காருகுறிச்சியார்.

              சில நாட்களுக்கு முன்பாக நாதஸ்வர மாமேதை காருகுறிச்சி அருணாசலத்தின்  சொந்த ஊரான காருகுறிச்சிக்கு சென்றிருந்தேன். சிறிய கிராமம். அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ளது. ஊரின் நுழைவாயிலில் கையில் நாதஸ்வரத்துடன் உள்ள காருகுறிச்சியார் சிலை காணப்படுகிறது. சிலை செய்தவருக்கு காருகுறிச்சியார் மீது என்ன கோபமோ தெரியவில்லை. நாதஸ்வரம் வளைந்து நெளிந்து போயிருக்கிறது. காருகுறிச்சியின் பூர்வீக வீடு விற்கபட்டு தற்போது யாரோ குடியிருக்கிறார்கள். அந்த வீட்டில் இருந்த பெண்மணி அடிக்கடி …

காருகுறிச்சியார். Read More »

மனசாட்சியின் பாலம்

  வாழ்வின் சுவாரஸ்யங்களில் ஒன்று எதிர்பாராமை. யார் யாரை எப்போது சந்தித்து கொள்வார். ஒரு மனிதன் எப்போது வாழ்வில் முன்னேறுவான். எப்போது வீழ்ச்சியடைவான். சாவு எப்படி எப்போது நேரும் என்று எதிர்பாராமையின் கிளைகளிலிருந்தே பல நாவல்கள் பிறக்கின்றன குறிப்பாக இறை நம்பிக்கைக்கு ஆழமான காரணம் எதிர்பாராமையை சந்திக்க வேண்டிய தைரியமும் நம்பிக்கையும் இல்லாததே . வாழ்வு முன்கூட்டி தீர்மானிக்கபட்ட ஒரு வரைபடம் அதிலிருந்து ஒரு துளி கூட மாற்றம் ஏற்பட்டுவிட முடியாது என்று நம்பும் ஒரு தத்துவமும் வாழ்வு …

மனசாட்சியின் பாலம் Read More »

நாரத ராமாயணம்.

புதுமைபித்தனின் நாரத ராமாயணம் மொத்தம் 46 பக்கங்களே கொண்டது. இந்நூல் வெளியாகி அறுபம் வருசங்களுக்கும் மேலாகிறது. புதுமைபித்தனின் சிறுகதைகள், இலக்கிய கட்டுரைகள் கொண்டாப்பட்ட அளவில் நாரத ராமாயணம் பெரிதாக கொண்டாடப்படவில்லை. அப்படி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று கூட பலரும் அறிந்திருக்கவில்லை. புதுமைபித்தனின் பகடி எழுத்தின் உன்னதம் இதுவே என்பேன். இது வெறுமனே ராமாயணத்தை கேலி செய்யும் ஒரு புனைவுமட்டுமில்லை. மாறாக ராமாயணத்தை முன்வைத்து புதுமைபித்தன் கலாச்சார அரசியலை விமர்சனம் செய்கிறார். இந்திய கலாச்சாரத்தில் இதிகாசங்கள் உருவாக்கி …

நாரத ராமாயணம். Read More »

எலிக்கடி.

சென்னைக்கு வந்த புதிதில்  மாம்பலத்தில் ஒரு நண்பரது அறையில் தங்கியிருந்தேன். அந்த அறையை ஒரு சர்வாதிகாரி நிர்வகித்து வந்தார். அவரது கட்டுபாட்டின் கீழே நான்கு வேலையில்லாத பசங்கள் தங்கியிருந்தார்கள். நான் ஐந்தாவது ஆளாக ஊரிலிருந்து கிளம்பி அந் அறைக்கு வந்திருந்தேன்.  (அவரை ஏன் சர்வாதிகாரி என்கிறேன் என்பதை இரண்டு பத்திகளுக்கு பிறகு நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். )  அறைக்கு வந்த முதல்நாள் அவர் என்னை தனியே அழைத்து கையில் பத்து ருபாய் தந்து வெளியே சாப்பிட்டு கொள்ளும்படியாக அன்புக் கட்டளையிட்டார். …

எலிக்கடி. Read More »

சிறு குறிப்பு

இயக்குனர் பாலாவின் புதிய திரைப்படமான அவன் இவன் படப்பிடிப்பு செங்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்று வருகிறது. வசனம் எழுதுவதால் படப்பிடிப்பு தளத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இருந்துவருகிறேன். அங்கே இணையத்தொடர்பு மிக மெதுவாக இருப்பதால் தொடர்ந்து இணையத்தில் எழுத சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புவது கூட மூன்று நாட்களுக்கு ஒரு முறையே சாத்தியமாகிறது. படப்பிடிப்பு மார்ச் இறுதி வரை தொடர்கிறது. இன்னொரு பக்கம்  புதிய நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருப்பதால் வேறு விசயங்களில் …

