அறிவிப்பு

பெரம்பலூர் புத்தகத் திருவிழா

பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் நாளை (01. 02. 2016  திங்கள் கிழமை ) மாலை ஆறு மணிக்கு எனக்குப் பிடித்த புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன் புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கிலும். பாரதி புத்தகாலய அரங்கிலும், புலம் அரங்கிலும், விகடன் பதிப்பக அரங்கிலும் எனது புத்தகங்கள் கிடைக்கின்றன

புகைப்படங்கள்-2

இன்று ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற செகாவ் வாழ்கிறார் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது நன்றி புகைப்படங்கள் : பிரபு காளிதாஸ்

விழா புகைப்படங்கள்

இன்று ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற செகாவ் வாழ்கிறார் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த  அனைவருக்கும்  நன்றி அன்பிற்குரிய நண்பர்கள் ஜென்ராம், ஜி.குப்புசாமி, கமலாலயன், மாரிமுத்து, டி.லட்சுமணன் , அருணகிரி,  முத்துகிருஷ்ணன்  ஆகியோர் வருகை தந்து சிறப்பித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. நன்றி புகைப்படங்கள் : பிரபு காளிதாஸ்

உரை

உயிர்மை பதிப்பகம் சார்பில் வெளியிடப்படும் எனது செகாவ் வாழ்கிறார் புத்தக வெளியீட்டு விழாவை முன்னிட்டு 31.01.2016 ஞாயிறு காலை பத்தரை மணிக்கு நாம் ஏன் ரஷ்ய இலக்கியங்களை  வாசிக்க வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த இருக்கிறேன் இடம் : ரஷ்ய கலாச்சார மையம் கஸ்தூரிரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை. சென்னை நேரம் :காலை 10 :30 நாள் : 31.01.2016

நிகழ்ச்சிகள்

ஜனவரி 31 ஞாயிறு காலை பத்துமணிக்கு சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் எனது செகாவ் வாழ்கிறார் புத்தக வெளியீடு நடைபெற உள்ளது. உயிர்மை பதிப்பகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. •• பிப்ரவரி 1. திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு பெரம்பலூர் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் •• பிப்ரவரி 3 . புதன்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பூர் பின்னலாடை புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

அஞ்சலி

தலித் அரங்கியலை முன்னெடுத்த சிறந்த நாடக ஆளுமையும், பாடகரும், நாட்டார்கலைகள் பற்றிய ஆய்வாளருமான டாக்டர் கே.ஏ.குணசேகரன் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த மனதுயரம் அடைந்தேன். தோழர் எஸ்.ஏ.பி. அவர்களால் மேடையேற்றப்பட்டு கலை இலக்கிய இரவுகள் தோறும் கே.ஏ.ஜி பாடிய நாட்களில் இருந்தே அவருடன் பழகியிருக்கிறேன். சிறந்த மனிதர். அற்புதமான பாடகர். பாண்டிச்சேரிக்குச் செல்லும் போதெல்லாம் கே.ஏ.ஜியைச் சந்தித்து உரையாடுவது வழக்கம், பலமுறை அவரது வீட்டில் உணவளித்திருக்கிறார். உலகதமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய போது அங்கு நடந்த …

அஞ்சலி Read More »

விருது

சென்னையில் நடைபெற்ற 13-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்படமாக “புர்ரா’ தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது இயக்குனர் மோகன்குமாருக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக்கல்லூரிக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சலுகை விலை

உயிர்மை வெளியிட்டுள்ள எனது ஆறு நாவல்கள் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று வரும் பொங்கல் புத்தக கண்காட்சியில் சலுகை விலையில் கிடைக்கின்றன. உயிர்மை அரங்கு எண்  : 124, 125