துக்கலின் கதைகள்

பஞ்சாபி இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் கர்த்தார் சிங் துக்கல், (Kartar Singh Duggal ) சாகித்ய அகாதமி பரிசு பெற்ற இவர், இந்தியப்பிரிவினை குறித்து முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறார்,  சிறந்த நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர் பாலுறவையும் விலக்கிவைக்கபட்ட இச்சைகளையும் பற்றிப் பகிரங்கமாக எழுதினார் என்று துக்கலின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கபட்டன, பத்திற்கும் மேற்பட்ட சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ள இவர் சிறந்த விமர்சகரும் கூட, துக்கல் அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர், பத்மபூஷண் உள்ளிட்ட பல …

துக்கலின் கதைகள் Read More »

பிரெஞ்சு படம்

பிரெஞ்சு இயக்குனர் மிஷேல் ஸ்பினோசாவின் Son épouse என்ற பிரெஞ்சு படம் புதுச்சேரியை மையமாகக் கொண்டது இப்படத்தின் தமிழ்பகுதிகளுக்கான உரையாடலை நான் எழுதியிருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு படம்  சர்வதேச அளவில் வெளியாகி சிறந்த பாராட்டுதல்களைப் பெற்றதோடு பெர்லின் திரைப்படவிழாவிலும் பங்கெடுத்துள்ளது

கோடையில் ஒரு மழை

ச.ஆறுமுகம் மலைகள் இணைய இதழிலும் பல்வேறு இலக்கிய இதழ்களிலும் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகளைச் செய்துவருகிறார், ஒய்வு பெற்ற வட்டாட்சியரான ஆறுமுகம் வேலூரில் வசிக்கிறார், உலக இலக்கியத்தின் சமகாலப் படைப்புகளைத் தேடித்தேடி மொழியாக்கம் செய்துவருகிறார், சிறந்த மொழிபெயர்ப்பாளர். இவரது மொழியாக்கத்தில் வெளியான ஹரூகி முரகாமியின் யானை காணாமல் போகிறது சிறுகதைத் தொகுப்பு முக்கியமானது, சமீபத்தில் வெளியான கோடையில் ஒரு மழை மொழியாக்க சிறுகதைகளின் தொகுப்பில் நோபல் பரிசு பெற்ற மோ யான், ஆலின் மன்றோ சிறுகதைகளுடன் ஜேடீ ஸ்மித், மார்க்வெஸ், …

கோடையில் ஒரு மழை Read More »

டெலிபோன் புத்தகம்

Bashō’s Phonebook  என்ற சித்திரக்கவிதை தொகுப்பு ஒன்று மெயிலில் வந்திருந்தது,  அதை உருவாக்கியவர் Travis Macdonald பாஷோவின் ஜப்பானியக் கவிதைகளை எடுத்துக் கொண்டு டெலிபோன் பேடில் எந்த எழுத்திற்கு எந்த எண் கொடுக்கபட்டுள்ளதோ அதைப் போல கவிதையை டெலிபோன் மொழிக்கு உருமாற்றம் செய்திருக்கிறார் 666:555:3: 7:666:66:3 [—] 333:777:666:4:7777: 5:88:6:7:33:3: 444:66 [—] 7777:666:88:66:3: 666:333: 9:2:8:33:777[.] இது ஒரு பாஷோவின் ஜென் கவிதை, எழுத்து வடிவில் உள்ள கவிதையை எண் வடிவில் மாற்றி தருவது ஒரு …

டெலிபோன் புத்தகம் Read More »

சென்னை திரும்பினேன்

கோடை விடுமுறையில் இருந்து இன்று மதியம் சென்னை திரும்பினேன், விடுமுறைப் பயணம் என்ற போதும் ஒய்வெடுக்கவில்லை, தொடர்ந்த சந்திப்புகள், இலக்கியக் கூட்டங்கள் என சுற்றியலைந்து கொண்டிருந்தது மாறுபட்ட அனுபவமாகவே இருந்தது ஊரில் இருக்கிற நாட்களில் ஒருநாளைக்கு அதிகபட்சம் மூன்றோ நான்கோ தொலைபேசி அழைப்புகள் மட்டுமே வந்தன, வாகன நெருக்கடிகள் இல்லை, ஏகாந்தமான காலை நடை, ஆசை தீரக் குளிப்பது, பிடித்தமான சாப்பாடு, அப்புறம் இரண்டு மணி நேரம் படிப்பது யாராவது நண்பர்களைத் தேடிப் போய் சந்திப்பது, மதிய …

சென்னை திரும்பினேன் Read More »

