அஸ்தபோவில் இருவர்

சிறுகதை உடல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது, டால்ஸ்டாய் ரயிலினுள் ஒடுங்கி உட்கார்ந்திருந்தார், அவரது மகள் சாஷாவும் மருத்துவர் துஷானும் அருகில் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார்கள், தளர்ந்து போன அவரது உடலை குளிர்காற்று ஊசிமுனை போல குத்திக் கொண்டிருந்த்து, அவரது கால்முட்டிகளில் கடுமையாக வலி, உதடுகள் வெடித்து சிவந்து, கண்கள் சோர்ந்து அயர்ந்து போயிருந்தன, நுரையீரலில் புகைபடிந்தது போல மூச்சுவிடுவதற்கே கனமாகிக் கொண்டிருந்தது. அவராக கழுத்தடியில் தொட்டு பார்த்துக் கொண்டார், உள்ளுற காய்ச்சல் அடிப்பது போலவே தோன்றியது, நாக்கில் …

அஸ்தபோவில் இருவர் Read More »

லூரே கேவன்ஸ்

இந்தியாவில் எத்தனையோ குகைகளைக் கண்டிருக்கிறேன், ஆனால் வர்ஜினியாவின் லூரேபகுதியில் அபேலேசியன் மலைத்தொடரில் பூமிக்கு அடியில் அமைந்துள்ள குகைதளம் போல ஒன்றை என் வாழ்நாளில் கண்டதில்லை, அதை லூரே கேவன்ஸ் (Luray Caverns )என்று அழைக்கிறார்கள் நானும் நிர்மலும் பாலாஜியும் அதைக்காண்பதற்காக சென்றிருந்தோம், பூமி மட்டத்திற்கு 134 அடி கீழே உள்ளது  இக்குகைத்தளம், . ஒரு பரந்த தெரு ஒன்றினுள் நடந்து சுற்றுவது போல மேலும் கீழுமாக அகன்று விரிந்திருக்கிறது குகை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மழையில் …

லூரே கேவன்ஸ் Read More »

பொய்விசாரணை

தியேட்டர் லேப் சார்பில் நண்பர் ஜெயராவ் இயக்கியுள்ள பொய்விசாரணை என்ற நாடகம் வருகின்ற சனிக்கிழமை (27.07.2013) மாலை ஏழுமணிக்குத் தியேட்டர்  லேப் அரங்கில் நடைபெற உள்ளது, இது எனது சிறுகதை ஆம் புரூனோ அவர்கள் குற்றவாளிகளேயின் நாடகவடிவமாகும், இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் நடைபெறும் இடம் Theatre lab 6, Mahaveer Complex, Munusamy Salai, K. K. Nagar .Chennai, (Near Ponicherry Guest House. ) Ph.9688858882 நாள்  27.07.2013. …

பொய்விசாரணை Read More »

ஈரோட்டில்

வருகின்ற 24.07.2013 புதன்கிழமை மதியம் 2.30 மணிக்கு ஈரோடு செங்குந்தர்  பொறியியல் கல்லூரி தமிழ் மன்ற விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறேன். ***

இக்யூவின் காதல்பாடல்கள்

ஜென் கவிஞர்கள் நாடோடிகளாக இருந்த காரணத்தால் அவர்கள் பயண வழியில் வேசைகளுடன் தங்கி இரவைக் கழித்துப் போவது இயல்பே, ஆனாலும் அந்த இன்பத்தைப் பற்றியோ பரத்தமை பற்றியே ஜென் கவிதைகளில் அதிகம் பாடப்படவேயில்லை, இதில் ஒரேயொரு விதிவிலக்கு, இக்யூ ஸோஜன் ( Ikkyu) தன்னை Crazy Cloud”, என்று அழைத்துக் கொண்ட தனித்துவமிக்க ஜென்கவிஞர் இவர். வெளிப்படையாக பரத்தைகளோடு கூடி இருப்பதுடன் அவர்களை புகழ்ந்து பாடி, பாலின்பத்தை குறை கூறும் கள்ளத்துறவிகளையும் இக்யூ கேலி செய்கிறார், பௌத்த …

இக்யூவின் காதல்பாடல்கள் Read More »

