கி.ரா.வுடன் ஒரு காலைப்பொழுது

நேற்று பாண்டிச்சேரியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனைச் சந்திப்பதற்காக சென்றிருந்தேன், என்னோடு வில்லியனூர் பழநி என்ற நண்பரும் வந்திருந்தார்,  பழநி உற்சாகமான வாசகர், மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் வாழ்க்கையைப் பற்றி கவிதை வடிவில் ஒரு நூலை எழுதியிருக்கிறார், கி.ராஜநாராயணன் வீடு விமானநிலையம் செல்லும் சாலையில் உள்ள லாஸ்பேட் ஏரியாவின் அரசுக் குடியிருப்பில் உள்ளது, பைக்கில் அவரது வீட்டை தேடிச் சென்று கொண்டிருந்தோம், மழைக்குப் பிந்திய சாலைகளில்  ஆங்காங்கே நீர்தேங்கியதால் வாகனநெருக்கடி அதிகமாக இருந்தது. முந்திய இரவு நல்ல மழை பெய்திருந்தது, …

கி.ரா.வுடன் ஒரு காலைப்பொழுது Read More »

கதைகள் அறிவோம்

குழந்தைகளுக்காக நான் எழுதியுள்ள ஏழு புத்தகங்களை கடந்த இரண்டு மாதங்களில் மதுரை, திருச்சி, ராஜபாளையம். சென்னை, ஆத்தூர் என்று பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிகளில் அறிமுகப்படுத்தியும் கதைசொல்லியும் வருகிறேன். ராஜபாளையத்தில் உள்ள ஆனந்தா பள்ளியில் நடைபெற்ற புத்தக அறிமுக நிகழ்வில் ஏழு பள்ளிமாணவர்கள் இந்தப் புத்தகங்களை வாசித்து தங்களின் கருத்துரைகளை வழங்கியது சிறப்பாக இருந்தது திருச்சி எஸ்ஆர்வி பள்ளியில் ஆசிரியர்களுக்குக் கதை சொல்வதற்கான ஒரு நாள் பயிலரங்கினை நடத்தினேன், கதை சொல்வதை கல்வியோடு இணைந்த ஒரு பாடமாகவே …

கதைகள் அறிவோம் Read More »

வரலாறும் இலக்கியமும்

Writing History and Literature: Ideas and Practice என்ற தேசியக்கருத்தரங்கு  பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு இன்ஸ்டியூட்டில் ஆகஸ்ட் 10,11,12 ஆகிய மூன்று  நாட்களில் நடைபெற உள்ளது,  இதில் கலந்து கொள்வதற்காக பாண்டிச்சேரி செல்கிறேன். •• சேலம் தமிழ்சங்கம் நடத்துகின்ற கவிஞர்மீரா நினைவு நவீன இலக்கியப் பயிலரங்கில் கலந்து கொள்ள 13,14 ஆகிய இரண்டு நாட்கள் சேலம் செல்ல இருக்கிறேன் ••

கவிதையில் நுழைந்த திருடன்

திருடன் விட்டுச் சென்றிருக்கிறான் நிலவை என்னுடைய ஜன்னலில், என்ற ரியோகானின் ஜென்கவிதையை ஒவ்வொரு முறை வாசிக்கும் போது நிலவை விடத் திருடனே மிக வியப்பாக இருக்கிறான், ஜென் கவிதையுலகின் மாஸ்டர்களில் முக்கியமானவர் துறவி ரியோகான், 1758ல் ஜப்பானின் இசிகோ பகுதியில் பிறந்தவர், இளவயதிலே பௌத்த துறவியாகி அலைந்து திரிந்தவர், இவரது மூன்று கவிதைகளில் திருடன் வருகிறான், பௌத்த நீதிக்கதைகளில் வரும் திருடனைப்போலவே தான் இவனும் இருக்கிறான், இந்தக்கவிதையை ஆழ்ந்து வாசிக்கையில் யார் அந்தத் திருடன் என்ற கேள்வி …

கவிதையில் நுழைந்த திருடன் Read More »

மலேசியப்பயணம்

மலேசியத் தமிழ் சங்கத்தின் அழைப்பின் பெயரில் ஆகஸ்ட் 18 முதல் 25 வரை மலேசியா செல்ல இருக்கிறேன், இதில் ஆகஸ்ட் 19, 20 ,21 ஆகிய மூன்று நாட்கள் கோலாலம்பூரில் சிறுகதைப் பயிலரங்கினை ஒருங்கிணைத்து நடத்த இருக்கிறேன், மற்ற நாட்களில் மலேசியாவின் பினாங்கு. கெடா. ஈப்போ ஆகிய மூன்று இடங்களில் இலக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன, விரிவான நிகழ்ச்சி நிரலை விரைவில் வெளியிடுகிறேன், இந்தப் பயணத்தின் போது மலேசியாவில் உள்ள இலக்கிய வாசகர்கள். ஆர்வலர்களைச் சந்திக்க விரும்புகிறேன், …

மலேசியப்பயணம் Read More »

