புதுக்கோட்டை புத்தகத் திருவிழா

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா மூன்றாம் ஆண்டில் சிறப்பாக துவங்கியுள்ளது. 15.02.2019 துவக்க நாளின் உரையை நான் நிகழ்த்தினேன். நண்பர் தங்கம் மூர்த்தி இதற்கு முக்கிய காரணமாக விளங்கினார். தேசாந்திரி பதிப்பகம் இந்த கண்காட்சியில் அரங்கு அமைத்துள்ளது.  கவிஞர் முத்துநிலவன்,  பேராசிரியர் கருப்பையா,  வரதன் உள்ளிட்ட நண்பர்கள் பலரையும் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.  நிகழ்வை ஒருங்கிணைத்த அனைவருக்கும் நன்றிகள்

0Shares
0