நேற்று ஹரிபிரசாத் இயக்கிய இருள் இனிது குறும்படத்தின் அறிமுகவிழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள். இயக்குநர் துரை. செந்தில்குமார், இயக்குநர் ஞானவேல், இயக்குநர் ஸ்ரீகணேஷ், இயக்குநர் பொன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு குறும்படம் குறித்த பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.



எனது எல்லாச் செயல்பாடுகளுக்கும் துணை நிற்கும் அன்பு வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

எனது அழைப்பை ஏற்று வருகை தந்த அன்பு நண்பர் அம்பாள் முத்துமணி, மற்றும் தனுஷ்கோடி அண்ணாச்சி அவர்களுக்கு நன்றி. நிகழ்வில் ஹரியை கௌரவித்த ஆடிட்டர் சந்திரசேகர், டாக்டர் பவானிக்கு அன்பும் நன்றியும்.

பிரபாகர், ஏர்போர்ட் மணிமாறன். அகரமுதல்வன். ஆர்தர் வில்சன். நூல்வனம் மணிகண்டன், கபிலா காமராஜ் குடும்பத்தினர். ராமலிங்கம், ஸ்நேகா, ஸ்ருதி டிவி கபிலன், ஜென் ராம் குடும்பத்தினர், உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

நிகழ்வில் குறும்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் நான் ஆற்றிய உரையை ஸ்ருதி டிவி இணைப்பில் காணலாம்.