இலக்கியம்

பெசோவின் புத்தகம்

தற்செயலாகவே அந்த புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். பத்து பக்கங்கள் படிப்பதற்கு நான் படித்து கொண்டிருப்பது இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான எழுத்து என்பதை உணர முடிந்தது. அப்படி தான் Fernando Pessoa`s The Book of Disquiet  புத்தகத்தை கண்டுபிடித்தேன். பெசோவின் எழுத்து தனித்துவமானது. ஒருவகையில் அது காப்காவை போன்றது. வாழ்க்கையும் காப்காவின் வாழ்வையே அதிகம் ஒத்திருக்கிறது. பெசோவின் புத்தகம் அவரது மறைவிற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியிருக்கிறது. தன் வாழ்நாளில் அதிகம் கவனிக்கபடாத கவிஞராக …

பெசோவின் புத்தகம் Read More »

சம்பத்தின் இடைவெளி

பாலின்பத்தின் உச்சநிலையை பிரெஞ்சில் petit mort    என்கிறார்கள். அதன் பொருள்    mini-deaths  அதாவது நிமிச நேர மரணம். சாவு குறித்த பயத்திலிருந்தே பாலின்ப வேட்கை உருவாகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள். பாலுறவும் சாவும் ஒன்றோடு ஒன்று நேரடியாகத் தொடர்பு கொண்டது. தன்னை விருத்தி செய்து கொள்வதற்காகவே பாலின்பத்தை நாடுகிறான் மனிதன்.  அது சாவிலிருந்து தாண்டிச் செல்ல முனையும் எத்தனிப்பே.  பாலுறவின் ஈடுபாடும் சலிப்பும் சாவு குறித்த அடிமனதின் எண்ணங்களின் வழியே தான் தூண்டப்படுகிறது என்கிறார் சிக்மண்ட் பிராய்ட்.  இந்திய புராணீகத்தில் …

சம்பத்தின் இடைவெளி Read More »

நடனத்திற்குப் பிறகு

ஒரு நல்ல சிறுகதை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக டால்ஸ்டாயின் நடனத்திற்கு பிறகு (After the Ball -Leo Tolstoy ) கதையைச் சொல்லலாம். இக்கதை நூறு வருசங்களுக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. காதல் ததும்பும் இக்கதையை தனது 75 வது வயதில்  டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார். கசான் பல்கலைகழகத்தில் டால்ஸ்டாய் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ராணுவ அதிகாரி ஒருவரின் மகளை நடனவிருந்தில் கண்டார். பார்த்த நிமிசத்திலே அவள் மீது காதலாகி அவளையே சுற்றிச்சுற்றி வந்திருக்கிறார். அந்தப் பெண்ணும் அவர் …

நடனத்திற்குப் பிறகு Read More »

வெண்ணிற இரவுகள்.

தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது என்பது பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கைகுலுக்குவது போன்றது. அவனது நடுக்கமும் துயரமும் வலியும் நம்மிடம் உடனே தொற்றிக் கொண்டுவிடும்.  பின் ஏன் தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க வேண்டும்.  அதற்கொரு விசேசமான காரணமிருக்கிறது. அது தஸ்தாயெவ்ஸ்கியை படிக்கும் போது நமது அந்தரங்கம் மிக நெருக்கமாக அவர் எழுத்தின் வழியே அடையாளம் காட்டப்படுகிறது.  நமது மனதை திறந்து அதன் உள்ளே ரகசியங்கள் அவமானங்கள் என்று நாம் மூடிமூடி வைத்துள்ள அத்தனையும் மறுபரிசீலனை செய்வதற்காகவே அவரை வாசிக்க வேண்டியிருக்கிறது. நம்மில் …

வெண்ணிற இரவுகள். Read More »

மனசாட்சியின் பாலம்

  வாழ்வின் சுவாரஸ்யங்களில் ஒன்று எதிர்பாராமை. யார் யாரை எப்போது சந்தித்து கொள்வார். ஒரு மனிதன் எப்போது வாழ்வில் முன்னேறுவான். எப்போது வீழ்ச்சியடைவான். சாவு எப்படி எப்போது நேரும் என்று எதிர்பாராமையின் கிளைகளிலிருந்தே பல நாவல்கள் பிறக்கின்றன குறிப்பாக இறை நம்பிக்கைக்கு ஆழமான காரணம் எதிர்பாராமையை சந்திக்க வேண்டிய தைரியமும் நம்பிக்கையும் இல்லாததே . வாழ்வு முன்கூட்டி தீர்மானிக்கபட்ட ஒரு வரைபடம் அதிலிருந்து ஒரு துளி கூட மாற்றம் ஏற்பட்டுவிட முடியாது என்று நம்பும் ஒரு தத்துவமும் வாழ்வு …

மனசாட்சியின் பாலம் Read More »

நாரத ராமாயணம்.

