குறும்பட விழா

நவம்பர் 5ம் தேதி சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு ஏவிஎம் ஸ்டுடியோவின் உள்ளே அமைந்துள்ள ப்ரிவீயூ திரையரங்கினுள் நண்பர் அருண்பிரசாத் இயக்கி நான் கதைவசனம் எழுதியுள்ள ஐந்து குறும்படங்களின் திரையீட்டு விழாவும் குறுந்தகடு வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது நெய்வேலிபுத்தகக் கண்காட்சியும் தினமணியும் இணைந்து நடத்திய குறும்படப்போட்டியின் சிறந்த படம், சிறந்த எடிட்டிங். டான் குறும்படப்போட்டியில் சிறந்த படம். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்வின் சிறந்த குறும்படம், சிறந்த வசனம் உள்ளிட்ட பல முக்கிய விருதுளைப் …

குறும்பட விழா Read More »

இது அமெரிக்க சினிமா இல்லை

இன்டர்நேஷனல் தமிழ் பிலிம் அகாதமி மற்றும் செவன்த்சேனல் கம்யூனிகேஷன்ஸ் இணைந்து நடத்தும் சென்னை உலகத்திரைப்படவிழா நிகழ்வின் துவக்கவிழாவில் கலந்து கொண்டேன், நான் முன்னிலை வகிக்க, இயக்குனர் வசந்தபாலன் படவிழாவைத் துவங்கி வைத்தார். தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணன் உலகசினிமாவின் தேர்ந்த ரசிகர்,   அவர் தனது சொந்த முயற்சியில் ஆண்டுதோறும் சென்னையில் உலகத் திரைப்படவிழாவினை நடத்துகிறார், மாணவர்களும், உதவி இயக்குனர்களும், சினிமா ரசிகர்களும் பயன்பெற வேண்டும் என்பதே தனது முக்கியமான நோக்கம் என்கிறார் நாராயணன், இந்தத் திரைப்பட விழா …

இது அமெரிக்க சினிமா இல்லை Read More »

உலக இலக்கியக் கொண்டாட்டம்

உலகெங்கும் வாசகர்களால் கொண்டாடப்படும் டால்ஸ்டாயின் அன்னாகரீனினா, தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், பாஷோவின் ஜென்கவிதைகள், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் , ஹோமரின் இலியட், ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஆயிரத்து ஒரு அராபிய இரவுகள். ஆகிய  ஏழு புத்தகங்கள் குறித்து  நான் விரிவான ஏழு சொற்பொழிவுகளை நடத்த இருக்கிறேன் உலக இலக்கியங்கள் குறித்து தமிழில் முதன்முறையாக இந்தத் தொடர் உரைகள் நடைபெற இருக்கின்றன. உயிர்மையுடன் ருஷ்யக் கலாச்சார மையமும், ஜெயகாந்தன் புஷ்கின் இலக்கியப்பேரவையும் இணைந்து இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருக்கிறன நவம்பர் …

உலக இலக்கியக் கொண்டாட்டம் Read More »

நீயா நானா

கடந்த வாரம் ஒளிப்பரப்பான  நீயா நானா விவாத நிகழ்ச்சியில் நான் பங்கேற்றிருந்தேன், அதற்கான காணொளி இணைப்பு https://youtu.be/WLxIFBz8WNU https://youtu.be/PbllsPQnaFk **

மச்சான்

2008ம் ஆண்டு வெளியான மச்சான் (Machan) என்ற சிங்களத் திரைப்படம் ஒன்றினை சமீபத்தில் பார்த்தேன், சென்னை திரைப்பட விழா, திருவனந்தபுரம் திரைப்பட விழா இரண்டிலும் இப்படம் மிகுந்த வரவேற்பு பெற்றது என்று ஒரு நண்பர் சொல்லி படத்தைக் காணும்படியாக தந்திருந்தார், மச்சான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் Death on a full Moon Day போன்ற சிறந்த சிங்களப் படங்களை இயக்கிய பிரசன்ன விதநாயகே, படத்தின் இயக்குனர் இத்தாலியை சேர்ந்த உபர்ட்டோ பசோலினி, படத்தயாரிப்பில் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு …

மச்சான் Read More »

