தொடரும் பயணம்.

1862ல் தஸ்தாயெவ்ஸ்கி ஐரோப்பியப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். பீட்டர்ஸ்பெர்க்கில் கிளம்பி பெர்லின், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, பாரீஸ், லண்டன் என நீண்டது அப்பயணம். இரண்டரை மாத காலப் பயணமது. இந்தப் பயணத்தின் வழியாக ஐரோப்பியப் பண்பாடு மற்றும் சமூக நிலையைப் பற்றித் தஸ்தாயெவ்ஸ்கி அறிந்து கொண்டார். Winter Notes on Summer Impressions என இந்தப் பயணத்தைப் பற்றிச் சிறிய நூல் ஒன்றையும் தஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருக்கிறார். அதே பயணத்தைத் தற்போது தஸ்தாயெவ்ஸ்கியின் கொள்ளுப்பேரன் டிமிட்ரி மீண்டும் நிகழ்த்தியிருக்கிறார். அதை …

தொடரும் பயணம். Read More »

குட்டி இளவரசனுடன் ஒரு பயணம்.

ஆகஸ்ட் 31 ம் தேதி மாலை கவிக்கோ மன்றத்தில் நடைபெற இருக்கும் கனலி கலை இலக்கிய இணையதளம் தொடக்க விழாவில் கலந்து கொண்டு  உரையாற்றுகிறேன் தலைப்பு  : குட்டி இளவரசனுடன் ஒரு பயணம். ( ஃபிரெஞ்ச் எழுத்தாளர் அந்துவாந்த் செந்த் எக்ச்பெரியின் வாழ்க்கை மற்றும் எழுத்து குறித்த உரை ) •• 24.8.2019

கசாக்கின் நினைவில்.

சமீபத்தில் கேரளா சென்றிருந்த போது பாலக்காட்டினை அடுத்துள்ள தர்ஸக் கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ஒ.வி. விஜயன் நினைவகத்திற்குச் சென்றிருந்தேன். சின்னஞ்சிறிய பசுமையான கிராமம். அந்த ஊரினை மையமாகக் கொண்டு தான் விஜயன் தனது புகழ்பெற்ற கசாக்கின் இதிகாசம் நாவலை எழுதியிருக்கிறார். அந்த நினைவைக் கொண்டாடும் விதத்தில் நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களைச் சிற்பங்களாகவும் ஒவியமாகவும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஊரின் நுழைவாயிலில் வழியம்பலம் என நாவலில் ரவி வந்து இறங்குமிடம் அழகான வளைவு கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கிறது மலையாள இலக்கியத்தின் தனிப்பெரும் …

கசாக்கின் நினைவில். Read More »

ரகசியத்தின் தோட்டம்.

ஷங்கர் ராமசுப்ரமணியனின் புதிய கவிதைத்தொகுப்பு கல் முதலை ஆமைகள் க்ரியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. சமீபத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு இதுவென்பேன்.. சமகால உலகக் கவிதைகளின் வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தொகுப்பிது.. 110 பக்கங்கள் கொண்ட சிறிய கவிதைநூல். மூன்று நாட்களாகக் கையில் வைத்து வைத்துப் படித்துக் கொண்டேயிருக்கிறேன். அற்புதம், அற்புதம் என மனம் அரற்றிக் கொண்டேயிருக்கிறது. ஒரு கவிஞனாக ஷங்கர் ராம சுப்ரமணியன் தனது கவித்துவ உச்சத்தைத் தொட்டிருக்கிறார்.. பாஷோவின், ழாக் …

ரகசியத்தின் தோட்டம். Read More »

நடு – இணைய இதழ்

பிரான்ஸிலிருந்து வெளியாகும் கலை இலக்கிய இணையச் சிற்றிதழ் நடு – தமிழகச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எனது சிறுகதை வெளியாகியுள்ளது. நடு இதழின் பிரதம ஆசிரியராக இருப்பவர் கோமகன் . சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முகத்தைப் பிரதிபலிப்பது போன்று சிறந்த கதைகள், கட்டுரைகள். கவிதைகள் கொண்டதாக இதழ் உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இணைய இதழ் சிறந்த ஓவியங்களுடன் நேர்த்தியாக வடிவமைப்புச் செய்யப்பட்டிருப்பது மிகவும் பிடித்திருக்கிறது. நடு இதழின் ஆசிரியர் குழுவிற்க்கும் வடிவமைப்பாளருக்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள் …

