காதலின் அலைகள்

‘Little England’ (‘Mikra Anglia’) பான்டெலிஸ் வோல்காரிஸ் இயக்கி 2013ல் வெளியான கிரேக்கத் திரைப்படம் ஆண்ட்ரோஸ் தீவைச் சேர்ந்த ஓர்சா மற்றும் மோஷா என்ற இரு சகோதரிகளின் காதல் மற்றும் திருமணத்தைப் பேசுகிறது இந்தத் திரைப்படம். படமாக்கப்பட்டவிதம் மிகச்சிறப்பு. சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது பெற்றிருக்கிறது. ஒளிப்பதிவாளர் சிமோஸ் சார்கெட்ஸிஸ் ஒவ்வொரு காட்சியினையும் ஓவியம் போல உருவாக்கியிருக்கிறார். அடர் வண்ணமும் பீறிடும் ஒளியும் மாறுபட்ட கோணங்களும் வசீகரமாகவுள்ளன. நாவலை மையமாகக் கொண்ட திரைப்படம் என்பதால் படம் இருபது ஆண்டுக் …

காதலின் அலைகள் Read More »

நூலக மனிதர்கள் 5 கதையின் முடிவு

ஒரு நாவலுக்குள் ஆயிரம் பிரச்சனைகள். கஷ்டங்கள், தோல்விகள் வரலாம் ஆனால் கதையின் முடிவு எப்போதும் சுபமாக இருக்க வேண்டும் என்ற ஆழமான நம்பிக்கை வாசகர்கள் மனதில் இருக்கிறது. காரணம் சிறுவயது முதல் கேட்டு வளர்ந்த எல்லாக் கதைகளின் முடிவும் சுபமானதே.  அரக்கனால் தூக்கிச் செல்லப்பட்ட இளவரசியை ஏழு கடல் ஏழு மலை தாண்டி எப்படியாவது இளவரசன் போராடி வெற்றிபெற்றுவிடுவான். எவ்வளவு மோசமான அழிவு கொலை தீமை செய்யும் ஆட்களாக இருந்தாலும் காமிக்ஸ் கதைகளின் நாயகன் முடிவில் அவர்களை …

நூலக மனிதர்கள் 5 கதையின் முடிவு Read More »

நூலக மனிதர்கள் 4 புத்தகத் திருடன்

“உனக்கு அறிவில்லையா.. நீ எல்லாம் ஏன்யா லைப்ரரிக்கு வர்றே“ என்று நூலகர் சப்தமாகக் கேட்டபோது அங்கிருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தோம். நூலகர் கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தார். அவர் முன்னால் முப்பது வயது ஆள்  ஒருவன் தலைகவிழ்ந்து நின்று கொண்டிருந்தான். அவனைச் சுற்றி நூலகப் பணியாளர்கள் நின்றிருந்தார்கள். “இந்த ஆளை போலீஸ்ல ஒப்படைச்சிர வேண்டியது தான்“ என்று நூலகர் கோபமான குரலில் சொன்னார் படித்துக் கொண்டிருந்த எல்லோரும் நூலகரின் மேஜையை ஒட்டித் திரண்டு நின்றோம். தலைகவிழ்ந்து நின்ற ஆள் …

நூலக மனிதர்கள் 4 புத்தகத் திருடன் Read More »

பதவிக்குப் பின்னால்.

‘கே பிளான்’ எனப்படும் “காமராஜர் திட்டம்”இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமானது. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது நேரு பிரதமராகப் பதவி வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியினுள் நிறையப் பதவிச் சண்டைகள். போட்டிகள் உருவாகின. இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்களும் நீண்ட காலம் பதவி வகிக்கின்றவர்களும், ஆட்சிப் பணியை விட்டு விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற் திட்டத்தைக் காமராஜர் முன்மொழிந்தார். இந்தத் திட்டம் பெரிதாக வெற்றிபெறவில்லை. ஆனால் இது பற்றி இன்று வரை …

பதவிக்குப் பின்னால். Read More »

நூலக மனிதர்கள் 3 லா.ச.ராவின் வாசகி.

