இலக்கியம்

பறவைக் கோணம்

உயிர்மை இதழில் பறவைக்கோணம் என்ற புதிய பத்தி ஒன்றினைத் துவங்கியிருக்கிறேன், அதில் வெளியான முதற்கட்டுரையிது •• பகலின் உன்னதப்பாடல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பாமா விஜயம் படத்திலுள்ள ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என்ற பாடலைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன், எம்எஸ்வி இசையில் கண்ணதாசன் எழுதிய பாடலது, பி சுசிலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலட்சுமி ஆகிய மூவரும் பாடியிருக்கிறார்கள்,  திரைப்படத்தின் கதையோடு பாடல் எப்படிப் பொருந்திவர வேண்டும் என்பதற்கான முன்னுதாரணப் பாடலது, அழகாகப் …

பறவைக் கோணம் Read More »

சமண நடை

மதுரையில் எனது புத்தக வெளியீட்டுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது, புத்தகக் கண்காட்சியில் நிறைய புதிய வாசகர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தது சந்தோஷம் தருவதாகயிருந்தது, சனிக்கிழமை மாலை புத்தகக் கண்காட்சி அரங்கில் தேவதச்சனின் புதிய கவிதை நூலான இரண்டு சூரியன் வெளியானது, அது குறித்து நான் பதினைந்து நிமிசங்கள் பேசினேன், நவீன கவிதையின் இன்றைய சவால்களும் சாதனைகளையும் பற்றி காலையில் கவிஞர்கள் தேவதச்சன், கலாப்ரியா. சமயவேல். மூவருடனும் நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது உற்சாகமளிப்பதாகயிருந்தது. எழுத்தாளர் முத்துகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் ஒன்றிணைந்து …

சமண நடை Read More »

படித்ததும் பார்த்ததும்

What I Talk About When I Talk About Running என்ற ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகமியின் புத்தகம் அவரது ஒட்டப்பந்தய அனுபவங்களை விவரிக்கிறது, முராகமி மராத்தன் ஒட்டத்தில் ஈடுபாடு கொண்டவர், தனது மத்திய வயதில் ஒட்டப்பந்தயங்களில் ஆர்வமாகிய முராகமி அதை ஒரு விளையாட்டு என்பதை தாண்டிய ஆன்மீக அனுபவமாக விவரிக்கிறார், ஒட்டப்பந்தயத்தில் ஒருவன் அடையும் வெற்றி என்பது அவன் எவ்வளவு நிமிசங்களுக்கு ஒடி வெற்று பெறுகிறான் என்பது மட்டுமில்லை, மனிதர்களின் உடல் எவ்வளவு வேகமாக …

படித்ததும் பார்த்ததும் Read More »

கி.ரா.வுடன் ஒரு காலைப்பொழுது

நேற்று பாண்டிச்சேரியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனைச் சந்திப்பதற்காக சென்றிருந்தேன், என்னோடு வில்லியனூர் பழநி என்ற நண்பரும் வந்திருந்தார்,  பழநி உற்சாகமான வாசகர், மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் வாழ்க்கையைப் பற்றி கவிதை வடிவில் ஒரு நூலை எழுதியிருக்கிறார், கி.ராஜநாராயணன் வீடு விமானநிலையம் செல்லும் சாலையில் உள்ள லாஸ்பேட் ஏரியாவின் அரசுக் குடியிருப்பில் உள்ளது, பைக்கில் அவரது வீட்டை தேடிச் சென்று கொண்டிருந்தோம், மழைக்குப் பிந்திய சாலைகளில்  ஆங்காங்கே நீர்தேங்கியதால் வாகனநெருக்கடி அதிகமாக இருந்தது. முந்திய இரவு நல்ல மழை பெய்திருந்தது, …

கி.ரா.வுடன் ஒரு காலைப்பொழுது Read More »

கவிதையில் நுழைந்த திருடன்

திருடன் விட்டுச் சென்றிருக்கிறான் நிலவை என்னுடைய ஜன்னலில், என்ற ரியோகானின் ஜென்கவிதையை ஒவ்வொரு முறை வாசிக்கும் போது நிலவை விடத் திருடனே மிக வியப்பாக இருக்கிறான், ஜென் கவிதையுலகின் மாஸ்டர்களில் முக்கியமானவர் துறவி ரியோகான், 1758ல் ஜப்பானின் இசிகோ பகுதியில் பிறந்தவர், இளவயதிலே பௌத்த துறவியாகி அலைந்து திரிந்தவர், இவரது மூன்று கவிதைகளில் திருடன் வருகிறான், பௌத்த நீதிக்கதைகளில் வரும் திருடனைப்போலவே தான் இவனும் இருக்கிறான், இந்தக்கவிதையை ஆழ்ந்து வாசிக்கையில் யார் அந்தத் திருடன் என்ற கேள்வி …

கவிதையில் நுழைந்த திருடன் Read More »