நடு – இணைய இதழ் Read More »

புதிய நாவல்

மதுரை புத்தகக் கண்காட்சியில் எனது புதிய நாவல் ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை வெளியாகவுள்ளது. அது குறித்த காணொளி •••• https://youtu.be/IdPVqFqp6aw

சோல்செனிட்சினுடன் உரையாடல்

அலெக்சாண்டர் சுக்ரோவ் ரஷ்யாவின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர். திரைக்கலையினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்ற கலைஞர். இவரது திரைப்படங்களை  poetic cinema என்கிறார்கள். சுக்ரோவ்  தீவிர இலக்கிய ஈடுபாடு கொண்டவர்.  ரஷ்யாவின் மனசாட்சியாகத் திகழுகிறார் என்று திரை விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள். இவரது Russian Ark ஒரே ஷாட்டில் எடுக்கபட்ட சிறந்த திரைப்படம். பீட்டர்ஸ்பெர்க்கிலுள்ள ஹெர்மிடேஜ் ம்யூசியத்தினுள் முழுப்படமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. கலைநேர்த்தி மிக்கத் திரைப்படமது. சுக்ரோவ் ஹிட்லரை மையாக வைத்து Moloch என்ற படத்தை இயக்கினார். இது போலவே லெனினை …

சோல்செனிட்சினுடன் உரையாடல் Read More »

யானையுடன் ஒரு பயணம்.

கிர்ஸ்டன் டான் என்ற பெண் இயக்குநர் இயக்கிய Pop Aye என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 2017 வெளியான திரைப்படம். தானா என்ற கட்டிடக்கலைஞர் ஒரு யானையை அழைத்துக் கொண்டு சாலையில் செல்லும் காட்சியுடன் படம் துவங்குகிறது. யானையின் முதுகில் கிழிந்த பை போன்ற ஒன்று தொங்குகிறது. காயம்பட்ட காலுடன் யானை மெதுவாக நடக்கிறது. பாங்காக்கின் பிரதான சாலையில் தானா யானையோடு நடந்து வருகிறார். பெருநகரத்தில் வாழும் ஒரு மனிதன் ஒரு காரை, பைக்கை, ஏன்  ஒரு கப்பல் …

யானையுடன் ஒரு பயணம். Read More »

ஸீபால்ட் சிறப்பிதழ்

சொல்வனம் இணைய இதழ் இங்கிலாந்தில் வசிக்கும் ஜெர்மானிய எழுத்தாளரான டபில்யூ.ஜீ. ஸீபால்ட் குறித்துச் சிறப்பிதழ் ஒன்றை உருவாக்கியுள்ளது. அரிய கட்டுரைகள், அறிமுகத்துடன் ஸீபால்ட் குறித்த விரிவான பார்வையைத் தரும் விதமாக சிறப்பிதழ் உருவாக்கப்பட்டுள்ளது. சொல்வனம் ஆசிரியர் குழுவினருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். இதழின் முக்கியக் கட்டுரைகளை எழுதியிருப்பவர் நம்பி கிருஷ்ணன். இவரது கட்டுரைகளை நான் விரும்பி வாசிப்பவன். இந்த இதழில் இவர் ஸீபால்ட் பற்றி எழுதியுள்ளதையும் மொழியாக்கம் செய்திருப்பதையும் வாசித்த போது பிரமிப்பு ஏற்பட்டது. எவ்வளவு …

ஸீபால்ட் சிறப்பிதழ் Read More »

இரண்டு புத்தகங்கள்

யுவான் ருல்போ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், போர்ஹெஸ், ஆக்டோவியா பாஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கவிஞர் பிரம்மராஜன், ஆர். சிவகுமார், எதிராஜ் அகிலன், நாகார்ஜுனன், சம்யுக்தா, மணிக்கண்ணன் ஆகியோர் சிறப்பாக மொழியாக்கம் செய்து வெளியிட்ட இந்நூல் எனக்கு மிகவும் பிடித்தமானது. நவீன தமிழ் சிறுகதையை மாற்றம் செய்ததில் இந்நூலுக்கு முக்கிய பங்கிருக்கிறது. பாஸ்கரன் ஒவியத்துடன் சிறந்த வடிவமைப்பில் நேர்த்தியாக உருவாக்கபட்டிருந்தது இந்நூலை பிரம்மராஜன் மறுபதிப்பு செய்தால் இன்றைய வாசகர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். …

இரண்டு புத்தகங்கள் Read More »