தேவதச்சனின் கவிதையுலகம்

எனது ஆசான்களில் ஒருவரான கவிஞர் தேவதச்சனின் கவிதையுலகம் பற்றி விரிவான புத்தகம் ஒன்றை உருவாக்கி கொண்டிருக்கிறேன். அவருடன் இலக்கியம், தத்துவம், சினிமா, கரிசல் வாழ்க்கை,  உலக கவிதைகள் என பல்வேறு விஷயங்கள் சார்ந்து ஏழு மணி நேர விரிவான நேர்காணல் செய்துள்ளேன். அரிய புகைப்படங்கள். தேவதச்சனின் கவிதையுலகம் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூல் சென்னை புத்தக கண்காட்சிக்கு வெளிவர உள்ளது.  உயிர்மை பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது.

நிவாரணப்பணிகள்

கடந்த ஒரு வார காலமாக ஊரிலிருந்தபடியே  எனது வாசகர்கள், நண்பர்கள் எனப் பலரையும் ஒன்றிணைத்து கடலூர் மற்றும் சென்னை  வெள்ளநிவாரணப்பணிகளுக்கான உதவிகளை மேற்கொண்டேன். நேற்று சென்னை திரும்பினேன். மதுரை, விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி. திருநெல்வேலி என என்னோடு  தொடர்புடைய பல நண்பர்கள், வாசகர்கள்  தங்களால் முடிந்த உதவிப்பொருட்களைச் சேகரித்து வேன்களில் அனுப்பி வைத்தார்கள். இது போலவே சென்னையிலுள்ள சில தன்னார்வக் குழுக்களுக்குத் தேவையான பொருட்களை  தனியார் நிறுவனங்களை அணுகிப் பெற்றும் தந்தேன் எனது அண்ணன் டாக்டர் எஸ். வெங்கடாசலம் …

நிவாரணப்பணிகள் Read More »

மதுரை சென்றுள்ளேன்

சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான மழை காரணமாக மூன்று நாட்களாக மின்சாரமில்லை, குடிநீரில்லை. உணவுப்பொருட்கள் கிடைக்கவில்லை. தீவைப்போல சென்னை மிதக்கிறது. வெளியே எங்கும் போக முடியாத நிலை, எனது வீட்டின் முன்புள்ள சாலையில் நான்கடி தண்ணீர் வெள்ளம். காய்ச்சல் பரவி பலருக்கும் நோய். வயிற்றுப்போக்கு. பகலிலும் வெளிச்சமில்லை, பாதி இருட்டு, ஐந்து மணிக்கெல்லாம் முழு இருட்டாகிவிட்டது. சென்னையின் இருண்ட காலமிது. போன், நியூஸ் பேப்பர், ஏடிஎம் எதுவும் கிடையாது. அவசர உதவிக்கு தரப்பட்ட எந்த எண்ணும் வேலை செய்யவில்லை. …

மதுரை சென்றுள்ளேன் Read More »

விழா

இன்று சென்னையில் நடைபெற்ற தி இந்து வாசகர் விழாவில் எனது வீடில்லாப்புத்தகங்கள் வெளியிடப்பட்டது பக்கங்கள் : 192 விலை: 160 தொடர்புக்கு தி இந்து தமிழ் கஸ்தூரி மையம் 124 .வாலாஜா சாலை சென்னை -02 books@thehindutamil.co.in

ஒத்திவைப்பு

சென்னையில் ஏற்பட்டுள்ள கடும்மழை காரணமாக வருகின்ற 29 .11.2015 ஞாயிறு மாலை ரஷ்யக் கலாச்சார மையத்தில்  நடைபெறுவதாக இருந்த  எனது புத்தக வெளியீட்டு விழா ஒத்திவைக்கபடுகிறது.

புத்தக வெளியீடு

நவம்பர் 29 ஞாயிறு மாலை ஆறுமணிக்கு நான் எழுதியுள்ள செகாவ் வாழ்கிறார் என்ற ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாற்று நூல் ருஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்பட உள்ளது. உயிர்மை பதிப்பகமும், ருஷ்ய கலாச்சார மையத்தின் ஜெயகாந்தன் – புஷ்கின் இலக்கியப் பேரவையும் இணைந்து இந்த விழாவினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் நிகழ்வு குறித்த முழு விபரங்கள் நாளை வெளியிடப்படும் **

இடக்கை

எனது புதிய நாவல் இடக்கை. உயிர்மை பதிப்பக வெளியீடாக  2016 சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகிறது.

எனக்குப் பிடித்த கதைகள் 33

கருப்பு ஆடு – இதாலோ கால்வினோ தமிழில் ராஜ் கணேசன். திருடர்கள் மட்டுமே வாழ்ந்த தேசம் ஒன்றிருந்தது. ஒவ்வொரு இரவும் அவர்கள் அனைவரும் கள்ளச்சாவிகளையும் லாந்தர் விளக்குகளையும் ஏந்திக் கொண்டு அக்கம் பக்கத்தில் ஏதாவது ஒரு வீட்டிற்குத் திருடச்செல்வார்கள். திருடிய பொருட்கள் அனைத்தையும் அள்ளிக்கொண்டு விடிந்த பின்னர் வீடு திரும்புகையில் அவர்களுடைய வீட்டில் உள்ள அனைத்தும் வேறு சிலரால் களவாடப்பட்டு இருக்கும். இது போலத் தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் திருடிக் கொண்டிருந்தார்கள். இப்படியே அனைவரும் மகிழ்ச்சியாக …

எனக்குப் பிடித்த கதைகள் 33 Read More »

அகிரா குரோசாவா – மார்க்கேஸ் உரையாடல்

திரைக்கதையும் அணுகுண்டும் தமிழில்: ராம் முரளி 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், உலக புகழ்பெற்ற கொலம்பிய எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் டோக்கியோ நகருக்கு சென்றிருந்தபோது, RHAPSODY IN AUGEST எனும் தனது புதிய படத்தை இயக்கிக் கொண்டிருந்த அகிரா குரோசாவாவை சந்தித்து உரையாடினார். மார்க்கேஸ் தனது “ONE HUNDRED YEARS OF SOLITUDE” மற்றும் “LOVE IN THE TIME OF CHOLERA” போன்ற மகத்தான கிளாசிக்கல் நாவல்களை எழுதிடும் முன்பாக, சில ஆண்டுகள் …

அகிரா குரோசாவா – மார்க்கேஸ் உரையாடல் Read More »