காற்றின் நறுமணம்.
காருகுறிச்சியார் நூற்றாண்டுவிழாவிற்காக ஆனந்தவிகடனில் வெளியான சிறப்புக் கட்டுரை •• திருமண விழாக்களுக்கு ஊர் ஊராகச் சென்று மைக்செட் போடும் வேலாயுதம் எப்போதும் போடும் முதல் ரிக்கார்ட் காருகுறிச்சியின் நாதஸ்வரம் தான். அந்த மங்கள இசையை ஒலிக்க விட்டவுடன் தான் கல்யாணவீடு ஒளிரத்துவங்கும். உண்மையில் சந்தோஷத்தின் அடையாளமாகவே நாதஸ்வரம் ஒலிக்கிறது. அந்த வாத்தியம் கரிசல் மனிதனின் அன்பைப் போல வீரியமானது. உக்கிரமானது. நாட்டுப்பசுவின் பாலுக்கெனத் தனிருசியிருப்பது போலவே காருகுறிச்சியாரின் நாதஸ்வரத்திற்கும் தனிருசி இருக்கிறது. அந்த வேலாயுதம் மைக்செட் போடும் …









