admin

யானையுடன் ஒரு பயணம்.

கிர்ஸ்டன் டான் என்ற பெண் இயக்குநர் இயக்கிய Pop Aye என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 2017 வெளியான திரைப்படம். தானா என்ற கட்டிடக்கலைஞர் ஒரு யானையை அழைத்துக் கொண்டு சாலையில் செல்லும் காட்சியுடன் படம் துவங்குகிறது. யானையின் முதுகில் கிழிந்த பை போன்ற ஒன்று தொங்குகிறது. காயம்பட்ட காலுடன் யானை மெதுவாக நடக்கிறது. பாங்காக்கின் பிரதான சாலையில் தானா யானையோடு நடந்து வருகிறார். பெருநகரத்தில் வாழும் ஒரு மனிதன் ஒரு காரை, பைக்கை, ஏன்  ஒரு கப்பல் …

யானையுடன் ஒரு பயணம். Read More »

ஸீபால்ட் சிறப்பிதழ்

சொல்வனம் இணைய இதழ் இங்கிலாந்தில் வசிக்கும் ஜெர்மானிய எழுத்தாளரான டபில்யூ.ஜீ. ஸீபால்ட் குறித்துச் சிறப்பிதழ் ஒன்றை உருவாக்கியுள்ளது. அரிய கட்டுரைகள், அறிமுகத்துடன் ஸீபால்ட் குறித்த விரிவான பார்வையைத் தரும் விதமாக சிறப்பிதழ் உருவாக்கப்பட்டுள்ளது. சொல்வனம் ஆசிரியர் குழுவினருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். இதழின் முக்கியக் கட்டுரைகளை எழுதியிருப்பவர் நம்பி கிருஷ்ணன். இவரது கட்டுரைகளை நான் விரும்பி வாசிப்பவன். இந்த இதழில் இவர் ஸீபால்ட் பற்றி எழுதியுள்ளதையும் மொழியாக்கம் செய்திருப்பதையும் வாசித்த போது பிரமிப்பு ஏற்பட்டது. எவ்வளவு …

ஸீபால்ட் சிறப்பிதழ் Read More »

இரண்டு புத்தகங்கள்

யுவான் ருல்போ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், போர்ஹெஸ், ஆக்டோவியா பாஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கவிஞர் பிரம்மராஜன், ஆர். சிவகுமார், எதிராஜ் அகிலன், நாகார்ஜுனன், சம்யுக்தா, மணிக்கண்ணன் ஆகியோர் சிறப்பாக மொழியாக்கம் செய்து வெளியிட்ட இந்நூல் எனக்கு மிகவும் பிடித்தமானது. நவீன தமிழ் சிறுகதையை மாற்றம் செய்ததில் இந்நூலுக்கு முக்கிய பங்கிருக்கிறது. பாஸ்கரன் ஒவியத்துடன் சிறந்த வடிவமைப்பில் நேர்த்தியாக உருவாக்கபட்டிருந்தது இந்நூலை பிரம்மராஜன் மறுபதிப்பு செய்தால் இன்றைய வாசகர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். …

இரண்டு புத்தகங்கள் Read More »

எழுத்தின் தோழமை.

மார்க்ரெட் அட்வுட் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். Margaret Atwood: Once in August என்ற இந்த ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் மைக்கேல் ரபோ. 1984ல் வெளியானது மைக்கேல் ரபோ எழுதும் கடிதம் ஒன்றின் மூலம் ஆவணப்படம் துவங்குகிறது. கனேடிய எழுத்தாளர்கள் பலரையும் பற்றி ஆவணப்பபடம் எடுத்துவரும் தான் அட்வுட் பற்றிய ஆவணப்படம் ஒன்றை உருவாக்க விரும்புவதாகவும் அது அவரைப் பிரேதப் பரிசோதனை போலக் கூறுபோடுவதாக ஒரு போதுமிருக்காது. அவர் விரும்புகிறபடி, விரும்பும் இடத்தில் படப்பிடிப்பு நடத்தப்படும். அவரது …

