ஜராதுஷ்ட்ரா.

கடந்த சில வருசங்களில் நான் வாசித்த மொழிபெயர்ப்பு புத்தகங்களில் ஆகச்சிறந்தது நீட்ஷேயின் ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் என்ற புத்தகமே. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. நீட்ஷேயை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் ரவி. இவர் குவளை கண்ணன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறார். மாயா பஜார், பிள்ளை விளையாட்டு என்று இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன. நீட்ஷேயின் ஒரு படைப்பு முழுமையாக தமிழில் வெளியாவது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன். கடவுள் இறந்து போய்விட்டார் …

ஜராதுஷ்ட்ரா. Read More »

வெண்ணிற இரவுகள்.

தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது என்பது பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கைகுலுக்குவது போன்றது. அவனது நடுக்கமும் துயரமும் வலியும் நம்மிடம் உடனே தொற்றிக் கொண்டுவிடும்.  பின் ஏன் தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க வேண்டும்.  அதற்கொரு விசேசமான காரணமிருக்கிறது. அது தஸ்தாயெவ்ஸ்கியை படிக்கும் போது நமது அந்தரங்கம் மிக நெருக்கமாக அவர் எழுத்தின் வழியே அடையாளம் காட்டப்படுகிறது.  நமது மனதை திறந்து அதன் உள்ளே ரகசியங்கள் அவமானங்கள் என்று நாம் மூடிமூடி வைத்துள்ள அத்தனையும் மறுபரிசீலனை செய்வதற்காகவே அவரை வாசிக்க வேண்டியிருக்கிறது. நம்மில் …

வெண்ணிற இரவுகள். Read More »

ஹரித்துவாரில் பெய்யும் மழை

என் இருபத்தி நான்காவது வயதில்  ஹரித்துவாரில் இறங்கி நடக்க துவங்கிய போது மழை பெய்து கொண்டிருந்தது. சில வாரங்களுக்கு முன்பு தான் மழைக்காலம் துவங்கியிருந்தது. எனது பயண வழியெங்கும் மழையின் தடங்கள். ஈரமேறிய கற்கள், மரங்கள், ரயில்நிலையங்கள், சிமெண்ட் பெஞ்சுகளை கடந்தே ஹரித்துவாருக்கு வந்திருந்தேன். மழைக்காலத்தில் பயணம் செய்வது  அலாதியானது. பழகிப்பிரிந்த நண்பருடன் மீண்டும் சேர்ந்து பயணம் செய்வது போன்றது. அடர்த்தியான மழை. ஷ்ராவன மாதத்து மழை எளிதில் அடங்காது என்பார்கள். அன்றாடம் கங்கையை பார்த்து களிக்கும் …

ஹரித்துவாரில் பெய்யும் மழை Read More »

யானை பார்த்தல்

மகாபலிபுரத்தில் ஒரு கல்யானையின் முன்னால் அமர்ந்திருக்கிறேன். அதை பார்க்க பார்க்க மனது களிப்புறுகிறது. யானை பார்ப்பது என்பது பால்யத்தின்  விளையாட்டு.  வீதியில் யானை வரும்போது யானையை பார்க்க குழந்தைகளும் பெண்களும் ஆசையாக வீதிக்கு வருவார்கள். வாசற்படி தாண்டால் நின்று வேடிக்கை பார்க்கும் இளம் பெண்களும் உண்டு.  யானை கம்பீரமாக அசைந்து உலா போகும். என்ன பார்க்கிறார்கள் யானையிடம் என்ன பார்க்கிறார்கள். மஹாமௌனம் கண்முன்னே ஊர்ந்து போகிறது. யானை தன்னை வேடிக்கை பார்க்கும் உலகின் மீது அக்கறை கொள்வதில்லை. …

யானை பார்த்தல் Read More »

குரசேவாவின் நூறுவயது.

அகிரா குரசேவாவிற்கு இன்று நூறாவது பிறந்த நாள்.  உலக சினிமாவின் தனிப்பெரும் ஆளுமையான குரசேவா 1910ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பிறந்தவர். தற்செயலாக சில நாட்களுக்கு முன்பு அகிரா குரசேவாவின் வாழ்க்கை வரலாற்று நூலான Something Like An Autobiography  யை ஒரு தகவலுக்காக புரட்டிக் கொண்டிருந்தேன்.  மௌனப்படங்கள் திரையிடும் அரங்குகளில் தனது சகோதரன் பின்னணி இசை அமைப்பவராக வாழ்ந்ததையும் அவரது மரணத்தையும் பற்றிய குரசேவாவின் நினைவுகளை மறுபடி வாசித்தபோது அது தனியே திரைப்படமாக்க வேண்டிய …

குரசேவாவின் நூறுவயது. Read More »

கால்களால் சிந்திக்கிறேன்.

