இலக்கியம்

குற்றாலத்து சிங்கன் சிங்கி.

              குற்றாலக்குறவஞ்சியை வாசிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. திரிகூட ராஜப்ப கவிராயரால் எழுதப்பட்டது. அதிலும் சாரல் அடிக்கும் நாட்களில் குற்றாலத்தில் உள்ள பூங்காவில் அமர்ந்தபடியே  குற்றாலக்குறவஞ்சி வாசித்திருக்கிறேன். கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் காலம் கரைந்து பின்னோடிவிட வசந்தவல்லி பூப்பந்தாடும் காட்சி விரியத்துவங்கிவிடும். குற்றாலத்தின் ஆதிசித்திரம் அந்தக் கவிதைகளில் பதிவாகியுள்ளது. கானகக்குறத்தி வருகிறாள். அவளது எழிலும் குரலும் அதில் வெளிப்படும் காட்டுவாழ்வின் நுட்பங்களும், மழை பெய்யும் மேகமும், அடர்ந்த விருட்சங்களும், …

குற்றாலத்து சிங்கன் சிங்கி. Read More »

சிப்பியின் வயிற்றில் முத்து

          வங்காளத்தில்  1980 ஆண்டு வெளியான jhinuker pete mukto  என்ற நாவல் சமகால இந்திய நாவல்களில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இதை எழுதியவர் போதி சத்வ மைத்ரேய. இந்த நாவல் தமிழில் சிப்பியின் வயிற்றில் முத்து என்ற பெயரில் எஸ். கிருஷ்ணமூர்த்தியால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வங்காள நாவலின் சிறப்பம்சம் இது முழுமையாக தமிழக மக்களின் வாழ்வை விவரிக்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் உள்ள பெர்னாந்தோ பிரிவு மீனவர்களின் வாழ்க்கைபாடுகளையும் அவர்களுக்குள் …

சிப்பியின் வயிற்றில் முத்து Read More »

டால்ஸ்டாயோடு நடந்தேன் 2

எல்லா அப்பாக்களும் பையன்களை விடவும் பெண்கள் மீதே அதிக அன்பும் நெருக்கமும் கொண்டிருக்கிறார்கள். அதுவும் எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. ஏதோவொரு மகள் அப்பாவின் மிகுந்த அன்பிற்கும்  பரிவிற்கும் உள்ளாகிறாள். அப்படி டால்ஸ்டாயின் அன்பிற்கு உரியவளாக இருந்தவள் மாஷா. தன்னுடைய குழந்தைகளை முத்தமிடுவதை கூட ஒரு சடங்கு போல செய்யக்கூடியவர் டால்ஸ்டாய். தாயின் வளர்ப்பில் மட்டுமே உருவானவர்கள் அவரது பிள்ளைகள். அந்த நிலையில் மாஷா ஒருத்தி மட்டும் அப்பா எழுதிக்கொண்டிருக்கும் போது அருகில் நின்று பேசுவது அவரை கொஞ்சுவது …

டால்ஸ்டாயோடு நடந்தேன் 2 Read More »

டால்ஸ்டாயோடு நடந்தேன் 1

        கடந்த ஒரு மூன்று வார காலமாகவே புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அவரது மனைவியின் நாட்குறிப்புகள். மகன் மகள்களின் நினைவுப்பதிவுகள் மற்றும் டால்ஸ்டாயின் இறுதி நாட்கள் பற்றிய அவரது உதவியாளரின் குறிப்புகள் , டால்ஸ்டாயின் கடிதங்கள் என்று நாலைந்து புத்தகங்கள் அவரது வாழ்வை விவரிக்கின்றன. 1) Leo Tolstoy`s Diaries & Letters 2) The Diaries of Sophia Tolstoy 3) …

டால்ஸ்டாயோடு நடந்தேன் 1 Read More »

கவிதையும் கோவிலும்

              புகழ் பெற்ற கவிஞர்களுக்கு சிலை வைக்கும் வழக்கம் உலகமெங்கும் உள்ளது. பல நாடுகளில் கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களது வாழ்விடங்கள் நினைவகமாக்கப்பட்டு மாதந்தோறும் சிறப்பு கூட்டங்கள், கவிதை வாசித்தல் என்று அக்கறையோடு செய்யப்படுகின்றன. இந்தியாவில் காந்திசமாதி போன்று ஒன்றிரண்டு நினைவிடங்களை தவிர மற்றவை முறையான பராமரிப்பின்றி கவனிப்பார் அற்றே கிடக்கின்றன. இதில் எழுத்தாளர்கள் கவிஞர்கள் நினைவிடங்களின் கதி எப்படியிருக்கும் என்பது உலகமறிந்த செய்தி. தமிழகத்தில் வள்ளுவர், ஔவை, …

