மலேசியாவில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ் இலக்கியம் கற்றல், கற்பித்தல் சார்ந்த பயிலரங்கினை ஒருங்கிணைப்பு செய்து நடத்தினேன், இந்த நிகழ்வு டைனஸ்டி ஹோட்டலில் நடைபெற்றது, மலேசியா முழுவதுமிருந்து தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் பயிலரங்கில் கலந்து கொண்டார்கள்,
மலேசிய தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு.ராஜன் மற்றும் கல்வி அமைச்சகத்தைச் சார்ந்த உயரதிகாரியான பி.எம்.மூர்த்தி இருவரும் இந்த நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
கற்றல், கற்பித்தல் தொடர்பான உரைகள், உரையாடல்கள், எளிய பயிற்சிகள் என இரண்டு நாளும் சுவாரஸ்யமாக நடைபெற்ற இந்தநிகழ்வு குறித்து நம்நாடு என்ற நாளிதழில் வெளியாகி உள்ள குறிப்பு இது.
