சென்னை இலக்கியத் திருவிழா 2025

சென்னை இலக்கியத் திருவிழா 2025 காஞ்சிபுரத்தில் மார்ச் 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெறுகிறது

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மார்ச் 8 மதியம் 12.30 மணிக்கு கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலு குறித்து உரையாற்றுகிறேன்

காஞ்சிபுரம் அருகிலுள்ள நெய்யாடுபாக்கம் கிராமத்தில் பிறந்த நெ.து.சுந்தரவடிவேலு காஞ்சிபுரத்தில் ஆரம்பக் கல்வி பயின்றவர்.

தமிழக அரசின் கல்வித்துறை இயக்குநராகவும் பொது நூலக இயக்குராகவும் பதவி வகித்தவர்.

காமராஜர் ஆட்சியின் போது மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டதிற்கு முக்கிய காரணமாக விளங்கியவர்.

பெரியாரின் தொண்டர். அண்ணாவின் விருப்பத்திற்குரிய கல்வியாளர். சென்னை பல்கலைகழகத் துணைவேந்தராகப் பதவி வகித்தவர்.

சோவியத் யூனியனுக்குப் பயணம் செய்து அங்குள்ள கல்விச்சூழல் பற்றி நூல் எழுதியிருக்கிறார். சர்வதேச அளவில் பல்வேறு கல்விக்கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் இலவசக்கல்வி மற்றும் இலவசச் சீருடைத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டதற்கு காரணமாக விளங்கியவர்.

நெ.து.சுந்தரவடிவேலு தனது வாழ்க்கை வரலாற்றை மூன்று தொகுதிகளாக எழுதியிருக்கிறார்.

காஞ்சிபுரத்தில் நடைபெறும் இலக்கியத் திருவிழாவில் அவரைப் பற்றி பேசுவது பொருத்தமானது.

0Shares
0