இலக்கியம்

தஸ்தாயெவ்ஸ்கியின் குதிரை

எந்தச் சாவி கதவைத் திறக்கப் பயன்படுகிறதோ அதுவே கதவைப் பூட்டவும் பயன்படுகிறது என்று ஒரு யூதநீதிமொழியிருக்கிறது, நாவல்களுக்குள்ளும் அப்படித்தான்  நடைபெறுகிறது எல்லா நாவலினுள்ளும் சில திறப்புகளும் சில முடிச்சுகளும் இருக்கின்றன, நாவலின் கதையை மட்டும் தொடர்ந்து செல்லும் வாசகன் பலவேளைகளில் இந்தச் சாவித்துளையை அடையாளம் கண்டுகொள்ளாமலே கடந்து போய்விடுவான்,  அதனால் நாவலின் முழுமையான தரிசனத்தை அவனால் அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது ஒரு நாவலின் நோக்கம் கதையைச் சொல்வது மாத்திரமில்லை, எழுத்தாளன் கதையின் வழியாக விவாதங்கள். சந்தேகங்கள் அனுமானங்கள். …

தஸ்தாயெவ்ஸ்கியின் குதிரை Read More »

ஷெல் சில்வர்ஸ்டைன் கவிதை

சிலவேளைகளில் நான் ஸ்பூனைத் தவறவிட்டுவிடுகிறேன் என்றான் சிறுவன் நானும் அப்படிச் செய்வதுண்டு என்றார் கிழவர் சிறுவன் முணுமுணுத்தான் டவுசரிலே மூத்திரம் பெய்துவிடுகிறேன், நானும் கூட அப்படித்தான் என்று சிரித்தார் கிழவர் நான் அடிக்கடி அழுகிறேன் என்றான் சிறுவன் நானும் அப்படியே செய்கிறேன் என்று தலையாட்டினார் கிழவர் எல்லாவற்றையும்விட மோசம் , பெரியவர்கள் என்பிரச்சனைகளைக் கண்டுகொள்வதேயில்லை என்றான் சிறுவன் சுருக்கம்விழுந்த கைகளின் இதமான அரவணைப்பை அச்சிறுவன் உணர்ந்தான் நீ சொல்வதை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது என்றார் அந்தச் சிறிய …

ஷெல் சில்வர்ஸ்டைன் கவிதை Read More »

கார்க்கியின் இசெர்கீல்

I never meet my lovers after I had left them. It would be bad to meet them – like meeting the dead – கார்க்கி மாக்சிம் கார்க்கியின் (Maxim Gorky) தாய் நாவலை விடவும் அவரது சிறுகதைகளை எனக்கு அதிகம் பிடிக்கும். கார்க்கியின் வாழ்க்கை ஆலிவர் ஸ்டுவிட் கதாபாத்திரத்தினைப் போன்றது. டிக்கன்ஸின் நாவலில் வரும் அந்த சிறுவனைப் போலவே தான் வறுமையோடு போராடியபடி இளமையில் இருந்ததாக கார்க்கியே குறிப்பிடுகிறார் …

கார்க்கியின் இசெர்கீல் Read More »

உடல்கூறு வண்ணம்

உடல்கூறு வண்ணம் பட்டினத்தார் எழுதிய பாடல், பிறப்பு முதல் இறப்பு வரையான மனிதனின் அத்தனை செயல்களும் ஒரே பாடலில் உள்ளது, உன்னதமான இந்தப் பாடல் வாழ்வின் நிலையாமையை ஒரே பாடலில் புரிய வைத்துவிடுகிறது ••• உடல்கூறு வண்ணம் பட்டினத்தார் ஒரு மடமாது ஒருவனும் ஆகி, இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி, உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணிதம் மீது கலந்து,                                                 2 பனியில் ஓர்பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்து புகுந்து, திரண்டு, …

உடல்கூறு வண்ணம் Read More »

மாங்குடி மருதனார்

சங்க காலப்புலவர்களில் சிறந்தவர் மாங்குடி மருதனார் , இவரது பிறந்த ஊரான மாங்குடி, ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில்  விருதுநகர் மாவட்ட எல்லை முடியும் இடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் உள்ளே சென்றால் இருக்கிறது மாங்குடி மருதனாரைச் சிறப்பிக்க மாங்குடியில் ஒரு நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது, அதைக் காண்பதற்காக நான்கு நாட்களுக்கு முன்பாகச் சென்றிருந்தேன். வெயிலேறிய சாலைகள், நாயோடு முயல் வேட்டைக்கு அலையும் சிறுவர்கள், இரையெடுத்த பாம்பு போல வானில் மெதுவாக நகரும் சூரியன், மேற்கில் அடிவானம் …

