் சிறிய புத்தக அலமாரி ஒன்றை வைத்திருக்கிறேன். அதில் நாற்பது ஐம்பது புத்தகங்கள் உள்ளன. நிறையப் பேர் ஆர்வமாகப் புத்தகம் எடுத்துப் படிக்கிறார்கள். இது மட்டுமின்றி யூடியூப்பிலுள்ள உங்களது இலக்கிய உரைகளை ஆடியோவாக்கி அதை ஸ்பீக்கரில் ஒலிக்கவிடுகிறேன். பலரும்  ஆர்வமாகக் கேட்கிறார்கள். இன்னும் அதிகமான புத்தகங்கள் சலூனில் வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எது போன்ற …

சலூனுக்குள் புத்தகங்கள் Read More »

விஷமாகும் காய்கனிகள்

காரைக்காலில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தேன். வழியில் வாரச் சந்தையொன்றைக் கண்டேன். காரை விட்டு இறங்கி சந்தைக்குச் சென்றேன். காலையில் பறித்து வந்த பசுமையான காய்கறிகள். பழவகைகள். மிகப்பெரிய சந்தையது. மக்கள் பைநிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு போனார்கள். புதுச்சேரி மாநிலத்தில் வாரச்சந்தைகள் முறையாக நடைபெறுகின்றன. விவசாயிகள் நேரடியாக வணிகம் செய்கிறார்கள். தமிழகத்தில் திட்டமிட்டு உழவர்சந்தை அழிக்கபட்டது. கலைஞர் ஆட்சி கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்று உழவர் சந்தை. அதன் பயன் நேரடியாக மக்களுக்குக் கிடைத்தது. …

விஷமாகும் காய்கனிகள் Read More »