கனடா மற்றும் அமெரிக்கப் பயணம்

இயல்விருது பெறுவதற்காக கனடா செல்ல இருக்கிறேன், டொரன்டோ நகரில் ஜுன் 16 அன்று நடைபெறும் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்கிறேன், அதை ஒட்டிப் பத்து நாட்கள் கனடாவில் இருக்கிறேன், பின்பு அங்கிருந்து அமெரிக்கா சென்று மூன்று வார காலம் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன் கனடாவில் நடைபெறும் நிகழ்வுகளை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் மற்றும் நண்பர் செல்வம் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்கிறார்கள் அமெரிக்கப் பயணத்தை பாஸ்டன் பாலாஜி ஒருங்கிணைப்பு செய்கிறார் இன்னமும் பயணத்திட்டம் முழுமையாக வடிவம் பெறவில்லை, …

கனடா மற்றும் அமெரிக்கப் பயணம் Read More »

என்றுமிருக்கும் சலேரி

மிலாஸ் போர்மனின் அமேடியஸ் திரைப்படம் எனக்கு மிகவும் விருப்பமானது, 1984ல் வெளியான இப்படத்தை இருபத்தைந்து தடவைக்கும் மேலாகப் பார்த்திருக்கிறேன், உலக சினிமாவில் இது ஒரு இசைக்காவியம்,  எட்டு ஆஸ்கார் விருதுகள் உள்ளிட்ட நாற்பது விருதுகளைப் பெற்ற படமிது, இசைமேதை மொசார்ட்டின் வாழ்வினை விவரிக்கும் இப்படம், திரைக்கதை எழுத விரும்புகின்றவர்களுக்கு ஒரு ஆதாரப்பாடம் என்றே சொல்வேன், ஒரு இசை ஆளுமையைப் பற்றிய படத்தை பீட்டர் ஷெபர்ஸ் இது போன்ற திரைக்கதை வடிவத்தில் எழுதியிருப்பது அவரது தனித்திறனையே காட்டுகிறது,  மொசார்ட்டின் …

என்றுமிருக்கும் சலேரி Read More »

எனது உரைகள்

டால்ஸ்டாயின் அன்னாகரீனினா . தஸ்தாயெவ்ஸ்கின் குற்றமும் தண்டனையும். பாஷோவின் ஜென் கவிதைகள். ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும்.  ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் , ஹோமரின் இலியட் உள்ளிட்ட எனது உலக இலக்கியப்பேருரைகளின் டிவிடி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது, பல்கலைகழகங்கள்,கல்லூரிகள், மற்றும் இலக்கிய அமைப்புகள் அதைத் திரையிட்டு மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவருகிறார்கள், இலக்கியப்பேருரைகளின் டிவிடி எங்கே கிடைக்கும் என்று பலரும் தொடர்ந்து கேட்டுவருகிறார்கள், இந்த டிவிடி ஒன்றின் விலை ரூ 100, ஏழு டிவிடிகள் உள்ளது, மொத்தம் …

எனது உரைகள் Read More »

கல்விக்கு உதவுங்கள்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முன்மாதிரியான ஒன்று இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, இந்த சாதனையை நிகழ்த்தியவர் பள்ளி ஆசிரியர் பிராங்கிளின், இது பற்றி இணையத்தில் நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். தற்போது இப்பள்ளி விரிவுபடுத்தபடும் பணி நடைபெறுகிறது, அதற்கான நிதி உதவி கேட்டு பிராங்கிளின் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார் நண்பர்கள் அனைவரும் அவசியம் இந்தப் பணிக்கு உதவும்படி கேட்டுக் கொள்கிறேன் •• மணல் சுமக்கும் அணில்களைத் தேடி… அன்புடையீர், வணக்கம். இராமம்பாளையம் பள்ளியிலிருந்து தங்களைத்தொடர்பு கொள்வதில் …

கல்விக்கு உதவுங்கள் Read More »

இரவிற்கு எல்லாம் தெரியும்

இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப்படையால் படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் குறித்து நிறைய ஆவணங்கள், புனைகதைகள், நாடகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன, அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஆனி பிராங்கின் நாட்குறிப்புகள், (The Diary of Anne Frank) பதிமூன்று வயதான யூதச்சிறுமி எழுதிய இந்த நாட்குறிப்புகள் வரலாற்றின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, ஆனி பிராங்க் டச்சு மொழியில் இந்த டயரியை எழுதியிருக்கிறாள் ஜுன் 14 1942ல் டயரி துவங்குகிறது, முதல் 22 நாட்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கையை …

இரவிற்கு எல்லாம் தெரியும் Read More »