லா.ச.ராவின் அபிதா இருக்கிறதா என்று அவர் நூலகரிடம் கேட்டபோது நான் திரும்பிப் பார்த்தேன். பொதுவாக நூலகரிடம் லா.ச.ராவின் புத்தகங்களைக் கேட்பவர்கள் அரிது. பெரும்பாலும் பொன்னியின் செல்வன். சிவகாமியின் சபதம் கடற்புறாவைத் தேடுபவர்கள் தான் அதிகம். ஆனால் அந்த மனிதர் லா.ச.ராமாமிருதம் எழுதிய அபிதா புத்தகத்தைக் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. நான் தான் அந்தப் புத்தகத்தை இரவல் எடுத்துப் போயிருந்தேன். ஆகவே நூலகர் என்னைச் சுட்டிக்காட்டி அவர் இன்னமும் திருப்பித் தரலை என்று சொன்னார். உடனே அந்த மனிதர் …

நூலக மனிதர்கள் 3 லா.ச.ராவின் வாசகி. Read More »

டோமிரிஸின் கோபம்.

“The Legend of Tomiris” ஸ்டெப்பிப் பழங்குடிக்குள் உள்ள பகை மற்றும் பழிவாங்குதலைப் பேசும் படம். தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் மகளின் கதை என்பது சினிமாவில் மிகப்பழையது. ஆனால் படமாக்கப்பட்ட முறை மிகச்சிறப்பாக உள்ளது. குறிப்பாகச் சண்டைக்காட்சிகளை மிக நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் காசன் கைடிராலியே மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டோமிரிஸ் அரசியின் கதையைத் தான் படம் விவரிக்கிறது. கிமு 484-425க்கு இடையில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸின் வரலாற்றுப் …

டோமிரிஸின் கோபம். Read More »

நூலக மனிதர்கள் 2 தந்தையின் நிழலில்

விருதுநகர் பொது நூலகத்தில் அவர்கள் இருவரையும் பார்த்திருக்கிறேன். அந்தச் சிறுவனுக்கு பத்து பனிரெண்டு வயதிருக்கும். அவனது கையைப் பிடித்துக் கொண்டு அவனது அப்பா நூலகத்திற்கு அழைத்துக் கொண்டு வருவார். ஒரு முறை கூட அப்பா தனியே நூலகத்திற்கு வந்ததாக நினைவேயில்லை. பெரும்பாலும் சனிக்கிழமை காலையிலும் ஞாயிறு மாலையிலும் அவர்கள் நூலகத்திற்கு வருவார்கள். அப்பா நூலகத்தின் நீண்ட அடுக்குகளுக்குள் அந்த பையனை அழைத்துக் கொண்டு போய் மெல்லிய குரலில் புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசிக் கொண்டிருப்பார். அந்த …

நூலக மனிதர்கள் 2 தந்தையின் நிழலில் Read More »

நூலக மனிதர்கள் 1 படிப்பதற்குப் பரிசு

நூலகங்களுடன் எனக்குள்ள தொடர்பு நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. சின்னஞ்சிறிய மல்லாங்கிணர் கிராமப்புற நூலகத்தில் துவங்கி உலகின் மிகப் பெரிய நூலகங்கள் வரை தொடர்பு கொண்டிருப்பவன் என்ற முறையில் நூலகங்கள் தான் எனது உலகம். நான் நூலகத்திலிருந்து உருவாகி வந்தவன் . புத்தக அடுக்குகள் தரும் ஈர்ப்பினை வேறு எதுவும் தருவதில்லை. சிறுவயதில் கிராம நூலகத்திற்குச் செல்லும் போது அங்கேயே உட்கார்ந்து படிக்க வேண்டும் என்பார்கள். படிப்பதற்கு ஏற்ற இருக்கைகள் இருக்காது. அதை விடவும் அடுத்தவர் முன்னால் உட்கார்ந்து …

நூலக மனிதர்கள் 1 படிப்பதற்குப் பரிசு Read More »

ஐம்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

இந்த ஆண்டு நோபல் பரிசு பரிந்துரைப் பட்டியலிலிருந்த எழுத்தாளர்களில் எவரது புத்தகமாவது தமிழில் வந்திருக்கிறதா எனப் பார்த்தேன். ஒன்று கூட வெளியாகவில்லை. கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் பேசப்பட்ட கவிதை, நாவல். சிறுகதை கட்டுரை தொகுப்புகள் ஏதாவது தமிழில் வந்திருக்கிறதா என்று யோசித்தாலும் ஒன்றும் வெளியாகவில்லை. உரிமை பெற்றுத் தமிழில் வெளியிடுவது என்பது பெரிய முயற்சி. நிறையப் பொருட்செலவு கொண்டது என்கிறார்கள். அது உண்மையே. மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிடும் பதிப்பகங்களே கூட நோபல் பரிசு பெற்றுள்ள ஒன்றிரண்டு …

ஐம்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். Read More »