அறிவிப்பு

மறைக்கப்பட்ட இந்தியா

ஜுனியர் விகடனில் தொடராக வெளிவந்த எனது இந்தியாவின் இரண்டாவது பாகம்,  மறைக்கபட்ட இந்தியா என்ற பெயரில் தனி நூலாக வெளியாகி உள்ளது, விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த நூலின் விலை ரூ 275. நவம்பரில் இந்த நூலின் அறிமுக விழா சென்னையில் நடைபெற உள்ளது •• நாளை (அக்டோபர் 7 திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு ) திண்டுக்கல் புத்தக கண்காட்சியில் காலம் தோறும் கதைகள் என்ற தலைப்பில் பேசுகிறேன் ••

இணைப்புகள்

சில அரிய திரைப்படங்களுக்கான இணைப்புகள் சந்தியா ராகம் Balumahendra’s Sandhya Raagam Part-1 https://youtu.be/RlSsmZKvADo https://youtu.be/PQnrU7vwnB0 Part-2 https://youtu.be/PQnrU7vwnB0 Part-3 https://youtu.be/oJXSjXq6DL8 Part-4 பூட்டாத பூட்டுகள் Poottatha Poottukkal https://youtu.be/dG8yQl3qDBE அவள் அப்படித்தான் Aval appadi thaan full movie https://youtu.be/jJR5Fl377vM பாரதி Bharathi (Full movie) https://youtu.be/YLXJUHOTh9U அம்பேத்கார் Dr. Babasaheb Ambedkar full movie tamil version https://youtu.be/OUST4I2EFCA Dr. Babasaheb Ambedkar Life [Excellent Rare Documentary] https://youtu.be/uRbmGJrkbYs அழியாத கோலங்கள் https://www.youtube.com/watch?feature=player_embedded&v=73lqDQEF6mQ …

இணைப்புகள் Read More »

சிந்துபாத்தின் மனைவி நாடகம்

சென்னை கேகேநகரில் உள்ள தியேட்டர் லேப் அரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கும், நாளை மாலையும் நான் எழுதிய சிந்துபாத்தின் மனைவி என்ற நாடகம் நடைபெற உள்ளது, இதனை இயக்கியிருப்பவர் ஜெயராவ், தியேட்டர் லேப் குழுவினர் இந்த நாடகநிகழ்வில் பங்கேற்கிறார்கள், நண்பர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் இடம்                Theatre lab 6, Mahaveer Complex, Munusamy Salai, K. K. Nagar .Chennai, (Near Ponicherry Guest House. ) Ph.9688858882 …

சிந்துபாத்தின் மனைவி நாடகம் Read More »

நன்றி

மதுரையில் நடைபெற்ற எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது, தொடர்ந்த மழையின் ஊடாகவும் அரங்கம் நிரம்பியிருந்தது, இந்நிகழ்வில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்கள் பவா மற்றும் ஷைலஜாவிற்கும், புத்தகங்களை அழகாக வடிவமைத்த வம்சி பதிப்பக குழுவிற்கும், தயாரிப்பில் துணை நின்றவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ள குழந்தைகளுக்கான இந்த நூல்கள் அனைத்து புத்தக கடைகள், மற்றும் கண்காட்சிகளில் கிடைக்கும் புத்தகங்களின் விலை அக்கடா …

நன்றி Read More »

புதிய நாடகம்

சிந்துபாத்தின் மனைவி என்ற எனது புதிய நாடகத்தினை தியேட்டர்  லேப் குழுவின் ஜெயராவ் வருகின்ற 14 ம் தேதி இரவு 7 மணிக்கு கே.கே.நகரில் உள்ள தியேட்டர் லேப் அரங்கில் நிகழ்த்த இருக்கிறார், அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் •• இடம்                Theatre lab 6, Mahaveer Complex, Munusamy Salai, K. K. Nagar .Chennai, (Near Ponicherry Guest House. ) Ph.9688858882 நாள் : 14.09.2013. சனிக்கிழமை, நேரம் …

புதிய நாடகம் Read More »

குழந்தைகள் புத்தகங்கள்

சிறார்களுக்காக நான் எழுதியுள்ள சிரிக்கும் வகுப்பறை, அக்கடா, எனும் இரண்டு சிறுநாவல்கள், கிறுகிறுவானம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Whirling Swirling Sky ,ஆலீஸீன் அற்புத உலகம் நூலின் புதிய பதிப்பு, என நான்கு புத்தகங்கள் மதுரையில் வெளியிடப்பட இருக்கின்றன நண்பர் பவா.செல்லதுரையின் வம்சி பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ள இந்த வெளியீட்டு விழா செப்டம்பர் 6 மாலை 6.30 மணி அளவில், மதுரை அமெரிக்கன் கல்லூரி எதிரில் உள்ள நார்த் கேட் ஹோட்டலின் அரங்கில் நடைபெற உள்ளது தோழர் …

குழந்தைகள் புத்தகங்கள் Read More »

நாடகப் புத்தகங்கள்

மதுரையில்  இன்று (31.08.2013 ) நடைபெறுவதாக இருந்த எனது இரண்டு நாடகப் புத்தகஙகளின் வெளியீட்டு விழா  தள்ளிவைக்கபட்டுவிட்டது இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கயல்கவின் பதிப்பகம் முறையான ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல் போனதால் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இரண்டு நாடகப்புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெறும் இடம், நாள் பின்னர் அறிவிக்கபடும். ••••

அழைப்பிதழ்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற உள்ள எனது நாடகப் புத்தகங்களின் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

மொசில்லா தமிழ் உலாவி

மொசில்லா பயர்பாக்ஸ்  உலாவி முழுமையாகத் தமிழில் உருவாக்கபட்டுள்ளது இதனை தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, ஆர்வம் மிக்க இளைஞர்களின் ஒத்துழைப்புடன் சாதித்துக் காட்டி அரிய சாதனை செய்துள்ளது, புதிய தமிழ் மொசில்லா பயர்பாக்ஸ் உலாவியின் வெளியீட்டுவிழா  ஆகஸ்ட் 20, செவ்வாய்கிழமை, மாலை ஆறுமணிக்கு மைலாப்பூர் சிவகாசி பெத்தாச்சி அரங்கில் நடைபெற உள்ளது, அதில் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொள்கிறேன் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

வாழ்த்துகள்

தமிழ் பேராய விருது பெற்றுள்ள தமிழ் இலக்கிய ஆளுமை கோவை ஞானி, நண்பர்கள் ஜெயமோகன், அ.முத்துலிங்கம், முனைவர் சுசிலா ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஜெயமோகனின் அறம் சமகாலத்தில் வெளியான மிகமுக்கியமான சிறுகதைத் தொகுதி, அதற்கு இவ்விருது கிடைத்திருப்பது சந்தோஷம் அளிக்கிறது. சிறந்த அயலக எழுத்தாளருக்கான விருது அ.முத்துலிங்கத்திற்கு கிடைத்திருப்பது மிகத்தகுதியான ஒன்று, நாம் பெருமையோடு கொண்டாட வேண்டிய முக்கியமான படைப்பாளி அவர். **