அறிவிப்பு

வம்சி புத்தக வெளியீடு

குழந்தைகளுக்காக நான் தொகுத்து வெளியான கால்முளைத்த கதைகள் நூலை மூன்றாம் வகுப்பு படிக்கும் சைதன்யா ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார், இவர் நண்பர் வினோத்தின் மகள், வினோத் இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர், ஒரு எளிய பயிற்சி போலத் துவங்கி சில மாதங்களில் முழு நூலையும் சைதன்யா மொழியாக்கம் செய்து முடித்துவிட்டார். Nothing but water என்ற அந்த நூலின் வெளியீட்டு விழா வருகின்ற 9 ம் தேதி மாலை சென்னை அண்ணா சாலை புக் பாயிண்ட் அரங்கில் …

வம்சி புத்தக வெளியீடு Read More »

ஈரோடில்

தசைச்சிதைவு நோயால் பாதிக்கபட்டுள்ள வானவன்மாதேவி மற்றும் வல்லபி இருவரும் ஆதவ் அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்பினை உருவாக்கி சிறப்பாக நடத்திவருகிறார்கள் வருகின்ற 24 ஞாயிறு காலை 9.30 மணிக்கு ஈரோடில் உள்ள செங்குந்தர் திருமண மண்பத்தில் தசைச்சிதைவு நோய்குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு தேவையுள்ளவர்களுக்கான உதவிகள் செய்தல் தொடர்பான நிகழ்ச்சி  ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்வில் நானும் எழுத்தாளர் ஷாஜியும் கலந்து கொள்ள இருக்கிறோம் நண்பர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படியாக அழைக்கிறேன் நாள் : …

ஈரோடில் Read More »

புத்தக விற்பனை

சென்னை மற்றும் வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் இலக்கிய வாசகர்கள் எனது நூல்களை எப்படி வாங்குவது என்பது பற்றிய விபரங்களை அடிக்கடி மின்னஞ்சல் மூலம் கேட்டுவருகிறார்கள், அவர்களுக்கான இணைப்பு  இவை ••• “எனது இந்தியா” புத்தகம் தற்போது 600024.com இணையத்தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் உள்ள வாசகர்கள் இணையத்தின் மூலமே “எனது இந்தியா” புத்தகத்தினை வாங்கிக்கொள்ள இயலும். எனது இந்தியா புத்தகம் வாங்க: https://600024.com/store/enathu-india எனது அனைத்து புத்தகங்களையும் வாங்க: https://600024.com/store/index.php?route=special/attribute&attribute=Author&filter=S.Ramakrishnan ••• Flipkart இணைய தளத்தில் எனது …

புத்தக விற்பனை Read More »

பயிலரங்கில்

மலேசியாவில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ் இலக்கியம் கற்றல், கற்பித்தல் சார்ந்த பயிலரங்கினை ஒருங்கிணைப்பு செய்து நடத்தினேன், இந்த நிகழ்வு டைனஸ்டி ஹோட்டலில் நடைபெற்றது, மலேசியா முழுவதுமிருந்து தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் பயிலரங்கில் கலந்து கொண்டார்கள், மலேசிய தமிழ் இலக்கிய  ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு.ராஜன் மற்றும் கல்வி அமைச்சகத்தைச் சார்ந்த உயரதிகாரியான பி.எம்.மூர்த்தி இருவரும் இந்த நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். கற்றல், கற்பித்தல் தொடர்பான உரைகள், உரையாடல்கள், எளிய பயிற்சிகள் என இரண்டு நாளும் …

பயிலரங்கில் Read More »

மலேசியப்பயணம்

மலேசியாவில் நடைபெற உள்ள இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நாளை இரவு மலேசியா புறப்பட்டு செல்கிறேன், 18ம்தேதி வரை கோலாலம்பூரில் தங்கியிருக்க உள்ளேன் தொடர்புக்கு பிஎம் மூர்த்தி 60192675337 நிகழ்ச்சி நடைபெறும் இடம், Dynasty Hotel, Jalan Ipoh. Kula Lumpur

