இலக்கியம்

மரியோ வர்கஸ் லோசா

மரியோ வர்கஸ் லோசாவிற்கு (Mario Vargas Llosa)2010ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், விமர்சன கட்டுரைகள், நாடகங்கள், அரசியல் கட்டுரைகள் என்று விரிந்த தளத்தில் இயங்கியவர் லோசா. பெருநாட்டு எழுத்தாளரான இவர் ஒரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார் . இவரது படைப்புகள் 31 மொழிகளில் வெளியாகி உள்ளன. 74 வயதிலும் பல்கலைகழகங்களில் தொடர்ச்சியாக  இலக்கிய உரைகள் நிகழ்த்துதல், நேரடியான அரசியல் ஈடுபாடு. சமகால படைப்பாளிகளை கொண்டாடுதல்  என்று …

மரியோ வர்கஸ் லோசா Read More »

பசித்துயர்

கி.ராஜநாராயணன் தொகுத்த நாட்டார் கதைத் தொகுப்பில் பசி என்ற ஒரு கதை உள்ளது. இக்கதை மிக முக்கியமானதொரு மரபுக்கதை தீராதபசியில் உணவு தேடி அலைகிறாள் ஒரு பெண், அவளுக்கு ஏழு ஆண்பிள்ளைகள் இருந்தும் எவரும் அவளைக் கவனிக்கவில்லை, எட்டாவதாக பிறந்த மகளுடன் அவள் சாப்பிட ஏதாவது கிடைக்காதா என்று தேடுகிறாள். ஊரில் எவரும் அவளுக்கு உணவு தரவில்லை , பசியை அடக்கிக் கொள்ள குளத்து தண்ணீரையாவது குடிக்கலாம் என்று போனால் குளம் தண்ணீர் தர மறுத்து தண்ணீரைப் …

பசித்துயர் Read More »

அபத்த இலக்கியம்

இரண்டு நாட்களின் முன்பாக மெக்சிகோவில் இருந்து Carlos  Solares என்ற எழுத்தாளர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஆங்கிலத்தில் வெளியான எனது சிறுகதையான ராமசாமிகள் வம்ச சரித்திரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததுஎன்றுவியந்துபாராட்டியிருந்தார்.அத்துடன் அக்கதையை ஸ்பானிய மொழியில் வெளியிடுவதற்கான அனுமதி கேட்டிருந்தார். பெங்குவின் இந்தியா The Tenth Rasa: An Anthology of Indian Nonsenseஎன்ற தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதில் எனது ராமசாமிகள் வம்ச சரித்திரம் சிறுகதை இடம் பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் இதைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருப்பவர் லதா ராமகிருஷ்ணன் …

அபத்த இலக்கியம் Read More »

மத்தவிலாசம்

காளிதாசன், ஹர்ஷர், பாஷன் என்று தொடர்ந்து இரண்டு வாரங்களாகவே சமஸ்கிருதநாடங்களை வாசித்து வருகிறேன். நேற்று மத்தவிலாச பிரகசனம் என்ற நாடகத்தை வாசித்தேன் .இதை எழுதியது மாமல்லபுரச் சிற்பக்கலைக்குப் பெயர்பெற்ற மகேந்திரவர்ம பல்லவன். ஆயிரம் வருசங்களைத் தாண்டிய இந்த நாடகப்பிரதிகளை வாசிப்பது ஒரு தனித்த அனுபவம். இந்தியப் பண்பாட்டுச்சூழலில் நாடகம் எவ்வளவு முக்கியமான கலைவடிவமாக இருந்திருக்கிறது என்பதற்கான சாட்சியங்கள் இவை. சமஸ்கிருத நாடங்கள் இன்று அதிகம் மேடையற்றம் செய்யப்படுவதில்லை. ஆனால் புதிய மொழியாக்கங்கள் ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. தமிழிலும் முக்கியமான சில …

மத்தவிலாசம் Read More »

கதைகளைத் தின்னும் ஆடு

மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரை பற்றி எப்போது நினைக்கும் போது கூடவே தா.மணியின் நினைவும் சேர்ந்துதான் வருகிறது. ஒரு வேளை எனக்கு பஷீரை அறிமுகம் செய்து வைத்தவர் என்ற காரணமாக இருக்ககூடும். இன்னொன்று அவரைப் போல பஷீரை நேசித்தவர்கள் எவரையும் இன்று வரை நான் காணவில்லை என்பதும் காரணமாக இருக்ககூடும் தா.மணி எழுத்தாளர் அல்ல. ஆனால் எழுத்தாளர் ஆவதற்கான அத்தனை குணங்களும் அவதானிப்புகளும் அவரிடமிருந்தன. விரும்பி எழுத்தாளர் ஆகாமல் இருந்தாரோ என்னவோ. தீவிரமான இலக்கிய வாசகர். …

கதைகளைத் தின்னும் ஆடு Read More »

புத்தகம் படிப்பது எப்படி?