கவிதையும் கோவிலும் Read More »

டோனி மாரிசன்

நியூயார்க்கர் இதழ் சென்ற ஆண்டு அமெரிக்காவில்கடந்தஇருபத்தைந்து வருடங்களில் வெளியான சிறந்த நாவல் எது என்று  ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி அதில் நோபல்பரிசு பெற்ற எழுத்தாளரான டோனி மாரிசனின்  Beloved நாவலைத் தேர்வு செய்தது. அப்போது இதை மறுபடியும் படிக்க வேண்டும்என்று நினைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்பாக அதைத் திரும்ப வாசிக்க நேர்ந்தது. 1987ல் வெளியான இந்த நாவலைப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை படித்திருக்கிறேன். அப்போது எனக்கு நாவலின் மையமாகப் பட்டது முக்கியப் பெண்கதாபாத்திரம் மற்றும் …

டோனி மாரிசன் Read More »

ஏழு கவிதைகள்

 கடந்த சில நாட்களில் நான் வாசித்தவற்றில் எனக்குப் பிடித்தமான கவிதைகள்.    This is a Photograph of Me –   Margaret Atwood   It was taken some time ago. At first it seems to be a smeared print: blurred lines and grey flecks blended with the paper;   then, as you scan it, you see in the left-hand corner a …

ஏழு கவிதைகள் Read More »

கரைக்க முடியாத நிழல்

பஷீர் பற்றிய ஆவணப்படம் வைக்கம் முகமது பஷீரின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு அவரைப்பற்றிய ஆவணப்படம் Basheer – The Man சென்னையில் திரையிடப்பட்டது. ஆனால் அதைக் காணும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனது நண்பர்களில் ஒருவர் தனது சேமிப்பில் இருந்த பஷீரைப்பற்றிய ஆவணப்படத்தின் பிரதியொன்றை எனக்காகத் தந்து அனுப்பினார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக எடுக்கபட்ட ஆவணப்படம் என்ற போதும் இன்றும் அதன் அழகுணர்வும் தேர்ந்த உருவாக்கமும் அதை ஒரு முன்மாதிரி படமாகவே வைத்திருக்கிறது. பஷீர் கதைகளை தமிழில் வாசிப்பதற்கும் மலையாளத்தில் …

கரைக்க முடியாத நிழல் Read More »

காமத்துக்கு ஆயிரம் உடைகள்

எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி – ஜெயமோகன் மரணம் அதுவரை வாழ்க்கைக்கு இல்லாதிருந்த ஓர் அர்த்தத்தை அளிக்கிறது என்று அல்பேர் காம்யூவின் புகழ்பெற்ற வரி ஒன்று உண்டு. பல நாவல்கள் இவ்வரியின் நீட்சியாக நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. குறிப்பிடத்தக்கவை இரண்டு. டாக்டர் சிவராம காரந்தின் அழிந்த பிறகு என்ற கன்னட நாவல் அதில் ஒன்று.[தமிழில் சித்தலிங்கையா. தேசிய புத்தக நிறுவனம் வெளியீடு] சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் இன்னொன்று. இரண்டுமே இறந்துபோன ஒருவரை நினைவுகள் மற்றும் தடையங்கள் மூலம் தேடிப்போய் …

காமத்துக்கு ஆயிரம் உடைகள் Read More »

காந்தியின் நினைவில்.

            தமிழகத்தின் பல இடங்களில் காந்தி வந்த இடம், காந்தி பேசிய மைதானம் என்று  உள்ளன. சில ரயில் நிலையங்களில்அப்படிபெயர்பலகைகளைக் கண்டிருக் கிறேன். விருதுநகர் ரயில் நிலையத்தின் வெளியே காந்தி விருதுநகருக்கு வந்த நாளின் நினைவாக ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. காந்தியை பார்த்தவர்கள், காந்திக்காக தன் அணிந்திருந்த நகைகளை கழட்டி தந்தவர்கள் என்று பலரது நினைவுகளை என் சிறுவயதில் கேட்டிருக்கிறேன். காந்தியின் கையைத் தொட்டவர்கள் கடவுளின் கையைத் தொட்டது போன்ற …

காந்தியின் நினைவில். Read More »