எனது இந்தியா வெளியீடு

ஜுனியர் விகடன் இதழில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நான் எழுதிவரும் தொடரான எனது இந்தியாவின் முதல் நூறு கட்டுரைகள் ஒரு தொகுதியாக விகடன் பிரசுரத்தால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது, மிகச்சிறப்பான வடிவமைப்பு, நேர்த்தியான புகைப்படங்கள், ஆர்ட் பேப்பர் , 485 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ355. புத்தகத் தயாரிப்பில் மிகுந்த ஈடுபாடு காட்டிய விகடன் பிரசுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் இரா.சரவணன், முதன்மை வடிவமைப்பாளர் ராம்குமார், முதன்மை உதவி ஆசிரியர் அன்பழகன், மற்றும் விற்பனை பிரிவு …

எனது இந்தியா வெளியீடு Read More »

கண்டிக்கிறேன்

எழுத்தாளரும்  சமூக விமர்சகருமான நண்பர் மனுஷ்யபுத்திரன் அவர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததோடு ,அவரது எழுத்துச் செயல்பாடுகளை முடக்குவதற்காக கொலை மிரட்டல் விடுக்கும் மதவாதத் தாக்குதலை  வன்மையாகக் கண்டிக்கிறேன் சவுதி அரேபிய நாட்டில் வீட்டு வேலை செய்துவந்த  சிறுமிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதை விமர்சித்து நண்பர் மனுஷ்யபுத்திரன் எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து அவர் மீது தொடர்ந்த மிரட்டல்களை மதவாத அமைப்புகள் விடுத்துவருகின்றன, இது போன்ற கீழ்தரமான அவதூறுகள், அச்சுறுத்தல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பொறுப்பற்ற இந்தத் …

கண்டிக்கிறேன் Read More »

அமெரிக்க இதழில்

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் இலக்கியப் பத்திரிக்கை 34thparallel.  சமீபத்திய இதழில் எனது கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளது, இந்த இதழின் மின்பதிப்பு இணையத்தில் உள்ளது, ஆனால் இது விலை கொடுத்துப் பெற வேண்டிய இதழாகும், https://www.34thparallel.net/index.html

பாண்டிச்சேரியில்

நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் புதிய நாவல் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி வெளியீட்டுவிழா ஜனவரி 26ந்தேதி மாலை  5 30 மணிக்கு பாண்டிச்சேரியில் உள்ள ஜெயராம் ஓட்டலில் நடைபெற இருக்கிறது. கி.அ.சச்சிதானந்தம் தலைமையில் நடபெறவிருக்கிற நிகழ்வில் நான் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறேன் இந்த நிகழ்வில் எழுத்தாளர் தமிழவன், ந.முருகேசபாண்டியன், ழான் தெலொஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

புத்தக கண்காட்சியில்

கடந்த இரண்டுநாட்களில் புத்தக கண்காட்சியில் வாங்கிய சில முக்கியமான நூல்கள் தமிழர் உணவு /பக்தவசல பாரதி/காலச்சுவடு பதிப்பகம் பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள் /தமிழில் சா தேவதாஸ் /கருத்துபட்டறை பதிப்பகம் என் நண்பர் ஆத்மாநாம் /ஸ்டெல்லா புரூஸ் /விருட்சம் வெளியீடு சம்பத் கதைகள் /விருட்சம் வெளியீடு ஒர் இந்திய கிராமத்தின் கதை  /தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை/சந்தியா பதிப்பகம் மகாத்மாகாந்தி /வின்சென்ட் ஷீன் /வ உசி நூலகம் ஒநாய் குலச்சின்னம்/ ஜியாங் ரோங் /அதிர்வு பதிப்பகம் கோபி கிருஷ்ணன் படைப்புகள் /முழுத்தொகுதி …

புத்தக கண்காட்சியில் Read More »