ஜாந்திபி

அமெரிக்க மேடைநாடகமான Maxwell Anderson’s Barefoot in Athens யை வாசித்துக் கொண்டிருந்தேன், அதில் சாக்ரடீஸீன் மனைவி ஜாந்திபி (Xanthippe) அவரைப்புரிந்து கொண்ட சரியான வாழ்க்கைத்துணையாகச் சித்தரிக்கப்படுகிறாள், சாக்ரடீஸின் வாழ்க்கையைப் பற்றிய இந்த நாடகம் தொலைக்காட்சிக்கான படமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது, கிறிஸ்து பிறப்பதற்கு 469 ஆண்டுகளுக்கு முன்னால் கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் நகரத்தில் பிறந்தவர் சாக்ரடீஸ். கல்தச்சரின் மகன், போர்வீரனாக இருந்திருக்கிறார்,  தன் தத்துவங்களையும், சிந்தனைகளையும் சாக்ரடீஸ் தானே எழுதவில்லை. பிளாட்டோவின் மூலமே சாக்ரடீசின் வரலாறு உலகத்திற்கு தெரிய …

ஜாந்திபி Read More »

பத்துவயதின் பாடல்

திங்கள்கிழமை திருடன் வந்தான். செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்குப் போனான். புதன்கிழமை புத்தி வந்தது. வியாழக்கிழமை விடுதலை ஆனான். வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தான். சனிக்கிழமை சாப்பிட்டுப் படுத்தான். அப்புறம் நடந்தது யாருக்குத் தெரியும்? சிறுவயதில் கேட்ட இந்தப் பாடலை தற்செயலாக ஒரு வாரஇதழில் வாசிக்க நேர்ந்தது, படித்தவுடனே இந்தப் பாடலைப்பாடி எவ்வளவு நாட்களாகிவிட்டது என்று தோன்றியது. என் பள்ளிவயதில் இதைப் பாடிக்கொண்டே இரவில் கிறுகிறுவானம் சுற்றியிருக்கிறேன் , தலைசுற்றியதும் நண்பர்களுடன் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு அரைத்திருடன் முக்கால்திருடன், முழுத்திருடன் …

பத்துவயதின் பாடல் Read More »

தஸ்தாயெவ்ஸ்கி காமிக்ஸ்

உலகப்புகழ்பெற்ற நாவல்களை மறுவாசிப்பு செய்வதற்கு எளிதாக புதிது புதிதாக பல பதிப்புகள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன, அதிலும் புகழ்பெற்ற நாவல்களை இளம்வாசகர்கள் படிக்கும் வகையில் காமிக்ஸ் வடிவத்தில் வெளியிடுகிறார்கள், நடைபாதைக் கடை ஒன்றில் தஸ்தாயெவ்ஸ்கி காமிக்ஸ் ஒன்றை வாங்கினேன், தஸ்தாயெவ்ஸ்கியின் கதையில் பேட்மேனின் கதாபாத்திரம் இணைந்து உருவாக்கப்பட்ட விசித்திரமான காமிக்ஸ் இது R Sikoryak என்ற ஒவியர் குற்றமும் தண்டனை நாவலின் நாயகன் ரஸ்கோல்நிகோவ்வை பேட்மேன் முகமூடி அணிந்த சாசகநாயகனாக உருமாற்றி பகடி செய்வதன் வழியே இந்த காமிக்ஸை உருவாக்கியிருக்கிறார், …

தஸ்தாயெவ்ஸ்கி காமிக்ஸ் Read More »

துணையெழுத்து

எனது துணையெழுத்து புத்தகம் பற்றி விக்னேஷ் என்ற இளம் வாசகர் தனது வலைப்பதிவில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பதிவு இது, மிக உண்மையாக எழுதப்பட்டிருக்கிறது என்பதே இதன் சிறப்பு. துணையெழுத்து வெளியாகி ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, நான் எழுதிய புத்தகங்களில் அதிகம் விற்பனையானது அதுவே, ஒரு லட்சம் பிரதியைக் கடந்திருக்கும் என்று நம்புகிறேன், ஒவ்வொரு நாளும் அதற்கான வாசகர்கள் விரிந்து கொண்டேயிருக்கிறார்கள், துணையெழுத்து புத்தகத்தை ஆங்கிலத்தில் சுதா நரசிம்மாச்சாரி சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் , விரைவில் அது பிரபல …

துணையெழுத்து Read More »

கதைருசி

நல்ல சிறுகதைகளுக்குள் கிளையில் அமர்ந்திருந்த பறவை சட்டென பறந்து எழுவது போன்ற பறத்தலை காணமுடியும், அதுவரை வாசகன் தொடர்ந்து வந்த இயல்பு மாறி கதை தன் சிறகுகளை விரித்து மேலே செல்லும் உன்னதத்  தருணமது, அந்தத் தருணமே கதையின் முக்கியப் படிமமாக ஆகிவிடுகிறது, அசோகமித்ரனின் காந்தி சிறுகதையில் அது போன்ற ஒரு தருணம் வருகிறது, அத்தருணம் கதையின் அன்றாடத்தன்மையில் இருந்து மேலெழும்பி ஜிவ்வெனப் பறக்க ஆரம்பிக்கிறது, வாசகன் அதன் வழியே  வாழ்க்கை குறித்த ஒரு தரிசனத்தை அடைகிறான், …

கதைருசி Read More »