மரணவீட்டின் குறிப்புகள்

நவீன நாடகப்பயிலரங்காக விளங்கி வரும் தியேட்டர் லேப் நடிகர்களை முறையாகப் பயிற்சி தந்து உருவாக்குவதில் முன்னோடியாக விளங்குகிறது, கூத்துப்பட்டறையில் பயின்ற ஜெயராவ் இதை நடத்துகிறார், அவர் ஒரு சிறந்த நடிகர், நாடக இயக்குனர், நடிப்பு பயிற்சியாளர், இவர் இயக்கிய சங்கீத பைத்தியம். மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் போன்றவை சிறப்பான நாடகங்கள். இவரது தியேட்டர் லேப்பின் சார்பில் இரண்டு வருசங்களுக்கு முன்பாக எனது நதி அறியாதது என்ற நாடகம் அலியான்சே பிரான்சேயில் நடைபெற்றது. தற்போது அவர்கள் தஸ்தாயெவ்ஸ்கியின் …

மரணவீட்டின் குறிப்புகள் Read More »

ஜாந்திபி

அமெரிக்க மேடைநாடகமான Maxwell Anderson’s Barefoot in Athens யை வாசித்துக் கொண்டிருந்தேன், அதில் சாக்ரடீஸீன் மனைவி ஜாந்திபி (Xanthippe) அவரைப்புரிந்து கொண்ட சரியான வாழ்க்கைத்துணையாகச் சித்தரிக்கப்படுகிறாள், சாக்ரடீஸின் வாழ்க்கையைப் பற்றிய இந்த நாடகம் தொலைக்காட்சிக்கான படமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது, கிறிஸ்து பிறப்பதற்கு 469 ஆண்டுகளுக்கு முன்னால் கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் நகரத்தில் பிறந்தவர் சாக்ரடீஸ். கல்தச்சரின் மகன், போர்வீரனாக இருந்திருக்கிறார்,  தன் தத்துவங்களையும், சிந்தனைகளையும் சாக்ரடீஸ் தானே எழுதவில்லை. பிளாட்டோவின் மூலமே சாக்ரடீசின் வரலாறு உலகத்திற்கு தெரிய …

ஜாந்திபி Read More »

இரண்டு விழாக்கள்

யாமம் நாவலுக்காக நான் தாகூர் விருது பெற்றதைப் பாராட்டி இரண்டு விழாக்கள் நடைபெறுகின்றன. ஜுலை 29 வெள்ளி மாலை 5.30 மணிக்கு இராஜபாளையம் அர்ஜுன்மந்திரம் திருமண மண்டபத்தில் நாற்று இலக்கிய அமைப்பு பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்துள்ளது. இதில் யாமம் குறித்த ஆய்வுரையும் கலந்துரையாடலும் நடைபெற இருக்கிறது ஜுலை 31 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர் நகர், நூறடி சாலையில் நடைபெற உள்ள கலைஇலக்கிய விழாவில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது, இதனை ஏற்பாடு செய்திருப்பவர்கள், …

இரண்டு விழாக்கள் Read More »

நாகரத்தினம் கிருஷ்ணா

எனது நண்பரும் சிறந்த எழுத்தாளருமான நாகரத்தினம் கிருஷ்ணா, பிரான்சில் வாழ்ந்துவருபவர், சொந்த ஊர் பாண்டிச்சேரி, இவரது  மார்த்தா ஹரி,  நீலக்கடல் போன்றவை குறிப்பிடத்தக்க நாவல்கள்,  பிரெஞ்சு எழுத்தாளர்களையும் சமகால பிரெஞ்சு இலக்கியப்போக்குகளையும்  தமிழில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருபவர், இவர் புதிதாக வலைப்பக்கம் ஒன்றினைத் துவக்கியிருக்கிறார், இதில் பிலிப் விலென்(Philippe Vilain) என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் ‘Pas son Genre’ (அவனுக்கு உகந்ததல்ல) நாவலைப்பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது. பார்வைக்கு https://nagarathinamkrishna.wordpress.com/mukappu/ **

பத்துவயதின் பாடல்

திங்கள்கிழமை திருடன் வந்தான். செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்குப் போனான். புதன்கிழமை புத்தி வந்தது. வியாழக்கிழமை விடுதலை ஆனான். வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தான். சனிக்கிழமை சாப்பிட்டுப் படுத்தான். அப்புறம் நடந்தது யாருக்குத் தெரியும்? சிறுவயதில் கேட்ட இந்தப் பாடலை தற்செயலாக ஒரு வாரஇதழில் வாசிக்க நேர்ந்தது, படித்தவுடனே இந்தப் பாடலைப்பாடி எவ்வளவு நாட்களாகிவிட்டது என்று தோன்றியது. என் பள்ளிவயதில் இதைப் பாடிக்கொண்டே இரவில் கிறுகிறுவானம் சுற்றியிருக்கிறேன் , தலைசுற்றியதும் நண்பர்களுடன் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு அரைத்திருடன் முக்கால்திருடன், முழுத்திருடன் …

பத்துவயதின் பாடல் Read More »