தஸ்தாயெவ்ஸ்கியின் குதிரை
எந்தச் சாவி கதவைத் திறக்கப் பயன்படுகிறதோ அதுவே கதவைப் பூட்டவும் பயன்படுகிறது என்று ஒரு யூதநீதிமொழியிருக்கிறது, நாவல்களுக்குள்ளும் அப்படித்தான் நடைபெறுகிறது எல்லா நாவலினுள்ளும் சில திறப்புகளும் சில முடிச்சுகளும் இருக்கின்றன, நாவலின் கதையை மட்டும் தொடர்ந்து செல்லும் வாசகன் பலவேளைகளில் இந்தச் சாவித்துளையை அடையாளம் கண்டுகொள்ளாமலே கடந்து போய்விடுவான், அதனால் நாவலின் முழுமையான தரிசனத்தை அவனால் அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது ஒரு நாவலின் நோக்கம் கதையைச் சொல்வது மாத்திரமில்லை, எழுத்தாளன் கதையின் வழியாக விவாதங்கள். சந்தேகங்கள் அனுமானங்கள். …