Read Singapore -2008 . சிங்கப்பூர் தேர்வு
சிங்கப்பூர் தேசிய நூலகம் வருடம் தோறும் Read Singapore என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. நல்ல இலக்கியங்களை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் புதிய படைப்பியக்கத்தை உருவாக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கெனத் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்களை பரவலான வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் செய்வதற்கும் தேசிய நூலகம் சிறப்பாக ஏற்பாடு செய்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்த ஆண்டு நான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். இதற்கென எனது எட்டு சிறுகதைகள் பெயரில்லாத ஊரின் பகல்வேளை என்ற தலைப்பில் தனி …