புத்தகம் படிப்பது என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்க படுகிறது. சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருசமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது. படிப்பதனால் என்ன பயனிருக்கிறது. இப்படி புத்தகங்கள் தொடர்பாக நூறு கேள்விகளுக்கும் மேலாகயிருக்கின்றன. இந்தக் கேள்விகளை வேறு வேறு வடிவங்களில் உலகின் எல்லா இடங்களிலும் யாரோ யாரிடமோ …

புத்தகம் படிப்பது எப்படி? Read More »

வளரும் புத்தகங்கள்

மூன்று நாட்களுக்கு முன்பு என் கனவில் இரண்டாம் வகுப்பில் நான் படித்த பாடல் ஒன்று அப்படியே வரிமாறாமல் நினைவிற்கு வந்தது. அதைப் பாடிய டீச்சர் முகமும் குரலும் கூட எனக்கு துல்லியமாக கேட்டது. விடிந்து எழுந்து உட்கார்ந்தவுடன் அந்தப் பாடலை கடகடவென கணிணியில் அடித்துவிட்டேன். நம்பவே முடியவில்லை. எத்தனை வருசங்களாகிவிட்டது. எப்படி இந்தப் பாடல் மனதில் பசுமையாக இருக்கிறது. அதைப் பாடும்போது எங்கே கை அசைக்க வேண்டும் என்பது கூட நன்றாக நினைவிருக்கிறது. மறுபடி மறுபடி அதைப் …

வளரும் புத்தகங்கள் Read More »

ஆயிரம் கொக்குகள்

டஞ்சோ எனப்படும் கொக்குகள் ஜப்பானில் மிக புகழ்பெற்றவை. இந்த கொக்குகள் ஆயிரம் வருடம் வாழக்கூடியவை  என்ற நம்பிக்கை ஜப்பானியர்களிடமிருக்கிறது. அரிதாகிவரும் இந்தக் கொக்குகளை காப்பாற்றுவதற்காக   அரசு பெரும்முயற்சி எடுத்துவருகிறது. டஞ்சோ கொக்கைக் காண்பது நீண்ட ஆயுளைத் தரக்கூடியது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். ஆன்மாவின் குறியீடாகவும், சமாதானத்தின் அடையாளம் போலவும் கொக்குகள் சித்தரிக்கபடுகின்றன. அதை ஜென் கவிதைகளில் தொடர்ந்து காணமுடிகிறது. டிராகன் போல கொக்குவும் ஒரு புனிதபிம்பமே. நம் ஊரிலும் கொக்குகள் அதிர்ஷடத்தை கொண்டு வருகின்றன என்ற  நம்பிக்கையிருக்கிறது. …

ஆயிரம் கொக்குகள் Read More »

தேவதாஸைக் காதலிப்பவர்கள்

தேவதாஸ்  இந்திய சினிமாவில் கடந்த ஐம்பது வருசங்களுக்கும் மேலாக தொடர்ந்து ஒரு அழியாத பிம்பம். காதலைப் பற்றிய எல்லா உரையாடல்களிலும் தேவதாஸை பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது. தேவதாஸ் நாவலை வாசிக்கும் வரை நானும் காதலின் உன்னத நாயகனாகவே தேவதாஸை நினைத்திருந்தேன். நாவலை வாசித்தபிறகு அந்த எண்ணம் முழுமையாக மாறிவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு வார காலம் தேவதாஸ் திரைப்படங்களாக பார்த்துக் கொண்டிருந்தேன். நாகேஸ்வரராவ் நடித்த தமிழ், தெலுங்கு தேவதாசு. பிமல்ராயின் தேவதாஸ்,  திலிப்குமார் நடித்த …

தேவதாஸைக் காதலிப்பவர்கள் Read More »

கால்பந்தாட்டம்

Football is the love of form. A spectacle that scarcely leaves a trace in the memory and does not enrich or impoverish knowledge. This is its appeal : it is exciting and empty. -Mario Vargas Llosa நேற்று உலகப்கோப்பை கால்பந்தாட்டத்தில் ஜெர்மனியின் ரசிகனாக விளையாட்டை ரசித்து கொண்டிருந்தேன். அற்புதமான போட்டியது. விளையாட்டு முடிந்த பிறகும் மனதில் பந்தை துரத்தி ஒடிக்கொண்டேயிருக்கிறார்கள். நான் தொலைக்காட்சி …

கால்பந்தாட்டம் Read More »