அறிவிப்புகள்

கொழும்பில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் நீங்கள் கலந்து கொள்கிறீர்களா என்று கேட்டு எனக்கு நிறைய மின்னஞ்சல்கள் வந்தபடியே உள்ளன. நான் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ** டிசம்பர் 10,11 ஆகிய இரண்டு தினங்கள் டெல்லி தமிழ்சங்கம் நடத்தும் தமிழ் இலக்கிய கருத்தரங்கில் கலந்து கொண்டு நவீன தமிழ்சிறுகதைகள் குறித்த கருத்துரை ஒன்றினை நிகழ்த்த இருக்கிறேன். ** விகடன் தீபாவளி மலரில் கண்ணகியோடு நடந்தேன் என்ற எனது நீண்ட பயண கட்டுரை வெளியாகி உள்ளது. சிலப்பதிகாரத்தை …

அறிவிப்புகள் Read More »

பிரபஞ்சன்

எனது அன்பிற்குரிய நண்பரும், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி சாதனையாளருமான எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கென புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது, பிரபஞ்சனின் கட்டுரைகள். நேர்காணல்கள். சிறுகதைகளை உள்ளடக்கிய பிரத்யேக இணையதளமாக  இது சிறப்பாக வடிவமைக்கபட்டிருக்கிறது.  பிரபஞ்சனுக்காக இந்த இணையதளத்தினை சிங்கப்பூரைச் சேர்ந்த நண்பர்  ஆர்.எம். பரணீதரன் உருவாக்கியிருக்கிறார், சங்க இலக்கியம் முதல் பிரெஞ்சு இலக்கியம் வரை ஆழ்ந்த இலக்கியரசனை கொண்ட கட்டுரைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன, எனக்கு மிகவும் பிடித்தமான கட்டுரை பானு உன் புத்தகப்பை அண்ணனிடம் இருக்கிறது …

பிரபஞ்சன் Read More »

நினைவின் சிறகுகள்.

கவிஞர்களின் வாழ்வை முதன்மைப்படுத்தி உருவாக்கபட்ட இரண்டு படங்கள் எனக்கு எப்போதும் பிடித்தமானவை. ஒன்று நோபல்பரிசு பெற்ற கவிஞரான பாப்லோ நெருதாவின் தலைமறைவுகால வாழ்வில் அவருக்கும் ஒரு தபால்காரருக்குமான நட்பைச் சொல்லும் Il Postino என்ற இத்தாலியப்படம். Michael Radford இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியானது. படம் முழுவதும் கவித்துவமான உரையாடல்கள். இசையும் ஒளிப்பதிவும் நடிப்பும் அற்புதமாக அமைந்த படம். ஒரு கவிஞன் எப்படி உருவாகிறான் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி. மற்றொரு படம் Darioush Mehrjui …

நினைவின் சிறகுகள். Read More »

துயில்

இரண்டு ஆண்டுகளாக எழுதி வந்த எனது புதிய நாவல் துயில் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது, இந்த நாவலின் இறுதிவடிவத்தை சீர்செய்து கொண்டிருப்பதால் இணையத்தில் எழுத நேரம் கிடைப்பதில்லை, ஒரு நாவலை எழுதுவதற்கு எனக்கு ஒன்றரை வருசங்கள் தேவைப்படுகிறது, அதை எடிட் செய்ய தினமும் ஆறு மணி நேரம் வேலை செய்தால் கூட ஆறு   மாதமாகி விடுகிறது. நாவலை எழுதி இறுதிவடிவம் கொண்டுவருவது எப்போதுமே ஒரு சவால், ஆனால் அந்த உருமாற்றம் தரும் ஆனந்தம் அலாதியானது உயிர்மை …

துயில் Read More »

மரங்கள்

நேற்று மரங்கள் என்ற 16 பக்கமுள்ள சிறுவெளியீடு ஒன்றினை ஒசூர் நண்பர் பாலசுந்தரம் அனுப்பியிருந்தார். இரவில் வாசித்தேன்.  மரங்களை முதன்மை படுத்திய அழகான சிறுதொகுப்பு . மிக  நேர்த்தியாக உருவாக்கபட்டிருக்கிறது. இது போன்ற வெளியீடுகளை நண்பர்கள் சுட்டிக்காட்டாமல் போயிருந்தால் தவறவிட்டிருப்பேன். நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் மரங்கள் பற்றிய உரைநடைக் கவிதையை மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இதைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்திருப்பவர் கதிரவன். இத்தொகுப்பு மரங்களைப் பற்றி கல்யாண்ஜி. தேவதச்சன் இருவரது ஒரு கவிதையும் உள்ளடக்கியதாக …

மரங்கள் Read More »

இரண்டு குறும்படங்கள்.