துயில் – நாவலும், நோய்மை பற்றிய புரிதலும்

கடந்த சனிக்கிழமை டிஸ்கவரி புக் பேலஸ் நடத்திய துயில் பற்றிய விமர்சனக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது, நிறைய வாசகர்கள் துயில் குறித்து ஆர்வமான கேள்விகளைக் கேட்டார்கள், நேரலையின் வழியாகவும் இந்த நிகழ்ச்சி நிறைய நண்பர்களால் கேட்கப்பட்டிருக்கிறது. முனைவர் இராம குருநாதன் அவர்கள் துயில் விமர்சனக்கூட்டத்திற்கு தலைமையேற்று நாவல் குறித்து விரிவான அறிமுகவுரையை நிகழ்த்தினார் , தமிழின் மரபு இலக்கியங்களைப் பற்றிய நுண்மையான புலமை கொண்ட இராம குருநாதன் அவர்கள், நவீன இலக்கியப்படைப்புகளையும் ஆழ்ந்து வாசித்து பல்வகை விமர்சனக்கோட்பாடுகளைக் கொண்டு துல்லியமான …

துயில் – நாவலும், நோய்மை பற்றிய புரிதலும் Read More »

பறவைக்கோணம் 2

சொன்னது நீ தானா. ஊடகக்கலை பயிலும் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்விற்காகச் சென்றிருந்தேன், விவாதம் ஹிட்ச்காக்  திரைப்படங்களைப் பற்றித் திரும்பியது, ஏன் தமிழில் சஸ்பென்ஸ் திரில்லர் வகை திரைப்படங்கள் அதிகம் வருவதில்லை என்று விவாதிக்கத் துவங்கிய போது, ஒரு மாணவர் தமிழில் உங்களுக்குப் பிடித்தமான திரில்லர் இயக்குனர் யார் என்று கேட்டார், எஸ் பாலச்சந்தர் என்று சொன்னேன், மாணவர்கள் உடனே கே.பாலச்சந்தரை நினைவில் கொண்டு அவர் என்ன திரில்லர் படங்கள் எடுத்திருக்கிறார் என்று மறுகேள்வி கேட்டார்கள், அந்த …

பறவைக்கோணம் 2 Read More »

துயில் கலந்துரையாடல்

சென்னையில் உள்ள சிறந்த புத்தக விற்பனையகமான டிஸ்கவரி புக் பேலஸ் துயில் நாவல் குறித்து கலந்துரையாடல் மற்றும் வாசகர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது இந்த நிகழ்விற்கு முனைவர் ராம.குருநாதன் (சாகித்ய அகாதமி உறுப்பினர்) அவர்கள் தலைமையேற்கிறார், கூத்துப்பட்டறையைச் சேர்ந்த தம்பிச்சோழன் விமர்சன உரை நிகழ்த்த இருக்கிறார், இதைத் தொடர்ந்து வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது நிகழ்ச்சி அக்டோபர் 8ம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை நடைபெற இருக்கிறது, விருப்பமான வாசகர்கள், …

துயில் கலந்துரையாடல் Read More »

நல்லார் ஒருவர்.

அரசுப்பள்ளிகளைப் பற்றி எப்போதுமே நமக்கு இளக்காரமான மனநிலையே இருந்து வருகிறது, ஆனால் நான் அரசுப்பள்ளியில் பயின்றவன் என்ற முறையில் அதன் தரம் மற்றும் குறைபாடுகளை நன்றாக அறிவேன், பெரும்பான்மை தனியார்பள்ளிகள் கல்வியை முழுமையானதொரு வணிகமாக மாற்றியுள்ள சூழலில் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிகமிக அவசியமான ஒன்று. பெரும்பான்மையான எனது பயணங்களில் அங்குள்ள பள்ளிகளுக்குச் சென்று அதன் தற்போதைய நிலையைக் கண்டறிந்து வருகிறேன், கற்றுத்தரும் முறை மிகவும் பலவீனமாக உள்ளது என்பதே நான் …

நல்லார் ஒருவர். Read More »

இலக்கியச்சுடர் விருது

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின்  மாநில மாநாடு செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2 வரை குற்றாலத்தில் நடைபெற உள்ளது, அதையொட்டிக் கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடைபெறுகின்றன. இதில் அக்டோபர் 1ம் தேதி காலை பத்துமணிக்கு  படைப்பும் படைப்பாளியின் அனுபவங்களும் என்ற தலைப்பில்  உரையாட இருக்கிறேன், இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியவாதிகளுக்கும் சமூகப்பணியாற்றியவர்களுக்கும் விருது வழங்கி வருகிறது, இந்த ஆண்டிற்கான  சிறந்த புனைகதை ஆசிரியருக்கான இலக்கியச்சுடர் விருதை எனக்கு அறிவித்துள்ளது, சிறந்த நல்லிணக்க எழுத்துப்பணிக்கான விருது எழுத்தாளர் …

இலக்கியச்சுடர் விருது Read More »