வீட்டில் ஒருத்தி.
புதிய சிறுகதை. ஏப்ரல் 30 2026 “நாளைக்கு வான்மதியை நிச்சயம் பண்ண வர்றாங்க. நீங்க வந்து இருந்து நடத்தித் தரணும்மா“ என்று சொன்னாள் வடிவு வெள்ளித் தட்டிலிருந்த தோசையைப் பிய்த்து எள்ளுப்பொடி தொட்டுச்சாப்பிட்டபடியே டாக்டர் அனுசுயா கேட்டாள். “மாப்பிள்ளை எந்த ஊர்“ ஐம்பத்தைந்து வயதைக் கடந்த அனுசுயா செம்மஞ்சள் வண்ணப் புடவை கட்டியிருந்தாள். காதில் வைரக்கம்மல். பெரிய பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி. இடது கையில் தங்க வளையல்கள். “திருச்சி.. அவ கூட இந்தூர்ல வேலை பாக்குறவர்.. …









