விருப்பமானவர்கள்
என்.விநாயக முருகன், எனக்கு பிடித்தமான கவிஞர், அவரது வலைப்பதிவுகளை விரும்பி படித்துவருகிறேன், https://nvmonline.blogspot.in/ அவரது புதிய நாவல் ராஜிவ்காந்தி சாலை வெளியாக உள்ளது என அறிந்தேன், வாசிக்க விருப்பமாக காத்திருக்கிறேன் எனக்கு விருப்பமான அவரது இரண்டு கவிதைகள் ••• கண்ணீர் அஞ்சலி என்.விநாயக முருகன் நான்கு நாட்கள் முன்பு தெருமுனை மின்சார கம்பத்தில் அவரை பார்த்தேன் கண்ணீர் அஞ்சலி எழுத்துகளுக்கு கீழே இரண்டு கண்கள் படம் யாருடையதென்று தெரியவில்லை அழுதுக்கொண்டிருந்தன கண்களுக்கு கீழே சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார். …