தெலுங்கில்
எனது சிறுகதை கொஞ்சம் அதிகம் இனிப்பு தெலுங்கில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கௌரி கிருபாகரன். அவருக்கு மனம் நிரம்பிய நன்றி ••
எனது சிறுகதை கொஞ்சம் அதிகம் இனிப்பு தெலுங்கில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கௌரி கிருபாகரன். அவருக்கு மனம் நிரம்பிய நன்றி ••
நாளை மதுரை புத்தகத் திருவிழாவிற்கு வருகிறேன். நாளை மாலை (05.09.2019) 5 .30 மணிக்கு மதுரைப் புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கு எண் 138ல் எனது புதிய நாவல் ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல்கதை வெளியிடப்படவுள்ளது. தலைமையேற்று நாவலை வெளியிடுபவர் தோழர் எஸ்.ஏ.பெருமாள் நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி வேண்டுகிறேன் விலை ரூ 200 ••• 04.09.2019
The Story of the Weeping Camel என்ற புகழ்பெற்ற டாகுமெண்டரி படத்தை இயக்கிய பைம்பசுரான் டாவா (Byambasuren Davaa) வின் அடுத்தப் படமான Two Horses of Genghis Khan என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். 2009ல் வெளியான படமிது. மங்கோலியத் திரைப்பட இயக்குனரான பைம்பசுரான் டாவா ஜெர்மனியில் வசிக்கிறார். சர்வதேச அளவில் ஏராளமான விருதுகளை வாங்கியவர் டாவா. சீனாவின் கலாச்சாரப் புரட்சி காலத்தில் மங்கோலிய மக்களின் மரபும் பண்பாடும் ஒடுக்குமுறைக்கு ஆளானது. மங்கோலிய நாட்டுப்புற இசை …
அஷ்டமூர்த்தி மலையாளத்தின் மிக முக்கியமான சிறுகதையாசிரியர். எழுத்தாளர். இவரது கடைசி சிற்பம் என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழில் சிதம்பரம் ரவிச்சந்திரன் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பஷீர் துவங்கி அசோகன் செருவில் வரை மலையாளத்தின் முக்கிய சிறுகதையாசிரியர்கள் பலரும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கென வாசகர் வட்டமே தமிழில் உருவாகியுள்ளது. சமகால மலையாள சிறுகதைகளின் போக்கினையும் எழுத்துமுறையையும் அறிந்து கொள்வதில் தமிழ் எழுத்தாளர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அஷ்டமூர்த்தியின் கதைகள் தமிழுக்குப் புதுவரவாக உள்ளது மகிழ்ச்சி …
A.K.Ramanujan – Journeys – A Poet’s Diary என்ற புத்தகத்தை வாசித்தேன். இந்நூலைப் படிக்க வேண்டும் என்று விரும்பியதற்கு முதற்காரணம் ஏ.கே ராமானுஜன் சில காலம் மதுரையிலுள்ள தியாகராசர் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்திருக்கிறார் என்பதே. 1951ல் அவர் மதுரைக்கு வேலைக்கு வந்திருக்கிறார். 50களின் மதுரையைப் பற்றியும் தனது பணிக்கால அனுபவங்களையும் எழுதியிருக்கிறார் என்ற குறிப்பை ஆங்கில நாளிதழில் வாசித்தேன். அதுவே இந்நூலை வாசிக்கத் தூண்டியது. ஏ.கே ராமானுஜன் சிறந்த கவிஞர்.கட்டுரையாளர். நாட்டுப்புறவியல் ஆய்வாளர்.மொழிபெயர்ப்பாளர். …
கனலி இணையதளத்தின் துவக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு குட்டி இளவரசனுடன் ஒரு பயணம் என்ற தலைப்பில் உரையாற்றினேன். விக்னேஷ்வரன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. நேற்று சித்துராஜ் பொன்ராஜ் முரகாமி பற்றி ஆற்றிய உரை மிகச்சிறப்பானது. அழகிய புகைப்படங்களை எடுத்த பாலமுரளிக்கும் நிகழ்வை ஒளிப்பதிவு செய்த ஷ்ருதி டிவிக்கும் நன்றி நண்பர் வேலூர் லிங்கன் நிகழ்விற்கு வந்திருந்தது கூடுதல் மகிழ்ச்சி. அவரது நேர்காணல் கனலியில் வெளியாகியுள்ளது. அவசியம் வாசிக்கவும். எனது உரையின் காணொளி https://www.youtube.com/watch?v=H7I5mAvUKDg&feature=em-uploademail இணையதள …
தேசாந்திரி பதிப்பகம் மதுரைப் புத்தகத்திருவிழாவை முன்னிட்டு எனது நூல்களின் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது விலை: ரூ125 விலை: ரூ 125 மதுரைப் புத்தகக் கண்காட்சி தேசாந்திரி அரங்கு எண் 138ல் இப் புத்தகங்களைப் பெறலாம் ஆன்லைன் தளத்திலும் தேசாந்திரி பதிப்பகத்திலும் விற்பனைக்குக் கிடைக்கும். தொடர்பிற்கு : தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 தொலைபேசி 044 23644947 அலைபேசி 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/
எனது புதிய நாவல் ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை வெளியாகிவிட்டது. தேசாந்திரி பதிப்பகத்திலும் ஆன்லைன் விற்பனை தளத்திலும் இந்நூலைப் பெறலாம். மதுரைப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி அரங்கு எண் 138ல் இந்நாவல் கிடைக்கும். விலை ரூ 200 ••• முதன் முதலாக காதல் நாவல் எழுதி இருக்கிறேன் குங்குமம் இதழில் வெளியான நேர்காணல் சந்திப்பு: கதிர்வேலன் தமிழ் இலக்கிய உலகில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எப்போதும் தனி ராஜ்ஜியம்தான். மெலிதான கதை சொல்லல், தீவிர தத்துவ விசாரம், பேரன்பு என …
George Orwell: A Life in Pictures என்ற பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படத்தைப் பார்த்தேன். ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற எழுத்தாளர். Big Brother is watching you என்ற இவரது வாசகம் கண்காணிப்பு அரசியல் குறித்த உரையாடல்களில் சுட்டிக்காட்டப்படும் பிரபலமான மேற்கோளாகும். பிபிசி ஆவணப்படங்கள் பெரிதும் மரபான பாணியைக் கொண்டவை. ஆனால் இந்த ஆவணப்படம் அதிலிருந்து மாறுபட்ட விதத்தில் உருவாக்கபட்டிருக்கிறது. ஆர்வெலின் ஆளுமையை முழுமையாக உணர்ந்து கொள்ளும் வண்ணம் உருவாக்கபட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆர்வெல் இந்தியாவில் …
கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் தனது வலைப்பக்கத்தில் ஷின் ஷின் மிங் எனப்படும் ஜென் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறப்பான மொழியாக்கமது. ** பரிபூர்ண மனம் மீதான பாடல்கள் தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன் ஷின் ஷின் மிங் என்னும் இந்தப் பாடல், ஜென் குருவான சோசன் அவர்களால் ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஜென்னின் தெளிவான அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக இது கருதப்படுகிறது. ஷின் ஷின் மிங்-க்கு “பரிபூர்ண மனம் மீதான பாடல்கள்” என்று இதன் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் …