கரமசோவைப் பின்தொடரும் போது

தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவல் தமிழில் கவிஞர் புவியரசு அவர்களின் மொழியாக்கத்தில் வெளியாகி ஒரு ஆண்டிற்கும் மேலாகி விட்டது , அந்த நூலின் வெளியீட்டு விழாவில் நான் தஸ்தாயெவ்ஸ்கி குறித்துச் சிறப்புரை ஆற்றினேன், புவியரசு அவர்களின் மொழியாக்கம் குறித்து ஆழ்ந்து அறிந்து கொள்வதற்காக மூலத்துடன் ஒப்பிட்டு வாசிக்கும் ஒரு வாசிப்பினை கடந்த இரண்டு மாதங்களின் முன்பாக மேற்கொண்டிருந்தேன், ஒரு மொழிபெயர்ப்பாளர் எவ்வளவு சிரத்தையுடன், அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பதற்குப் புவியரசுவின் இந்த மொழியாக்கம் சிறந்த எடுத்துக்காட்டு, அவருக்கு …

கரமசோவைப் பின்தொடரும் போது Read More »

வானவில் போராளிகள்

திருப்பூர் சென்றிருந்த போது நண்பர்கள் முரளிகுமார் மற்றும்  ரவிக்குமாருடன் பேசிக் கொண்டிருந்தேன், அப்போது ‘Warriors of the Rainbow: Seediq Bale’  என்ற திரைப்படம் பற்றி தெரிவித்தார்கள், இரண்டுநாட்களுக்குப் முன்பாக ஐந்துமணி நேரங்கள் ஒடக்கூடிய அதன் இரண்டுபாகங்களையும் முழுமையாகப் பார்த்து முடித்தேன், சமீபத்தில் நான் பார்த்த உலகத்திரைப்படங்களில் மிகச்சிறந்தபடம் இதுவே, சினிமாவின் வலிமை எத்தகையது என்பதை நிருபணம் செய்யும் அரிய சாதனையிது, சில ஆண்டுகளுக்கு முன்பாக  ஹாங்காங்கைச் சேர்ந்த இயக்குனர் John Woo இயக்கிய Red cliff …

வானவில் போராளிகள் Read More »

காந்தியோடு பேசுவேன்

சிறுகதை காலையில் தான் வார்தாவிற்கு வந்து இறங்கியிருந்தேன், நான் வார்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு வருவது இதுவே முதன்முறை, ஆனால் அதைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன், புகைப்படங்களிலும் பார்த்திருக்கிறேன், ஆனால் நேரில் காணும்போது அதன் பெருமைகள் எதுவும் கண்ணில்படவில்லை, சுமாரான பராமரிப்பில் நடைபெறும் ஒரு முதியோர் விடுதி ஒன்றைப்போலவே இருந்தது ராகேல், காந்தியின் குடிலை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள், இந்த அறையில் தான் காந்தி தங்கியிருந்திருக்கிறார், கூரை வேய்ந்த எளிமையான அறை, காந்தியின் கைத்தடி மற்றும் காலணிகள், எழுதும்பொருள்கள், …

காந்தியோடு பேசுவேன் Read More »

காப்காவின் அம்மா

கடந்த சில நாட்களாகவே காப்காவின் (Franz Kafka  )அம்மாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன், காப்காவிற்கு அவரது அப்பாவினைப் பிடிக்காது, அப்பா தன்னை எந்த அளவு கட்டுபடுத்தி வைத்திருந்தார் என்ற கோபத்தை, வலியை Letter to My Father என காப்கா எழுதியிருக்கிறார்,  அந்த கடித்த்திற்கு மறுப்பு போல நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கோடிமர் காப்காவிற்கு அவனது தந்தை எழுதியது போல ஒரு கடிதம் எழுதியிருக்கிறார், Letter from his Father -Nadine Gordimer இரண்டையும் …

காப்காவின் அம்மா Read More »

காணொளி

சில காணொளி இணைப்புகள் VONNEGUT’S “HOW TO WRITE A GOOD SHORT STORY” – TEN RULES. https://youtu.be/nmVcIhnvSx8 Martin Amis – Writing Advice https://youtu.be/fi8CLGqOAIg Salman Rushdie: On Storytelling https://youtu.be/ud5Wu_D2kVE Gabriel Garcia Marquez https://youtu.be/GMpsqbge99c Borges Interview https://youtu.be/_uRZGkMpyH8 Virginia Woolf Documentary https://youtu.be/2Hnlsh8WyPE James Joyce – The Trial of Ulysses https://youtu.be/9oDLbjZTh4w Kafka 1991 https://youtu.be/i_MmwyazJBk The True Story of Che Guevara https://youtu.be/g-ZJAS_ZzKU …

காணொளி Read More »