அறிவிப்பு

குறும்பட வெளியீடு

என் மகன் ஹரிபிரசாத் அண்ணா பல்கலைகழகத்தில் மீடியா சயின்ஸ் நான்காம் ஆண்டு படித்து வருகிறான். எடிட்டிங்கில் மிகவும் ஆர்வம் கொண்டவன், என்.எப்.டி.சி நடத்திய படத்தொகுப்பிற்கான சான்றிதழ் படிப்பை முடித்திருக்கிறான். தற்போது ஹரி ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளான். அவனும் நண்பர்களும் இணைந்து இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளார்கள். இக்குறும்படத்தின் வெளியீட்டு விழா  ஜனவரி 3 செவ்வாய்கிழமை மா லை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவுள்ளது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் முருகதாஸ், இயக்குனர் வசந்தபாலன், திரு சமஸ் ஆகியோர் கலந்து …

குறும்பட வெளியீடு Read More »

புதிய புத்தகங்கள்

ஜனவரி 1  ஞாயிறு 2017 மாலை கவிக்கோ அரங்கில் வெளியிடப்படவுள்ள எனது புதிய புத்தகங்கள் உயிர்மை பதிப்பகம் இந்நூல்களை வெளியிடுகிறது. நாவல் சிறுகதைத் தொகுப்பு நவீன இந்திய இலக்கியக்கட்டுரைகள் உலக சினிமா கட்டுரைகள்

ஞானபீடம்

இந்த ஆண்டு ஞானபீடம் விருது  தமிழுக்குக் கிடைக்ககூடும் என்ற தகவல் ஆறுமாதமாகவே உலவியது. அசோகமித்ரன், கி.ராஜநாராயணன் என பரிந்துரைப் பட்டியலில் மூத்த எழுத்தாளர்கள் பலரிருந்தார்கள். ஆனால் நேற்று வங்கமொழிக்கு ஞானபீடம் வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. வங்கக் கவிஞர் Shankha Ghosh இந்த ஆண்டிற்கான ஞானபீடம் பெற்றிருக்கிறார். பத்மபூஷண், சாகித்யஅகாதமி, சரஸ்வதி சம்மான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளை பெற்றுள்ளவர் சங்கா கோஷ். கன்னடம் எட்டுமுறையும் வங்காளம் ஆறுமுறையும் மலையாளம் ஐந்துமுறையும் ஞானபீடம் பெற்றுள்ளது. ஆனால் ஜெயகாந்தனுக்குப் பிறகு கடந்த …

ஞானபீடம் Read More »

வாழ்த்துகள்

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள வண்ணதாசன் என்ற கல்யாணி அண்ணனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள் சிறுகதைகளுக்காக அவருக்கு விருது கிடைத்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி. எத்தனையோ அபூர்வமான கதைகளை எழுதிய வண்ணதாசனுக்கு இவ்விருது தாமதமாகவே கிடைத்துள்ளது. மார்கழி சந்தோஷத்தை தரும் மாதம். இந்த மார்கழியை அண்ணனின் விருது மேலும் அழகாக்கியுள்ளது.

மனுஷ்யபுத்திரன் கவிதைகள்

கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது சமீபத்திய கவிதைகளை மூன்று தொகுதிகளாக வெளியிடுகிறார். சமகாலப்பிரச்சனைகளைத் தொட்டுப் பேசும் அவரது கவிதைகள் நம் காலத்தின் குரலாக ஒலிக்கின்றன. இந்தக் கவிதை தொகுதிகளின் வெளியீட்டுவிழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றுகிறேன் உயிர்மை பதிப்பகம் இந்நிகழ்வை நடத்துகிறது டிசம்பர் 25  மாலை 5 : 30 இடம்: கவிக்கோ மன்றம் , ஆழ்வார்பேட்டை. சென்னை

யாவரும்

யாவரும் பதிப்பகம் சார்பில் நடைபெறவுள்ள நான்கு சிறுகதைத் தொகுப்புகளின் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் இடம்:  இக்சா மையம், எக்மோர். சென்னை நாள் 23 .12.2016 .   மாலை 6 : 30

பதின் போஸ்டர்

எனது புதிய நாவல் பதின் ஜனவரி 1 2017  அன்று வெளியாகவுள்ளது. இதற்கு வாசகர்கள் பல்வேறு போஸ்டர்களைத் தயாரித்து அனுப்பி வருகிறார்கள் மகி என்ற வாசகர் அனுப்பிய போஸ்டர்

மாயவெளிச்சம்

இன்று காலை William Trost Richards என்ற அமெரிக்க ஒவியர் வரைந்த Moonlight On Mount Lafayette என்ற வாட்டர் கலர் ஒவியத்தை இணையத்தில் கண்டேன். நிலவொளியை எவ்வளவோ ஒவியர்கள் வரைந்திருக்கிறார்கள். ரிச்சர்ட்ஸ் வரைந்துள்ள மாயவெளிச்சம் பிரமிப்பூட்டுகிறது. இரவின் தனிமையை இதை விடச் சிறப்பாக வரைந்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. கலைந்த மேகங்களுக்குள் ஒளிர்கிறது நிலா. பேரமைதி ததும்பும் நிலவெளி. வடஇந்திய ரயில் பயணம் ஒன்றில் இது போன்ற ஒரு காட்சியை நிலாவெளிச்சத்தில் கண்டிருக்கிறேன். நிமிஷ நேர …

மாயவெளிச்சம் Read More »