ஒளிராத நட்சத்திரம்

ஹாலிவுட் இயக்குனர்களில் பில்லி வொயில்டர் மிக முக்கியமானவர். இவரது The Apartment, Some Like It Hot, Sabrina, Double Indemnity,The LostWeekend  போன்ற படங்களைதேடித்தேடி பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இவரது ஆகச்சிறந்தபடமாக நான் எப்போதும் கருதுவது  சன்செட் பொலிவார்டு (SUNSET BOULEVARD).  இருபதுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தை கறுப்புவெள்ளை காவியம் என்றே சொல்வேன். சினிமாவைப் பற்றிய சினிமா என்பது பெரும்பாலும் தோல்வியுற்ற வகையாகவே இருந்திருக்கிறது. அரிதாகவே ஒன்றிரண்டு படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. பில்லிவைல்டரின் இப்படம் …

ஒளிராத நட்சத்திரம் Read More »

விருது

இலக்கியம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அக்கறை குறித்த எனது பங்களிப்பிற்காக  ஜேசிஸ் அமைப்பு இளம் சாதனையாளர் என்ற விருதை எனக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது,  இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி செப்டம்பர் 15ம் தேதி மாலை 6 மணி அளவில் ராணிப்பேட்டையில் நடைபெறுகிறது.

ஷாஜியின் நூலரங்கு

உயிர்மை நடத்தும் ஷாஜியின்  இசையின் தனிமை நூல்  பற்றிய ஒரு உரையாடல் நிகழ்வு 2010 செப்டம்பர் 18 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் சென்னை ஃபிலிம் சேம்பர் திரை அரங்கில் நடைபெற உள்ளது, இதில் நான் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறேன், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படியாக அழைக்கிறேன் •• ஷாஜியின் இசையின் தனிமை நூல் ஒரு உரையாடல் 2010 செப்டம்பர் 18 சனிக்கிழமை மாலை 6 மணி ஃபிலிம் சேம்பர் திரை அரங்கம் ஜெமினி, …

ஷாஜியின் நூலரங்கு Read More »

ஒரு வாழ்க்கையின் துகள்கள்

எல்லா திருமணங்களிலும் இரண்டு திருமணங்கள் இருக்கின்றன. ஒன்று அவனுடையது. மற்றது அவளுடையது. அவனுடையது அவளுடையதை விட மேலானதாக இருக்கிறது. – ஜெஸ்ஸி பெர்னார்டு மைதிலி சிவராமன் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர், பெண்உரிமைகள் சார்ந்த தீவிர செயல்பாட்டாளர். அவர் தனது தாய்வழிப்பாட்டியான சுப்புலட்சுமியின்நாட்குறிப்பு களைச் சேகரித்து அதன் வழியே அவரது வாழ்க்கை சித்திரத்தை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் வெளியான அப்புத்தகம் தற்போது பாரதி புத்தகாலயம் சார்பில் கி. ரமேஷால் மொழியாக்கம் செய்யப்பட்டு  ஒரு வாழ்க்கையின் …

ஒரு வாழ்க்கையின் துகள்கள் Read More »

நன்றி

மதுரையில் எனது ஐந்து புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது, அரங்கு நிறைந்து இடமின்றி 200 பேர்களுக்கும் மேலாக வெளியே நின்று கொண்டிருந்தனர், எனது நண்பர்கள். விருப்பமான எழுத்தாளர்கள். அன்பிற்குரிய வாசகர்கள். இணைய பதிவாளர்கள். பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக்கினார்கள். என்னையும் எழுத்தையும் நேசிக்கும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், எனது புத்தகங்களை தொடர்ந்து வெளியிடும் உயிர்மை பதிப்பகத்திற்கும் அன்பு நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும். என் …

நன்றி Read More »