உரை

உரையாடல் என்ற இலக்கிய அமைப்பை மொழிபெயர்ப்பாளர் தேவதாஸ் மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து ராஜபாளையத்தில் நடத்தி வருகிறார்கள் இந்த அமைப்பு சார்பாக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான  கேப்ரியல் கார்சியா மார்க்கெஸின் வாழ்வும் எழுத்தும் குறித்து  நான் பேசயிருக்கிறேன் நாள் : மே மாதம் 10ம் தேதி சனிக்கிழமை (10.05.14) நேரம்:  மாலை ஐந்து மணி இடம் : வைமா வித்யாலயா பள்ளி.  ஸ்ரீரெங்கபாளையம், இராஜபாளையம் இப்பள்ளி பத்மா மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளது நண்பர்கள் …

உரை Read More »

எழுத்தாளர் ஷாஜகான்

எழுத்தாளர் ஷாஜகான் எனது விருப்பத்திற்குரிய நண்பர், அவரைக் காண்பதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தேன், திருமங்கலத்தில் வசிக்கும் அவரை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன், ஷாஜகான் சிறந்த சிறுகதை எழுத்தாளர்,காட்டாறு என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார், வம்சி பதிப்பக வெளியீடு, நல்ல பேச்சாளர், தீவிர இலக்கிய வாசகர், மாற்றுக் கல்வி குறித்த நூல்களை மொழியாக்கம் செய்து வருபவர்.பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார், ஷாஜகானும் எழுத்தாளர் கந்தர்வனும் ஜோடிகள், இருவரும் பேச ஆரம்பித்தால் சிரித்து உருள வேண்டியிருக்கும், கேலியும் கிண்டலுமாக பேசிக் …

எழுத்தாளர் ஷாஜகான் Read More »

படிப்பதற்காகவே வாழ்பவர்

ஒருவன் தனது வாழ்நாளிற்குள் பத்தாயிரம் மைல் நடக்க வேண்டும், பத்தாயிரம் புத்தகங்களை வாசித்து முடிக்க வேண்டும், அதுவே முழுமையான வாழ்க்கை என்கிறது சீனப்பழமொழி, இதை உண்மையாக்குவது போல படிப்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் 87 வயதான எஸ்.எஸ்.ஆர்.லிங்கம், அவரது முழுப்பெயர் சேதுராமலிங்கம். ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் இந்த அயராத படிப்பாளியைக் காண்பதற்காக சென்றிருந்தேன், எனது முதல்நாவல் உப பாண்டவத்தை வெளியிடுவதற்கு யாரும் முன்வராத காரணத்தால் நானே அதன் முதற்பதிப்பை வெளியிட்டேன், விருதுநகரில் இருந்த எனது முகவரிக்கு மணிஆர்டர் அனுப்பி புத்தகத்தைப் …

படிப்பதற்காகவே வாழ்பவர் Read More »

மதுரையில்

மதுரையில் நேறறு நல்ல மழை, கோடை இடியின் உக்கிரம், மின்னல்வெட்டின் வலிமை, காற்றோடு கூடிய மழை,   தோழர் எஸ் ஏபி வீட்டிலிருந்து மழையைப் பார்த்துக் கொண்டிருநதேன், மகிழ்ச்சியான அனுபவம் மழைக்குப் பிறகான மதுரை சற்று குளிர்ந்திருக்கிறது, வழக்கமான பணிகள் அத்தனையும் தூக்கி ஒரம் கட்டி வைத்துவிட்டு படிப்பது, இசை கேட்பது, படம் பார்ப்பது,  பயணம் என ஒய்வாக கழிகிறது நாட்கள் வீணையின் குரல் என்ற எஸ். பாலசந்தர்  வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வாசித்தேன், எஸ். பாலச்சந்தரின் பல்துறை …

மதுரையில் Read More »

கோடை பயணம்

கோடைவிடுமுறைக்காகக் குடும்பத்துடன் மதுரை செல்கிறேன் மே 15 வரை மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், ராஜபாளையம், எனச் சுற்றிக் கொண்டிருப்பேன், கேரளா மற்றும் கொடைக்கானல் செல்லவும் திட்டம். சந்திக்க விரும்பும் நண்பர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் அவசியம் சந்தித்து உரையாடலாம். திங்கள்கிழமை 28.04.2014 அன்று தஞ்சை தமிழ் பல்கலைகழக ஆய்வுவட்ட நிறைவு விழாவில் பேசுகிறேன், காலை 11 மணி அளவில் பேரவை கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. விருப்பமான நண்பர்கள் கலந்து கொள்ளலாம் ••