சொல்வனம் இணைய இதழ் சார்பில் வங்காள இலக்கியத்திற்கான சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறார்கள்.

மிகச்சிரத்தையாக, விரிந்த தளத்தில் செறிவாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். ஒரு இளம்வாசகனுக்கு இந்தச் சிறப்பிதழ் பெரும்பொக்கிஷமாகவே அமையும்.
சொல்வனம் ஆசிரியர் குழு சிறப்பான முன்னெடுப்பினை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிக்குக் காரணமாக இருந்த பாஸ்டன் பாலா, நம்பிகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் குழுவினர், பங்களித்த படைப்பாளிகள் அனைவருக்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள்.
இந்தச் சிறப்பிதழுக்காக அற்புதமான லோகோ அமைத்தவருக்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள்.

சொல்வனம் இதழில் சத்யஜித்ரே இயக்கிய தாகூர் பற்றிய ஆவணப்படம் குறித்து எழுதியிருக்கிறேன்.