புள்ளியும் கோடும்

புள்ளியும் கோடும் -கணிதம் வழியாக ஒரு காதல் என்ற குறும்படம் ஒன்றினை இணையத்தில் பார்த்தேன். 1965ம் ஆண்டு உருவாகக்கபட்ட இப்படம் நார்டன் ஜஸ்டரின் புத்தகத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டுள்ளது. எம்.ஜி. எம் நிறுவனம் தயாரித்துள்ள இக்குறும்படம்  பத்து நிமிசங்கள் ஒடக்கூடியது. கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கணிதத்தை இவ்வளவு எளிமையான ஒரு காதல் கதையாக உருமாற்ற முடிந்திருப்பது பெரிதும் வியப்பளித்தது.  ஒரு புள்ளியைக் காதலிக்கும் நேர்கோட்டின் கதை என்ற புனைவு  ரீதியிலும் மிக …

புள்ளியும் கோடும் Read More »

நூலாறு

நேற்று வேலூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.  ஆழிபதிப்பகம் நடத்தும் நண்பர் செந்தில்நாதன்.  தன்னுடைய அரிய முயற்சியால் இந்தப் புத்தக கண்காட்சியைத் தனது ஆழி அறக்கட்டளை மற்றும் வேலூர் வாசகர் பேரவை அமைப்புடன் இணைந்து முதன்முறையாக துவக்கியுள்ளார்.  புத்தகக் கண்காட்சி அல்லது புத்தக திருவிழா என்பதற்கு மாற்றாக நூலாறு 2010 என்று அவர்கள் விளம்பரப்படுத்தியிருந்தது பிடித்திருந்தது. எழுத்தாளர் அழகிய பெரியவன் இந்தப் புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பில் அயராது ஒடியாடி வேலை செய்து கொண்டிருந்தார், புத்தகங்கள் மீது அவர் கொண்ட …

நூலாறு Read More »

இது வேறு சினிமா

பாங்காங்கில் உள்ள திரைப்படவளாகம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். ஒரே இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள்  இருந்தன. ஆனால் அதில் ஒன்றில் கூட பாங்காங்கில் தயாரிக்கபட்ட படங்கள்திரையிடப்படவில்லை. அத்தனையும் ஹாலிவுட் படங்கள்.அந்தத் திரைப்படங்களைக் காண வருகின்றவர்களில் பெரும்பான்மை உள்ளுர் இளைஞர்கள். அவர்களுக்குச் சினிமா பார்ப்பது பெண்களுடன் சேர்ந்து பொழுது போக்குவதற்கான கேளிக்கை நிகழ்வு.. சினிமா அரங்கம் வணிகத்தின் அத்தனை சாத்தியப்பாடுகளும் நிரம்பியதாக இருந்தது. அங்கே சினிமாவும் காட்டுகிறார்கள் என்பதே உண்மை. . அமெரிக்க வணிக சினிமாவின் சந்தை இன்று உலகெங்கும் …

இது வேறு சினிமா Read More »

ஜல்லிக்கட்டு

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எனது நண்பர் ராம்நாராயண் எனும் ராம்ஜி ஹோம்டிவி என்ற நியூடெல்லியில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்திற்காக ஜல்லிகட்டு பற்றிய ஆவணப்படம் ஒன்றினை இயக்க முனைந்தார். அப்போது நான் அவருடைய அறைத்தோழனாக இருந்தேன். ராம்ஜி பூனா திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் பயின்றவர். இன்று தொலைக்காட்சி தொடர்கள், விவாத நிகழ்வுகள் என்று விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது முதல் ஆவணப்படமது என்பதால் நாங்கள் சிறிய குழுவாக செயல்பட்டு அதை சிறப்பாக …

ஜல்லிக்கட்டு Read More »

எனது நூல் வெளியீட்டு விழா

எனது ஐந்து புதிய நூல்களுக்கான வெளியீட்டு விழா செப்டம்பர் 5ம் தேதி காலை 9.30 மணி அளவில் மதுரையில் நடைபெற உள்ளது வெளியிடப்படும் நூல்கள் 1) அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்த்து – சிறுகதைத் தொகுப்பு 2) காண் என்றது இயற்கை – இயற்கை அறிதல் கட்டுரைகள் 3) இருள் இனிது ஒளி இனிது – உலக சினிமா கட்டுரைகள் 4) செகாவின் மீது பனி பெய்கிறது – ருஷ்ய இலக்கிய ஆளுமைகள் 5) குறத்தி முடுக்கின் …

எனது நூல் வெளியீட்டு விழா Read More »