சிறு குறிப்பு Read More »

இணையத்தில் கர்ண மோட்சம்

  நான் கதை வசனம் எழுதி முரளி மனோகர் இயக்கிய தேசிய விருது பெற்ற  குறும்பட்ம் கர்ண மோட்சம்’  ஆங்கில சப்டைட்டில்களுடன் இரண்டு பாகங்களாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது   அதற்கான இணைப்புகள் :   https://www.youtube.com/watch?v=3W87_I79JKA   https://www.youtube.com/watch?v=PgcqGpl3OqM

சில பாடல்கள்

எனது நண்பரும் திரைப்படஇயக்குனருமான சுகா இயக்கும் படித்துறை படத்திற்காக இளையராஜாவின் இசையில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். இசைமேதை இளையராஜாவை சந்தித்து பேசிய நாட்கள் மறக்க முடியாத அனுபவம். கல்லூரி வயதிலிருந்து இன்று வரை நான் இளையராஜாவின் ரசிகனே. எனது பயணங்களில் எப்போதுமே துணை அவரது பாடல்களே. இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. இந்த படத்தினை தயாரித்திருப்பவர் நடிகர் ஆர்யா. இலக்கியத்திலும் இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் சுகா ( எங்களுக்கு சுரேஷ் கண்ணன். ) …

சில பாடல்கள் Read More »

இரவு விளக்குகள்

விடிகாலை நாலு மணிக்கு உறக்கம் கலைந்து எழுந்து கொண்டேன். அறையில் ஒரேயொரு இரவு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இரவு விளக்குகள் நம் உறக்கத்தை உற்று பார்த்தபடியே இருக்கின்றன. இந்த இரவில் உலகில் எத்தனை ஆயிரமாயிரம் இரவு விளக்குகள் விழித்து கொண்டிருக்கும். அவை என்ன காண்கின்றன. இரவு விளக்குகள் தன் ஒளியை தானே  முகத்திரையிட்டு ஒளித்து கொள்கின்றன. அவை நம் உறக்கத்தின் துணைவன் போலும். பொதுவில் இரவு விளக்குகள் அதிகம் நம் கவனத்தை கவராதவை. அதன் வெளிச்சத்தில் அறை நிற …

இரவு விளக்குகள் Read More »

சிறு செடி

விரல் அளவே உள்ள சிறுசெடி ஒன்று என் முன்னால் நின்று கொண்டிருக்கிறது. காலையில் இருந்தே அதை பார்த்து கொண்டிருக்கிறேன்மெலிந்த உடல். இரண்டே இலைகள்.பூக்கள் இல்லை. செடி தனியே அசைந்து கொண்டிருக்கிறது. சிறுசெடி தான் ஆனாலும் முழுமையாக இருக்கிறது. வெகுநேர்த்தியாக இருக்கிறது. தன்னை பற்றி நிறைய பெருமை கொண்டிருக்கிறதோ எனும்படியாக அதன் கம்பீரமிருக்கிறது. சிறுசெடியோடு எப்படி பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. அதை கண்ணால் காண்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நான் பேசவே விரும்புகிறேன். என் …

சிறு செடி Read More »

மலை தோன்றுகிறது

மாபெரும் மலையின் முன்னால் அமர்ந்திருக்கிறேன். நான் தங்கியுள்ள வீடு அரைவட்டமாக மலைசூழ உள்ளது. இது ஒரு பண்ணை வீடு. பொதிகை மலையின் இடுப்பில் அமர்ந்திருப்பது போன்றிருக்கிறது.மேகங்கள் புகை செல்வது போல நிதானமாக அதிக வேகமின்றி கடந்து சென்றபடியே இருக்கின்றன. நீர்தாரை வடிவது போலதானிருக்கிறது. மேகங்களின் ஊற்று எங்கோ தொலைவில் இருக்கிறது போலும். வடிந்து ஒடி மேகங்கள் மலைகளின் மீது வழிந்தபடியே இருக்கின்றன. மலையின் மிக உயரத்தில் உள்ள மரம் ஒன்று எங்கோ இருக்கும் மரம் ஒன்றின் நிழல் …

மலை தோன்றுகிறது Read More »