
டிசம்பர் 25 மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா தேசாந்திரி பதிப்பகத்தில் நடைபெறவுள்ளது.
வழக்கமாக ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் எனது புத்தக வெளியீட்டு விழா இந்த ஆண்டு கரோனா காரணமாக அரங்க நிகழ்வாக நடைபெறவில்லை.
ஆகவே டிசம்பர் 25 மாலை நாலரை மணிக்கு தேசாந்திரி பதிப்பகத்திலிருந்து ஸ்ருதி டிவி நேரலை நிகழ்ச்சியின் மூலம் புத்தக வெளியீடு மற்றும் வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதில் விருப்பமான வாசகர்கள் கலந்து கொண்டு கேள்விகள் கேட்கலாம்.

நேரலை விபரங்கள் குறித்து கூடுதல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.