எழுத்தின் தோழமை. Read More »

திருச்சூரில்

இந்திய சினிமாவின் பெருமைக்குரிய இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் மதவெறியர்களால் தொடர்ந்து தாக்கப்படுவதையும் அவமதிக்கப்படுவதையும் கண்டித்து ஆகஸ்ட் 7 புதன்கிழமை கேரளாவின் திருச்சூரில் நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். அடூர் கோபாலகிருஷ்ணன் நம் காலத்தின் மகத்தான கலைஞன்.  அவரைச் சிறுமைப்படுத்தும் விதமாக கேரளாவில் மதவெறியர்கள் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருவதை கண்டித்துப் பேசியதுடன் தமிழ் எழுத்துலகம் அடூர்  பக்கம் நிற்கும் என்று உரையாற்றினேன். இந்நிகழ்வில் மலையாளத் திரையுலகம் மற்றும் எழுத்துலகினைச் சார்ந்த முக்கியக் கலைஞர்கள், படைப்பாளிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். …

திருச்சூரில் Read More »

ஈரோடு புத்தகத் திருவிழா

நாளை மதியம் ஈரோடு வருகிறேன். மாலை ஐந்து மணி முதல் ஈரோடு புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கில் இருப்பேன். விருப்பமான வாசகர்கள் சந்திக்கலாம். திங்கள் , செவ்வாய் இரண்டு நாட்களும் ஈரோட்டில் இருப்பேன் தேசாந்திரி அரங்கு எண் : 104 •• ஆகஸ்ட் 3 .2019

புதிய நாவல்

மதுரை புத்தகக் கண்காட்சியில் எனது புதிய நாவல் வெளியாகிறது ஒரு சிறிய, விடுமுறைக்காலக் காதல் கதை என்பது நாவலின் தலைப்பு. இது ஒரு காதல் கதை. கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களுக்குத் தனியழகு இருப்பது போலவே காதல் கதைகளுக்கும் தனி அழகிருக்கிறது. கோடைவிடுமுறையில் துவங்கி கோடைக்காலம் தோறும் சந்தித்துக் கொள்ளும் இருவரின் காதல் கதை. உப பாண்டவம் துவங்கி இடக்கை வரையிலான எனது நாவல்கள் யாவும் தீவிரமான கதைக்களத்தைக் கொண்டவை. நிறையக் கதாபாத்திரங்கள், கிளைக்கதைகள் என விரிபவை.ஆனால் இந்நாவல் …

புதிய நாவல் Read More »

ஈரோடு புத்தகத் திருவிழா

புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 4 ஞாயிறு மாலை ஈரோடு  வருகிறேன் மாலை 5 மணி முதல் புத்தகக் கண்காட்சியிலுள்ள தேசாந்திரி  அரங்கில் இருப்பேன். அரங்கு எண் : 104 ஆகஸ்ட் 5 மற்றும் 6 இரண்டு நாட்களிலும் ஈரோட்டில் இருப்பேன். புத்தகத் திருவிழாவில் சந்திக்கலாம் **

கறையான்

வங்காளத்தின் சிறந்த நாவலாசிரியரான சீர்ஷேந்து முகோபாத்யாய (Shirshendu Mukhopadhyay) எழுதிய கறையான் நாவலை நேஷனல் புக் டிரஸ்ட் மறுபதிப்பு செய்துள்ளது. தலை சிறந்த இந்திய நாவல்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது கறையான். இந்நாவலின் கதாநாயகனே நவீன இந்தியாவின் அடையாளம். அவனது செயல்கள் அதிர்ச்சியளிப்பவை. வாழ்க்கை குறித்த அவனது பார்வைகளும் மதிப்பீடுகளும் துணிச்சலானவை. அவன் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளே தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்கிறான். எண்ணவோட்டங்களாக நீளும் விவரிப்பும், நிராசையும் வேதனையும் கொண்ட அனுபவங்களும் ஒன்று சேர்ந்து கறையான் …

கறையான் Read More »