admin

கி.ரா- 97

நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற கி.ரா- 97 நிகழ்வில் கலந்து கொண்டேன். கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராவின் பிறந்தநாளை எல்லோரும் இணைந்து சிறப்பாகக் கொண்டாடினோம். குடும்பத்துடன் அவரிடம் ஆசி பெற்றேன். நிகழ்விற்கு அரங்கு நிரம்பிய கூட்டம். கி.ரா மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார். நிகழ்வில்  கி.ராவின் சிறுகதைகள் பற்றிச் சிறிய உரையொன்றை நிகழ்த்தினேன். கி.ராவின் புறப்பாடு என்ற சிறுகதை அற்புதமானது. கரிசல் விவசாயி நிலத்தின் மீது எவ்வளவு பிடிப்பு வைத்திருக்கிறான் என்பதற்கு இந்தக் கதையில் ஒரு நிகழ்வு சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது …

கி.ரா- 97 Read More »

பீட்டர்ஸ்பெர்க்கில் தஸ்தாயெவ்ஸ்கி

நேற்று வேலூரில் ஜே.எம். கூட்ஸி எழுதிய பீட்டர்ஸ்பெர்க் நாயகன் (The Master of Petersburg / J.M. Coetzee) நாவல் குறித்து உரையாற்றினேன். இந்த நாவல் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.  சா. தேவதாஸ் இந்நாவலை மொழியாக்கம் செய்துள்ளார். வேலூரில் மாலை நான்குமணி முதலே மழையாக இருந்தது. மழைக்குள் நனைந்தபடியே பார்வையாளர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அரங்கு நிரம்பிய கூட்டம். இந்த உரையைக் கேட்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் அதிகம். நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த கனலி …

பீட்டர்ஸ்பெர்க்கில் தஸ்தாயெவ்ஸ்கி Read More »

கி.ரா 97

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனின் 97வது பிறந்த தினத்தை முன்னிட்டு  நாளை புதுச்சேரியில் நடைபெறவுள்ள கி.ரா ’97 விழாவில் கலந்து கொள்கிறேன். நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள இளவேனிலுக்கு அன்பும் நன்றியும். நாள்  : 16.09.2019 நேரம்: காலை 11 மணி இடம் :தொல்காப்பியர் அரங்கம் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புதுச்சேரி தொடர்புக்கு:  9944540421 9842382339 பதிவு செய்த நாள் 15.09.2019

காதல் என்ற சொல்

மதுரையிலுள்ள  சித்திரவீதிக்காரன் எனது புதிய நாவலுக்கு எழுதியுள்ள விமர்சனம். •• தூரம் காதலைக் கொல்கிறது. தூரமின்மையும்கூட. அலர் காதலைக் கொல்கிறது. சில சமயம் ஏதுமின்றியே காதல் சாகிறது. காஹா சத்தசஈ எஸ்.ராமகிருஷ்ணனின் பத்தாவது நாவலான ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை’ மதுரை புத்தகத் திருவிழாவில் வெளியானது. எஸ்.ரா.வின் நாவல்கள் உப பாண்டவம் தொடங்கி பதின் வரை எல்லா நாவல்களையும் வாசித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் தனித்துவமானவை. காதலை மையங்கொண்ட நாவல்களில் ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை’க்கும் தனியிடம் …

காதல் என்ற சொல் Read More »

மதுரை புத்தகக் கண்காட்சியில்

மதுரைப் புத்தகக் கண்காட்சியில் எனது புதிய நாவல் வெளியீடு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தோழர் எஸ். ஏ.பெருமாள் வெளியிடத் தீபா வெங்கடாசலம் பெற்றுக் கொண்டார். ஐந்து நாட்கள் மதுரையிலிருந்தேன். நிறைய வாசகர்களைச் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. நான் விரும்பியது போலவே புதிய நாவல் அதிகமும் இளைஞர்களால் வாங்கிச் செல்லப்பட்டது சந்தோஷம் அளித்தது. இந்நாவலைப் படமாக்குவதற்காக மூன்று இயக்குநர்கள் தொடர்பு கொண்டார்கள். ஒரு நாவல் வெளியான சில தினங்களிலே அதன் உரிமையை வாங்குவதற்குத் திரைத்துறையினர் முன்வந்திருப்பது வரவேற்க …

மதுரை புத்தகக் கண்காட்சியில் Read More »

மதுரையில்

இன்றிலிருந்து நான்கு  நாட்களுக்கு மதுரையில் இருப்பேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் மதுரைப் புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கில் சந்திக்கலாம். இன்று மாலை 6 மணிக்கு எனது புதிய நாவலின் வெளியீட்டுவிழா மதுரைப் புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கு எண் 138ல் நடைபெறவுள்ளது ••

தெலுங்கில்

எனது சிறுகதை கொஞ்சம் அதிகம் இனிப்பு தெலுங்கில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கௌரி கிருபாகரன்.  அவருக்கு மனம் நிரம்பிய நன்றி ••

நாவல் வெளியீடு

நாளை மதுரை புத்தகத் திருவிழாவிற்கு வருகிறேன். நாளை மாலை (05.09.2019)  5 .30 மணிக்கு மதுரைப் புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கு எண் 138ல் எனது புதிய நாவல் ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல்கதை வெளியிடப்படவுள்ளது. தலைமையேற்று நாவலை வெளியிடுபவர் தோழர் எஸ்.ஏ.பெருமாள் நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி வேண்டுகிறேன் விலை ரூ 200 ••• 04.09.2019

செங்கிஸ்கானின் பாடல்

The Story of the Weeping Camel என்ற புகழ்பெற்ற டாகுமெண்டரி படத்தை இயக்கிய பைம்பசுரான் டாவா (Byambasuren Davaa) வின் அடுத்தப் படமான Two Horses of Genghis Khan என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். 2009ல் வெளியான படமிது. மங்கோலியத் திரைப்பட இயக்குனரான பைம்பசுரான் டாவா ஜெர்மனியில் வசிக்கிறார். சர்வதேச அளவில் ஏராளமான விருதுகளை வாங்கியவர் டாவா. சீனாவின் கலாச்சாரப் புரட்சி காலத்தில் மங்கோலிய மக்களின் மரபும் பண்பாடும் ஒடுக்குமுறைக்கு ஆளானது. மங்கோலிய நாட்டுப்புற இசை …

செங்கிஸ்கானின் பாடல் Read More »

அஷ்டமூர்த்தியின் கடைசி சிற்பம்

அஷ்டமூர்த்தி மலையாளத்தின் மிக முக்கியமான சிறுகதையாசிரியர். எழுத்தாளர். இவரது கடைசி சிற்பம் என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழில் சிதம்பரம் ரவிச்சந்திரன் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பஷீர் துவங்கி அசோகன் செருவில் வரை மலையாளத்தின் முக்கிய சிறுகதையாசிரியர்கள் பலரும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கென வாசகர் வட்டமே தமிழில் உருவாகியுள்ளது. சமகால மலையாள சிறுகதைகளின் போக்கினையும் எழுத்துமுறையையும் அறிந்து கொள்வதில் தமிழ் எழுத்தாளர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அஷ்டமூர்த்தியின் கதைகள் தமிழுக்குப் புதுவரவாக உள்ளது மகிழ்ச்சி …

அஷ்டமூர்த்தியின் கடைசி சிற்பம் Read More »