admin

குறும்படமாகவுள்ள கதைகள்

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் என்ற எனது புதிய சிறுகதை தொகுப்பிலிருந்து ஓராயிரம் கைகள், வெறும் பணம் என்ற இரண்டு சிறுகதைகள் குறும்படமாக  உருவாக்கபடவுள்ளன. ஒரே நாளில் இதற்கான அனுமதி கேட்டு இரண்டு இளைஞர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் குரலில் இருந்த ஆர்வமும் தீவிரமும் சந்தோஷம் அளித்தது. பிரதீப் என்ற இளைஞர் சிறுகதை தொகுப்பு பற்றி உற்சாகமாகப் பேசினார் “இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளில் பத்துகதைகளை எளிதாகக் குறும்படமாக்கி விடலாம். எதைத் தேர்வு செய்வது எனப்புரியாமல் தடுமாறிக் …

குறும்படமாகவுள்ள கதைகள் Read More »

இவான் துர்கனேவ் பற்றி சிறப்புரை

புத்தகங்களுடன் புத்தாண்டினைக் கொண்டாடும் விதமாக டிஸ்கவரி புக் பேலஸ் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அதில் இரவு 8 : 30 மணிக்கு  எனது புதிய நூலான கடவுளின் நாக்கு குறித்த அறிமுகவிழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரவு 9 :30 மணிக்கு  ரஷ்ய இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான இவான் துர்கனேவ் பற்றி சிறப்புரை வழங்கயிருக்கிறேன் ரஷ்ய இலக்கியத்தின் நாயகர்கள் பலரைப் பற்றி முன்னதாகப் பேசியிருக்கிறேன்.  துர்கனேவ் பற்றி முதன்முறையாக உரையாற்ற இருக்கிறேன். இவான் துர்கனேவின் …

இவான் துர்கனேவ் பற்றி சிறப்புரை Read More »

காணொளிகள்

காணொளிகள் தேசாந்திரி பதிப்பகம் தொடக்க விழா – முன்னோட்டம் | எஸ். ராமகிருஷ்ணன் Desanthiri Pathippagam – S. Ramakrishnan https://www.youtube.com/watch?v=3LlnGRoWAXI #desanthiripathippagam ** எழுத்தாளர் பிரபஞ்சன் உரை Prapanchan speech | Desanthiri Pathippagam – Launch | S. Ramakrishnan #DesanthiriPathippagam #தேசாந்திரிபதிப்பகம் #SRamakrishnan https://www.youtube.com/watch?v=_3aihmQ9B2M ** பத்திரிகையாளர் சமஸ் உரை Vasanthabalan speech | Desanthiri Pathippagam – Launch | S. Ramakrishnan #DesanthiriPathippagam #தேசாந்திரிபதிப்பகம் #SRamakrishnan https://www.youtube.com/watch?v=fluwKBVag8M ** இயக்குனர் …

காணொளிகள் Read More »

தேசாந்திரி பதிப்பகம் தொடக்கவிழா

தேசாந்திரி பதிப்பகத்தின் தொடக்கவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். இடம் கிடைக்காமல் நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் 70 சதவீதம் இளைஞர்கள். அனைவரின் அன்பும் ஆதரவுமே நிகழ்ச்சியை வெற்றி பெறச்செய்தது. தேசாந்திரி பதிப்பகம் சார்பில் எனது ஏழு புதிய நூல்கள் வெளியிடப்பட்டன.  தோழர் நல்லகண்ணு அவர்கள் எனது நூலை வெளியிட்டது மிகப்பெரிய கௌரவம். நிகழ்வில் பார்வையற்றவர்களுக்காக பிரெயில் மொழியில் படிக்கத் தெரிந்த சிங்கம் நூல் வெளியிடப்பட்டது. ரஷ்ய கலாச்சார மைய இயக்குனர் …

தேசாந்திரி பதிப்பகம் தொடக்கவிழா Read More »

இரண்டு சிறப்பு நிகழ்வுகள்

நான் எழுதிய சிறார் நாவல்கள் படிக்கத்தெரிந்தசிங்கமும், உலகின் மிகச்சிறிய தவளையும் ப்ரெயிலில் அச்சடிக்கப்பட்டு பார்வையற்றவர்களுக்காக வெளியிடப்பட உள்ளன இதனை தேசாந்திரி பதிப்பகம் மற்றும் தேசிய பார்வையற்றோருக்கான சங்கம் இணைந்து வெளியிடுகின்றன ப்ரெயில் மொழியில் அச்சிடப்பட்ட படிக்கத் தெரிந்த சிங்கம் நூல் நாளை மாலை தேசாந்திரி பதிப்பக தொடக்கவிழாவில் வெளியிடப்படவுள்ளது. •• தேசாந்திரி பதிப்பகத்திற்காக புதிதாகத் துவக்கபட்டுள்ள இணையதளம் நாளை அறிமுகம் செய்யப்படும் •• தேசாந்திரியின் நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள், புத்தக விற்பனையாளர்கள். ஆன்லைன் விற்பனையாளர்கள் தொடர்பு …

இரண்டு சிறப்பு நிகழ்வுகள் Read More »

சிறப்பு சலுகை

நாளை வெளியிடப்படவுள்ள எனது ஏழு புதிய நூல்களின் மொத்த விலை ரூ 1125 சிறப்பு சலுகையாக ரூ 900 க்கு அரங்கில் கிடைக்கும்.