மாங்குடி மருதனார் Read More »

புத்தகங்களை என்ன செய்வது

To add a library to a house is to give that house a soul. Your library is your portrait. – Cicero புத்தகங்களைச் சேர்த்து வைப்பதால் ஒரு பயனுமில்லை, வீட்டில் உள்ள அலமாரி தான் அடைந்து போகிறது அதனால் படித்தவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று வீட்டோர் சொல்கிறார்கள், தூக்கி எறிய மனமில்லை, ஆனால் வைத்துக் கொள்ளவும் இடமில்லை , இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது, படிப்பது சரி …

புத்தகங்களை என்ன செய்வது Read More »

பைத்தியக்காரனின் குறிப்புகள்

பைத்தியக்காரனின் குறிப்புகள்  என்ற லூசுன் (lu xun ) கதையை வாசித்திருக்கிறீர்களா. மிக முக்கியமான சீனத்துச்சிறுகதை. போர்க்குரல் என்ற லூசுன் சிறுகதைத்தொகுப்பில் இக்கதை உள்ளது, இதைத் தமிழாக்கம் செய்திருப்பவர் கே.கணேஷ்.  உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இக்கதை கொண்டாடப்படுகிறது. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய சிறுகதை. எனக்கு லூசுனைப் பிடிக்கும், காரணம் அவரும் ஆன்டன் செகாவைப்போல ஒரு மருத்துவராக இருந்து எழுத்தாளர் ஆனவர். இருவர் கதைகளிலும் பெண்களே பிரதானமானவர்கள். ஒருவகையில் இவரைச் சீனாவின் செகாவ் என்று சொல்வேன். ஆனால் …

பைத்தியக்காரனின் குறிப்புகள் Read More »

ஜோர்பா எனும் உல்லாசி

Since we cannot change reality, let us change the eyes that see reality. -Nikos Kazantzakis ஜோர்பா தி கிரேக் (Zorba the Greek) நாவல் பற்றி முதன்முறையாகக் கவிஞர் தேவதச்சன் என்னிடம் சொன்ன போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன், அதுவரை  நிகோஸ் கசான்ஸ்சாகிஸின் (Nikos Kazantzakis.) எந்தப் படைப்பையும் நான் படித்ததில்லை, மிக முக்கியமான புத்தகம் அது என்று சொல்லி, அவசியம் படிக்க வேண்டும் எனச் சிபாரிசு செய்தார், கோவில்பட்டியில் அன்றிருந்த …

ஜோர்பா எனும் உல்லாசி Read More »

எனதருமை டால்ஸ்டாய்

ஒரு நாவலின் வெற்றியும் தோல்வியும் எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது, உலக அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் விற்பனையான நாவல்கள் இன்று இருந்த இடமே தெரியவில்லை, வெளியான காலத்தில் சில நூறு பிரதிகள் விற்ற நாவல்கள் இன்று கொண்டாடப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன, புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருக்க கூடும் அதைத் தவிர எழுத்தாளன் மேற்கொள்ளும் தந்திரங்கள் சுயபுகழ்ச்சிகள். ஊதிப்பெருக்கிய பாராட்டுகள் எதனாலும் ஒரு நாவலை வெற்றி …

எனதருமை டால்ஸ்டாய் Read More »

அவமானச் சின்னம்

When intimacy is forbidden and passion is sin, love is the most defiant crime of all.–  Nathaniel Hawthorne  புனிதர்களும் குற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதையே சரித்திரம் திரும்பத் திரும்ப நினைவூட்டுகிறது. அதிலும் பாலியல் குற்றங்களுக்கும் துறவிகளுக்குமான உறவு மிகவும் சிக்கலானது. இறைநெறியைப் பரப்புவதற்காக தங்கள் வாழ்வை ஒப்புதல் அளித்தவர்களாக  காட்டிக் கொள்ளும் மதகுருமார்கள், பலநேரங்களில் தங்களின் ரகசிய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள எல்லா வகையான கீழான குற்றங்களையும் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதே …

அவமானச் சின்னம் Read More »