புதுமைபித்தனின் நாரத ராமாயணம் மொத்தம் 46 பக்கங்களே கொண்டது. இந்நூல் வெளியாகி அறுபம் வருசங்களுக்கும் மேலாகிறது. புதுமைபித்தனின் சிறுகதைகள், இலக்கிய கட்டுரைகள் கொண்டாப்பட்ட அளவில் நாரத ராமாயணம் பெரிதாக கொண்டாடப்படவில்லை. அப்படி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று கூட பலரும் அறிந்திருக்கவில்லை. புதுமைபித்தனின் பகடி எழுத்தின் உன்னதம் இதுவே என்பேன். இது வெறுமனே ராமாயணத்தை கேலி செய்யும் ஒரு புனைவுமட்டுமில்லை. மாறாக ராமாயணத்தை முன்வைத்து புதுமைபித்தன் கலாச்சார அரசியலை விமர்சனம் செய்கிறார். இந்திய கலாச்சாரத்தில் இதிகாசங்கள் உருவாக்கி …

நாரத ராமாயணம். Read More »

சிதறி வீழ்ந்த நட்சத்திரம்.

காசியபனின் அசடு தமிழ் நாவல்களில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.  இந்த நாவல் 1978ல் வெளியானது. பதினைந்து வருசத்தின் பிறகு இதன் மறுபதிப்பு 1994ம் ஆண்டு விருட்சம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது  இப்பதிப்பிற்கு முன்னுரை எழுதியிருக்கிறார் நகுலன். காசியபன் என்ற புனைபெயர் கொண்ட குளத்து 53வது வயதில் தான் எழுத துவங்கினார். அவரது முகமது கதைகள் கணையாழில் வெளியாகி பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. முகமது என்ற ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பல்வேறு கதைகளில் தோன்றிமறைவது முன்னோடியான இலக்கிய …

சிதறி வீழ்ந்த நட்சத்திரம். Read More »

ஆங்கிலம் பிடிக்காத பூனை

ஆங்கிலம் ஒரு மொழிமட்டுமல்ல. அது காலனியாதிக்கத்தின் அடையாளம் மற்றும் காலனியாக்குவதற்கான கருவி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்த ஆங்கில மோகத்திற்கு எதிராக மிகுந்த கேலியும் விமர்சனமுமாக எழுதப்பட்ட ஜப்பானிய நாவல்  I Am a Cat.  இதை எழுதியவர் நட்சுமி சுசூகி (Natsume Sōseki). 1905 ஆண்டு ஜப்பானில் எழுதப்பட்ட இந்த நாவல் மெய்ஜி காலகட்டத்தில் மக்கள் எப்படி போலியானதொரு ஆங்கில மோகம் கொண்டிருந்தார்கள் என்பதை கேலி செய்கிறது. இதை எழுதிய நட்சுமி சுசூகி ஒரு ஆங்கிலப்பேராசிரியர் என்பது …

ஆங்கிலம் பிடிக்காத பூனை Read More »

பெருநகரப் பாணன்.

இது சென்ற ஆண்டு உயிர்மை இதழில் வெளியான கவிஞர் விக்ரமாதித்யன் பற்றிய கட்டுரை. இது தற்போது வெளியாகி உள்ள எனது வாசகபர்வம் புத்தகத்தில் உள்ளது. விளக்கு விருது பெற்றுள்ள கவிஞர் விக்ரமாதித்யன் அண்ணாச்சியை சில நாட்களுக்கு முன்பு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்தேன். கையை பிடித்து கொண்டு நெருக்கமான மனதுடன் சிரித்தார். அவரது சிரிப்பு அற்புதமானது. அவரோடு பழகிய நினைவுகள் பீறிட்டன. வாசகபர்வத்திலிருந்து இந்த அத்யாயத்தை அதற்காகவே மறுபடி இதில் வெளியிடுகிறேன்  **இந்த ஆண்டு சென்னை …

பெருநகரப் பாணன். Read More »

தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம்

தஸ்தாயெவ்ஸ்கியின் மனைவி அன்னா கிரிகோரினாவின் நினைவு குறிப்பை அடிப்படையாக கொண்ட சிறிய நாடகமிது.  இரண்டு முதன்மை பாத்திரங்களின் சந்திப்பே இந்நாடகம். இரண்டு இடையீட்டு பாத்திரங்கள் ஊடாடுகின்றன.  பீட்டர்ஸ்பர்க் நகர தனியறையொன்றில்  குழப்பமும், தண்டனை பயமும், கடன் பத்திர நிபந்தனை படி முப்பது நாட்களுக்குள் முடிக்க வேண்டிய நாவலின் கெடுவும், என பிரச்சனைகளுக்கிடையே தஸ்தாயெவ்ஸ்கி, தோல்வியுற்ற சூதாடியைப்போல நடுங்கியபடி  புகையும் சிகரெட்டுடன் தனிமையில் தன்னுடனே உரையாடிக் கொண்டிருக்கிறார். கதைகள் கற்பனையானவை மட்டும் தானா என்ற கேள்வியுடன் தஸ்தாயெவ்ஸ்கியின் காதலை சொல்கிறது …

தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம் Read More »