வானெங்கும் பறவைகள்

கடந்த ஐந்து நாட்களாக திருச்சி எஸ்ஆர்வி பள்ளி நடத்திய மாணவர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொணடேன். இந்த முகாமில் எழுத்தாளர் வண்ணதாசன், எழுத்தாளர் தமிழ்செல்வன், பத்திரிக்கையாளர் ஞாநி, எழுத்தாளர் பவா.செல்லத்துரை, எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், சரஸ்வதி மகால் நூலகர் பெருமாள், புகைப்படக்கலைஞர் வைட் ஆங்கிள் ரவிசங்கர், நாடக கலைஞர் பார்த்திபராஜா, ஒவியர் டிராட்ஸ்கி மருது, நடிகை ரோகிணி, பத்திரிக்கையாளர் கவின்மலர், கவிதா முரளிதரன், பெண்ணியசிந்தனையாளர் பத்மாவதி, விஜயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். பெரிய இலக்கியவிழா …

வானெங்கும் பறவைகள் Read More »

ஜேகே

நேற்று ஜெயகாந்தனின் 78வது பிறந்த நாள், காலையில் அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தேன், வாசகர்கள், நண்பர்கள், இடதுசாரித்தோழர்கள், பத்திரிக்கையாளர்கள் என்று பிறந்த நாள் வாழ்த்து சொல்ல பலரும் வந்து கொண்டேயிருந்தார்கள். எப்போதுமே ஜெயகாந்தனோடு பேசிக் கொண்டிருப்பது மிகுந்த உத்வேகம் தரக்கூடியது, நேற்றும் அப்படியே இருந்தது, முதுமையின் தளர்ச்சியிருந்த போதும் அவரது தீர்க்கமான பதில்களும், கேலியும் அனைவரையும் உற்சாகமூட்டியது, ஜேகேயின் வீட்டில் அவரது இளையமகள் தீபாவைச் சந்தித்து பேசியது சந்தோஷம் தருவதாக இருந்தது, அவர் வலைப்பதிவுகளில் …

ஜேகே Read More »

சொன்ன கதை

குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஒரு அற்புதமான கலை, சமீபத்தில் சுட்டிவிகடன் இதழ் சார்பில் சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் பள்ளி மாணவர்களுக்கு கதை சொன்னேன், பெரும்பான்மைச் சிறுவர்கள் வீட்டில் யாரும் கதை சொல்லி கேட்டதேயில்லை என்றார்கள், ஒணான், மண்புழு, ரயில்பூச்சி, ஆந்தை, மீன்கொத்தி,  என எதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை, அதைவிடவும் மாணவர்களில் பலருக்கு விலங்குகளின் பெயர்கள் தமிழில் தெரியவில்லை, இனிப்பு என்று சொன்னால் என்னவென்று ஒரு சிறுமி கேட்டாள்,  ஸ்வீட் என்று சொன்னால் தான் அவளுக்குப் புரிகிறது, …

சொன்ன கதை Read More »

ஆக்காட்டி ஆக்காட்டி

சேரனின் தவமாய் தவமிருந்து படத்திற்காக படமாக்கபட்ட ஆக்காட்டி ஆக்காட்டி என்ற இப்பாடல் படத்தில் இடம் பெறவில்லை, இப்பாடல் நாட்டுபுறப் பாடலை அடிப்படையாகக் கொண்டது, வலையென்ன பெரும் கனமா அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா என நம்பிக்கையூட்டும் விதமாக இதை மாற்றி எழுதியவர் தோழர் எஸ்ஏபெருமாள், பாடலை மேடைகளில் பாடி புகழ்பெறச் செய்தவர் டாக்டர் கே. ஏ.குணசேகரன் படத்திற்காக இந்தப் பாடலை நாடக இயக்குனர் பிரளயன் மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார், பாடலும் படமாக்கபட்ட விதமும் அற்புதமாக உள்ளது இதை …

ஆக்காட்டி ஆக்காட்டி Read More »

வெறும்கால்வாசிகள்

மின்தட்டுபாடு தமிழகத்தை இருட்டிற்குள் தள்ளியுள்ள சூழலில் ராஜஸ்தானில் ஒரு கிராமம் முழுமையாகச் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து பயன்படுத்திக் கொள்கிறது, இதற்கான உபகரணங்களைத் தயாரிப்பவர்களும், பயன்படுத்துவர்களும் கிராமத்துப் பெண்கள், அவர்களில் எவரும் முறையான கல்வியறிவு பெற்றவர்களில்லை, ஆனால் அவர்களால் எளிதாக சோலார் உபகரணங்களைத் தயாரிக்க முடிகிறது, கூடுதலாக இந்த தொழில்நுட்பத்தை அவர்கள் ஆப்ரிக்காவில் உள்ள கிராமப்புற பெண்களுக்குப் பயிற்சி அளித்து வந்திருக்கிறார்கள் என்ற தகவலை ஒரு மின்னஞ்சல் வழியாக அறிந்த போது வியப்பாக இருந்தது, எப்படி …

வெறும்கால்வாசிகள் Read More »