அமெரிக்க இயக்குனரான ராமின் பஹ்ரானியின் (Ramin Bahrani)பிளாஸ்டிக் பேக் என்ற குறும்படம் பதினெட்டு நிமிசங்கள் ஒடக்ககூடியது. இந்தப் படத்திற்கு பின்னணி குரல் கொடுத்திருப்பவர் பிரபல இயக்குனர் வெர்னர் ஹெர்சாக். ஒரு பெண் கடையில் பொருள்கள் வாங்குகிறாள். அதை ஒரு பிளாஸ்டிக் கேரிபேக்கில் போட்டுத் தருகிறார்கள். அங்கிருந்து அந்த பிளாஸ்டிக் பேக் எங்கு செல்கிறது. எதை எல்லாம் சந்திக்கிறது என்று  அதன் முடிவில்லாத பயணமே இந்தக் குறும்படம். பல நேரங்களில் பிளாஸ்டிக் என்பது இன்றைய வணிகச் சந்தையின் குறியீடு …

இரண்டு குறும்படங்கள். Read More »

பார்க்க வந்த இலை

என்னைப்பார்க்க ஒரு வாசகர் வந்திருந்தார். அவர் கையில் எங்கோ வழியில் பறித்த ஒரு இலையிருந்தது. பச்சை நிறத்தில் அகலமான இலை. அவர் சுவாரஸ்யமாக இலக்கியத் தகவல்களை பேசிக் கொண்டேயிருந்தார். எனக்கோ அந்த இலையிடமிருந்து கவனத்தை அகற்ற முடியவில்லை. எவ்வளவு பசுமை. எவ்வளவு அழகு. அந்த இலை ஏன் என்னைப் பார்க்க வந்திருக்கிறது. இந்த நிமிசம் முன்பு வரை எங்கிருந்தது அந்த இலை. எந்த செடியின் இலையது. நான் அதை இதுவரை கண்டதேயில்லையே. எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறது. …

பார்க்க வந்த இலை Read More »

காண் என்றது இயற்கை

எனது புதிய புத்தகமான காண் என்றது இயற்கை குறித்து கவிஞர் கலாப்ரியாவின் கட்டுரை. •• காண் என்றது இயற்கை – கவிஞர் கலாப்ரியா ’நதி’ மலையாள சினிமா என்று நினைவு. வயலாரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.இது மொழிபெயர்ப்பு “ உன்னைக் குறித்து நான் பாடிய பாட்டுக்குஓராயிரம் அலைகள் சுருதியிட்டன உன் மனோராஜ்ஜியத்தின் நீலக்கடம்பில் நீயென் விளையாட்டோடத்தைக் கட்டிப் போட்டாய், அன்பே கட்டிப் போட்டாய்.” ஒரு நதிக்கரை. இக்கரைக்கும் அக்கரைக்கும் ஓடுகிற ஓடம், ஓட்டுகிற ஓடக்காரன்….ஓடத்தை சற்றே ஒரு …

காண் என்றது இயற்கை Read More »

சினிமா மின்னல்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச்சேர்ந்தவர் மின்னல். இவரது இயற்பெயர் உதுமான் முகையதீன்.  ஜனசக்தி இதழின் பத்திரிக்கையாளராக துவங்கி விளம்பர நிறுவன அதிபராகவும், படத்தயாரிப்பாளராகவும் இயங்கிய அவர் தனது சினிமா அனுபவங்களை தொகுத்து மறக்க முடியாத திரைப்படத் தயாரிப்பு அனுபவங்கள் என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். நர்மதா பதிப்பகம் 2004ல் இதை வெளியிட்டுள்ளது. மிக சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம் தந்த புத்தகமிது. சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் தமிழ்முரசில் இதன் முதற்பாகம் தொடராக வெளியாகியிருக்கிறது. 2005ல்  நான் மலையாளத் திரைப்பட இயக்குனர் ஜான் …

சினிமா மின்னல். Read More »

நன்றி பாவண்ணன்

நவீன தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் எழுத்தாளர் பாவண்ணன், மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருப்பவர், தேர்ந்த வாசகர், அவரது சிறுகதைகளை எனக்கு மிகவும் பிடிக்கும், அவை தனித்துவமான அனுபவமும் கச்சிதமான மொழிநடையும் கொண்டவை,  தான் வாசித்த புத்தகங்கள் குறித்து நுட்பமாக தொடர்ந்து எழுதி வருபவர் பாவண்ணன், அது மிகுந்த பாராட்டிற்குரியது அவர் எனது புதிய நூலான செகாவின் மீது பனி பெய்கிறது குறித்து திண்ணை இணைய இதழில் வெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது” என்று ஒரு …

நன்றி பாவண்ணன் Read More »