அறிவிப்பு

நிமித்தம் வெளியீட்டுவிழா

நண்பர்களே வருகின்ற ஞாயிறு மாலை  ஆறுமணிக்கு (05.01.2014 ) சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் எனது நாவல் நிமித்தம் வெளியிடப்பட இருக்கிறது, இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ••

வாழ்த்துகள் ஜெயமோகன்

முழு மகாபாரதத்தையும் நாவல் வடிவில் தொடர்ச்சியாகப் பத்து நூல்களாக வெளியிடும் மகத்தான முயற்சியில் நண்பர் ஜெயமோகன் இறங்கியிருக்கிறார்,  வெண்முரசு என்பது இதன் தலைப்பு, அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாக உள்ளது இது ஒரு பெரும்கனவு, அவரால் முடியும் என்றே தோன்றுகிறது, ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் எனப் பத்துவருடங்கள் தொடர்ச்சியாக அவர் மேற்கொள்ளப் போகும் எழுத்துசாதனைக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் இந்திய மொழிகளில் இது போன்ற …

வாழ்த்துகள் ஜெயமோகன் Read More »

காட்சியாகும் கதை

புத்தாண்டு தினத்தை ஒட்டி சென்னை வானொலி அலைவரிசை ஒன்றில் காட்சியாகும் கதை என்ற தலைப்பில் தமிழ் இலக்கியமும் தமிழ்சினிமாவும் பற்றி ஒரு மணி நேர உரை நிகழ்த்தியிருக்கிறேன், இது டிசம்பர் 31 இரவு பத்துமணி முதல் 11 மணி வரை ஒலிபரப்பாகும், இந்த நிகழ்ச்சி மதுரை கோவை திருச்சி நெல்லை உள்ளிட்ட எல்லா வானொலிகளிலும் ஒலிபரப்புச் செய்யப்படும் இதன் இரண்டாவது பகுதி புத்தாண்டு தினத்தன்று காலை பத்து மணி முதல் பதினோறு மணி வரை சென்னை வானொலி அலைவரிசை …

காட்சியாகும் கதை Read More »

விமர்சனக்குறிப்பு

வேல்முருகன் என்ற இளம்வாசகர் தனது முகநூலில் பதிந்துள்ள விமர்சனக்குறிப்பு ••• எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய, தஸ்தாயெவ்ஸ்கியின், “ குற்றமும் தண்டனையும்” நூலை பற்றி, உலக இலக்கியப் பேருரைகள்.. என்ற தலைப்பில் பேசிய பேச்சு சில இணைப்பு கட்டுரைகளுடன் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. நேற்று மாலை விருதுநகரில் நலம் ஹோமியோ மருத்துவமனை சென்றேன் அங்கு நோயாளிகள் காத்து இருக்கும் நேரம் பயனுள்ளதாக இருக்கும் விதத்தில் நல்ல நூல்கள் படிக்க வைக்கபட்டு இருக்கும், அப்படி நான் காத்துயிருக்கும் நேரத்தில் படித்த நூல்தான் …

விமர்சனக்குறிப்பு Read More »

வெற்றிகரமான விழா

நேற்று திருச்சியில் நடைபெற்ற எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது, அரங்கு நிரம்பிய கூட்டம், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இடம் கிடைக்காமல் நிகழ்ச்சி முழுவதும் நின்று கொண்டே கேட்டனர், வெளீயீட்டு விழாவிற்கெனக் கொண்டுவந்த புத்தகங்கள் ஒட்டுமொத்தமாக விற்று தீர்ந்து போனதோடு பலரும் பணம் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ள வரிசையில் நின்றதும் நடந்தேறியது இப்படி ஒரு உணர்ச்சிபூர்வமான பார்வையாளர்களை என் வாழ்வில் நான் கண்டதேயில்லை, புத்தகங்களை வெளியீட்டு பேசிய தேவதச்சன் அருமையான துவக்கத்தை ஏற்படுத்தினார், அறிமுகவுரையை …

வெற்றிகரமான விழா Read More »

இலக்கற்ற பயணி

இலக்கற்ற பயணி, எனது பயணக்கட்டுரைகளின் தொகுப்பு, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, பிராங்பெர்ட், பாங்காக், என சுற்றியலைந்த பல்வேறு அனுபவங்களின் பதிவு, முப்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன, உயிர்மை வெளியீடாக டிசம்பர் 8 அன்று வெளியாகிறது •••

சலுகை விலையில்

நான் நிகழ்த்திய உலக இலக்கிய பேருரைகளின் ஏழு டிவிடிகளும் இப்போது 20 % தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த டிவிடியில் எனது உரையோடு தொடர்புடைய திரைப்படத்தின் தேர்வு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் இணைக்கபட்டுள்ளது, ஒரு டிவிடி ஒன்றரை மணிநேரம் ஒடக்கூடியது, ரூ 700 மதிப்புள்ள ஏழு டிவிடிகளின் மொத்த விலை  தற்போது ரூ 560 , டிஸ்கவரி புக் பேலஸ் அறிவித்துள்ள  இந்தக் குறுகிய காலச் சலுகையை வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். உலக இலக்கியப்பேருரைகள் 1.         ஹெமிங்வேயின் “கிழவனும் …

சலுகை விலையில் Read More »

புதிய சிறுகதை தொகுதி,

காந்தியோடு பேசுவேன் எனது புதிய சிறுகதை தொகுதி, இந்த தொகுப்பின் விஷேசம் மகாத்மா காந்தி, டால்ஸ்டாய் என மகத்தான ஆளுமைகளின் வாழ்க்கையை கதைகளின் பின்புலமாக்கி எழுதியிருக்கிறேன், ஆங்கிலோ இந்தியப்பெண், உலகத்திரைப்படவிழா, இசைதட்டின் முள்ளாக மாறிய ஒருமனிதனின் வாழ்க்கை, பாம்பு பிடாரனின் மகள் என மாறுபட்ட கதைக்களன்களுடன் புதிய கதை சொல்லும் முறையில் இக்கதைகள் புனைவின் முடிவற்ற சாத்தியங்களை நோக்கி நகர்கின்றன உயிர்மை வெளியாடாக இந்த நூல் டிசம்பர் 8ல் வெளியாகிறது **

திருச்சியில்

உயிர்மை மற்றும் களம் இலக்கிய அமைப்பு இணைந்து எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழாவை திருச்சியில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் டிசம்பர் 8 ஞாயிறு காலை பத்துமணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் ஹாலில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது, இதில் கவிஞர் தேவதச்சன், எழுத்தாளர் ஷாஜி, எழுத்தாளர் எஸ்ஏபெருமாள், எழுத்தாளர் முருகேச பாண்டியன், பேச்சாளர் நந்தலாலா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள், விழாவினை நண்பர் துளசிதாசன் ஒருங்கிணைப்பு செய்கிறார். நண்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் …

திருச்சியில் Read More »