தேசாந்திரி பதிப்பகம்

எனது நூல்களை வெளியிடுவதற்காகத் தேசாந்திரி என்ற புதிய பதிப்பகத்தைத் துவக்கியுள்ளேன்.

இனி எனது நூல்கள் யாவும் தேசாந்திரி பதிப்பகம் வழியாகவே வெளியாகும்.

நண்பர் மனுஷ்யபுத்திரன் தனது உயிர்மை பதிப்பகத்தின் வழியே எனது 80க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். என் எழுத்துலக பணியில் உயிர்மையின் துணை மிகுந்த நன்றிக்குரியது. ஆயினும் தவிர்க்கமுடியாத சில காரணங்களால் இனி எனது நூல்களை நானே வெளியிடுவது என முடிவு செய்துள்ளேன்.

உயிர்மை, விஜயா, பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள எனது நூல்கள் அச்சிடப்பட்ட பிரதிகள் இருக்கும்வரை அவர்களால் விற்பனை செய்யப்படும்.

அச்சில் இல்லாத எனது நூல்கள் யாவற்றையும் தேசாந்திரி புதிய பதிப்புகளாகக் கொண்டுவரும்.

தேசாந்திரி பதிப்பகத்திற்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன்

••••

0Shares
0