கனடாவில் வாழும் கவிஞர் மெலிஞ்சிமுத்தனுடன் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது அவர் தினமும் பத்து மைல் தூரமாவது நடந்து போவதாகவும் அப்படி நடக்கும்போதெல்லாம் எதையோ யோசித்தபடியே நடப்பது தனது இயல்பு என்றார். என்ன யோசிப்பீர்கள் என்று கேட்டதும் அவர் சிரித்தபடியே  உண்மையில் நான் கால்களால் சிந்தித்தபடியே நடக்கிறேன் என்றார். எனக்கு அவர் சொன்ன கால்களால் சிந்திக்கிறேன் என்ற பிரயோகம் பிடித்திருந்தது. நடைப்பயிற்சியின் போது நானும் அப்படியாக உணர்ந்திருக்கிறேன். கால்களால் சிந்திப்பது என்பது உயர்வானது என்று தோன்றியது. …

கால்களால் சிந்திக்கிறேன். Read More »

கோமாளியும் கதை சொல்லியும்

பள்ளிச் சிறுவர்களுக்கு கதை சொல்வது பெரிய சவால். பேசத் தெரிந்த எவரும் எந்த இலக்கிய கூட்டத்திலும் எளிதாகப் பேசி மேற்கோள்கள் காட்டி கைதட்டு வாங்கி விட முடியும். ஆனால் குழந்தைகளுக்கு கதை சொல்வது அப்படியானதில்லை. அதற்கு நிறைய கதைகளும்சுவாரஸ்யமான கதை சொல்லும் தன்மையும்பகடியும்நகைச்சுவையும்கேட்பவரை அதிகம் கதை சொல்ல வைக்கும் திறனும் தேவை.  இத்தனையிலும் முக்கியமானது தன்னைத் தானே கேலி செய்து கொள்ள தெரிந்திருக்க வேண்டும் என்பதே, கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிகள் நம்மிடம் அதிகமில்லை. …

கோமாளியும் கதை சொல்லியும் Read More »

சினிமா இணையதளங்கள்

இரண்டு நாட்களின் முன்பாக டி.சுப்ரமணியம் எனும் திரைப்பட துணைஇயக்குனர் உலகத்திரைப்படங்கள், திரைப்பட இயக்குனர்கள் குறித்த இணையதளங்களை சிபாரிசு செய்யும்படியாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்காக இந்த இணையதள சுட்டிகளை சிபாரிசு செய்திருந்தேன். அவரை போல ஆர்வம் உள்ளவர்கள் பலரும் இருப்பதால் அதே பட்டியலை முன்வைக்கிறேன். இந்தஇணையதளங்கள் ஒரளவு உலக சினிமாவின் முக்கிய போக்குகளை அறிந்து கொள்ள உதவக்கூடியவை. புகழ்பெற்ற இயக்குனர்கள். சினிமாகட்டுரைகள், சமகால இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான தொடர்பு. பல்வேறு தொழில்நுட்ப தகவல்கள், அறிமுகங்கள் என இவை உலகசினிமாவின் பல்வேறு …

சினிமா இணையதளங்கள் Read More »

மௌனப்பனி.

2007ம் ஆண்டிற்கான தேசிய விருது பட்டியலில் சிறந்த முதல்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது உள்ளிட்ட விருதுகளையும் ஒசியான் விருது உள்ளிட்ட 18 முக்கிய விருதுகளை பெற்றுள்ள ஊழ்ர்க்ஷ்ங்ய்  சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிக முக்கியமானதாகும். சிவாஜி சந்திரபூஷன் இயக்கத்தில் உருவான இப்படம் இமயமலையின் பனிசூழ்ந்த தனிமையில் வாழும் ஒரு குடும்பத்தின் கதையை விவரிக்கிறது. படத்தை முழுமையாக கறுப்பு வெள்ளையில் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதே இதன் தனிச்சிறப்புதற்செயலாக இந்த படத்தின் சிறிய முன்னோட்டம் ஒன்றினை இணையத்தில் கண்டேன். …

மௌனப்பனி. Read More »

அழைக்கும் நிழல்

இரண்டு மாதங்களின் முன்பு காரில் பெங்களுருக்கு சென்று கொண்டிருந்தேன். வேலூரை தாண்டியதும் வழக்கமான பிரதான சாலையில் செல்லாமல் சிறுநகரங்களின் வழியில் போகலாம் என்று தோன்றியது. பிரதான சாலையை விட்டு விலகிய பாதையில் செல்ல துவங்கினேன். புதிய நான்குவழி சாலைகள் எல்லா ஊர்களையும் விலக்கி தனியே சென்று கொண்டிருக்கிறது. எந்த ஊரை கடந்துசெல்கிறோம் என்று கூட தெரிவதில்லை. அன்று நான் சென்ற பாதை சீராக இல்லை. ஆனால் சிறியதும் பெரியதுமான ஊர்கள். வீடுகள், ,  பரபரப்பான மனித இயக்கங்கள். …

அழைக்கும் நிழல் Read More »