admin

தேசாந்திரி அரங்கு எண்கள் 391& 392

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரிலுள்ள  செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள சென்னை புத்தகக்  காட்சியில் தேசாந்திரி  பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது எண்கள் 391& 392 முதன்மை நுழைவாயிலாக உள்ள ஐந்தாவது நுழைவாயில் வழியாக வந்தால்  கடைசி இரண்டுகடைகள். பபாசி அலுவலகம் உள்ள வாசல் வழியாக  வந்தால் அதே வரிசையின் கடைசி இரண்டு கடைகள். முதல் நுழைவாயில் வழியாக வந்தால் 6 வது பாதையில் கடைசி. கடைசி நுழைவாயில் வழியாக வந்தால் ஐந்தாவது பாதையில் …

தேசாந்திரி அரங்கு எண்கள் 391& 392 Read More »

துரத்தும் பணம்

சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் மராத்திபடங்கள் உலக அளவில் மிகப்பெரிய விருதுகளையும் அங்கீகாரத்தையும் தொடர்ச்சியாகப் பெற்றுவருகின்றன. மராத்தி சிறுகதைகளில் இருந்தோ, நாவல்களில் இருந்தோ படத்திற்கான ஆதாரக்கதையைப் பெற்றுக் கொண்டு இளம் இயக்குனர்கள் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள். அத்துடன் ஐம்பது லட்ச ரூபாய்க்குள் படத்தை முடித்துவிட முடிகிற வாய்ப்புகளும் அங்குள்ளன. மல்டிபிளெக்ஸ் அரங்குகளில் கட்டாயம் ஒரு திரை மராத்தி திரைப்படங்களுக்கு ஒதுக்கபட வேண்டும் என்பது மாநில விதிமுறை. ஆகவே விநியோக முறையும் சாதகமாகவுள்ளது. ஹிந்தி திரையுலகின் பிரபலங்கள் பலரும் மராத்தி …

துரத்தும் பணம் Read More »

தி இந்து விழா

இன்று காலை நடைபெற்ற தி இந்து  லிட் பார் லைப் இலக்கியவிழாவில் கலந்து கொண்டு தமிழ் சிறுகதை குறித்து உரையாற்றினேன். மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம். அரங்கு நிரம்பிய பார்வையாளர்கள். எழுத்தாளர் ந.முத்துசாமி நிகழ்வைத் துவக்கி வைத்தார். . எனக்கு முன்பாக எழுத்தாளர் பிரபஞ்சன் சிறப்பானதொரு துவக்கவுரையை வழங்கினார். தமிழ் சிறுகதை நூற்றாண்டினைக் கொண்டாடும் தி இந்து தமிழ் நாளிதழுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.

பிரெய்லி வடிவில்

தேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூல் பிரெய்லி வடிவில் வெளியீடு ** தேசிய பார்வையற்றோருக்கான சங்கம் சார்பில் லூயி பிரெயிலின் 209-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. தேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘உலகின் மிகச் சிறிய தவளை’ என்ற நூல் பிரெய்லி வடிவில் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. பார்வையற்றோர் கல்வி கற்பதற்காக ‘பிரெய்லி’ முறையைக் கண்டறிந்த லூயி பிரெய்லியின் 209-வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய …

பிரெய்லி வடிவில் Read More »

சிறுகதை நூற்றாண்டு -சிறப்புவிழா

தி இந்து தமிழ் நாளிதழ் தமிழ் சிறுகதை நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக சிறப்புவிழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நான் உரையாற்றுகிறேன். நிகழ்வினை எழுத்தாளர் ந.முத்துசாமி துவங்கி வைக்கிறார். விருதுகளை வழங்கி எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி சிறப்புரை ஆற்றுகிறார் சேத்பட்டிலுள்ள லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் விழா நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

கவிதைகளுடன் ஒரு நாள்

அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் சார்லஸ் சிமிக் தனக்கு மிகவும் பிடித்தமான செர்பியக்கவிஞரான MILAN DJORDJEVIC கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். இதற்கு சிமிக் எழுதியுள்ள அறிமுகவுரை முக்கியமானது. சிமிக் மொழியாக்கம் செய்த Oranges And Snow Selected Poems of Milan Djordjevic என்ற கவிதைத்தொகுதியை இன்று வாசித்தேன். சமகால உலகக்கவிதைகளில்  Milan Djordjevic மிக முக்கியமானவர். 1954ல் பெல்கிரேடில் பிறந்தவர் மிலன் ஜோர்ஜிவிக். அவரது அப்பா ஒரு கட்டிடக்கலை நிபுணர். மிலன் ஜோர்ஜிவிக்கின் கவிதை …

கவிதைகளுடன் ஒரு நாள் Read More »

திருடனின் மூன்று அற்புதங்கள்.

சிறுகதை இன்றிருப்பது போன்ற பரபரப்பான வாகனப்போக்குவரத்து, ஜனநெருக்கடி 1960களில் இல்லை. பிழைப்பு தேடிப் பலரும் மெட்ராஸிற்கு வருவது போலவே தெக்கனும் வந்து சேர்ந்தான். அப்போது அவனுக்கு வயது இருபத்தியெட்டு. மதராஸில்  அவனுக்குத் தெரிந்த மனிதர்கள் ஒருவர் கூடக் கிடையாது. அதைப்பற்றி நினைக்கும் போது தெக்கன் மனதிற்குள் சிரித்துக் கொள்வான். அப்போது அவனது மனதில் இப்படித் தோன்றும் “திருடனுக்கு எதற்குத் தெரிந்த மனிதர்கள்“ ஆம். தெக்கன் திருடுவதற்காகத் தான் மதராஸிற்கு வந்து சேர்ந்தான். அதற்கு முன்பு வரை பழனி, …

திருடனின் மூன்று அற்புதங்கள். Read More »

நிகழ்ச்சிகள்

04.01.2018 மாலை பிரெயில் நூல் வெளியீட்டுவிழா – சவேரா ஹோட்டல் 05.01.2018 மாலை தமிழ்ப் பிரபாவின் நாவல்“ பேட்டை“ வெளியீட்டுவிழா – கன்னிமாரா நூலகம் 06.01.2018 மாலை 4 மணி வாசிப்பு அரங்கம் -தக்கர் பாபா தி.நகர். 06.01.2018 மாலை 6 மணி அமீன் நூல் வெளியீடு-  கவிக்கோ மன்றம்.