admin

முகாம் நினைவுகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறார் இலக்கிய முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தொடர்மழையின் காரணமாக நிகழ்ச்சியை நடத்த முடியாதோ எனத் தோணியது, ஆனால் சனி காலை முதல் ஞாயிறு மாலை வரை மழையில்லை. முந்திய நாள் பெய்த மழையின் குளிர்ச்சியில் திருவண்ணாமலை குளிர்ந்து ஊட்டி போலாகியிருந்தது. காணுமிடமெல்லாம் தண்ணீர், குளிர்ச்சி, கோடையில் இவ்வளவு மழை என்பது அதிர்ஷடமே. வெள்ளிக்கிழமை காலை சென்னையில் இருந்து கிளம்பும் போதே நல்ல மழை. சாலை தெரியவில்லை. காரில் திருவண்ணாமலைக்குப் போய்ச் சேர ஐந்து மணி …

முகாம் நினைவுகள் Read More »

பயணம்

சிறார் இலக்கிய முகாம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு துவங்க உள்ளது.  அதில் கலந்து கொள்வதற்காக நாளை திருவண்ணாமலை செல்கிறேன். மே 16 மற்றும் 17 தேதிகளில் திருவண்ணாமலையில் இருப்பேன். மே 18 முதல் 29 வரை மதுரை, ராஜபாளையம், சாத்தூர், கோவில்பட்டி, மூணாறு என கோடை விடுமுறைப்பயணம். மே 23 அன்று மதுரையில் எஸ் ராமகிருஷ்ணன் சிறுகதைகளோடு ஒரு நாள் என்ற கருத்தரங்கு நடைபெற உள்ளது. வதனம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு   பிரேம்நிவாஸ் …

பயணம் Read More »

முகாம் நடக்குமிடம்

திருவண்ணாமலையில் மே 16 மற்றும் 17 தேதிகளில் நடைபெற உள்ள சிறார் இலக்கிய முகாம் எழுத்தாளர் பவா. செல்லதுரையின் தோட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த இடம் திருக்கோவிலூர் சாலையில் அருணை இன்ஜினிரியங் கல்லூரிக்கு எதிரில் உள்ளது சென்னையில் இருந்து வரும் நண்பர்கள் திருவண்ணாமலையில் பெரியார் சிலை முன்பாக இறங்கி அருணை இன்ஜினியரிங் கல்லூரிக்கு ஆட்டோ பிடித்து வர வேண்டும் வேறு ஊர்களில் இருந்து பேருந்தில் வரும் நண்பர்கள் திருவண்ணாமலைக்குள் வருவதற்கு முன்பே அருணை இன்ஜினியரிங் கல்லூரி நிறுத்தம் …

முகாம் நடக்குமிடம் Read More »

சஞ்சாரம்-அலைக்கழிப்பின் தனிமை

மோனிகா மாறன் எஸ்.இராமகிருஷ்ணனின் சஞ்சாரம் மனித மனங்களின் சிதறல்களை,வாழ்வின் தவிர்க்க இயலா யதார்த்தத்திற்கும்,மனங்களின் எல்லைகளுக்குமிடையிலான போராட்டங்களைக் காண்பிக்கிறது. பக்கிரியின் கதை நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞனின் சுயமரியாதையை வெளிப்படுத்துகிறது. “மனுசன் அற்பப்புழு, இசைக்கு தாய்ப்பாலு நாதஸ்வரம்” கலையை நேசிக்கும் மனிதர்களின் மனதில் தான் இப்படிச் சொற்கள் உருவாகும். எலுமிச்சை மணம் என்பது கடந்த காலத்தையும் நினைவுகளையும் இணைக்கும் மரணத்தை மாலிக்கபூருக்கு அளிக்கிறது லட்சய்யாவின் இசை.உண்மையில் எல்லா மனங்களின் ஆழங்களும் ஏதோ ஒரு வாசத்தில் மரணத்தை,காலங்களை நினைவூட்டும்.மணம் என்பதே இங்கு …

சஞ்சாரம்-அலைக்கழிப்பின் தனிமை Read More »

சஞ்சாரம் விமர்சனம்

அவலத்தின் வலி உணர்த்தும்  ஓர் இசைப்பயணம் பேராசிரியர் ராமகுருநாதன் காவிரி மண்ணுக்குரிய பெருமை அது கலைகளின் தாயகமாக ஒருகாலத்தில் இருந்ததுதான். இசை, நாடகம், நடனம், ஓவியம் போன்ற நுண்கலைகளில் தஞ்சை மாவட்டத்திற்குத் தனித்தன்மை உண்டு. கலைஞர்கள் பலரை உருவாக்கி உலவ விட்டது அந்தக் காவிரி மண்.  இசைக்கலைஞர்களில் குறிப்பாக நாதஸ்வர இசைக் கலைஞர்களில் சிறப்புக்குரியோராகப் பலர்தஞ்சை மண்ணால் தமிழகத்திற்குப் புகழ் சேர்த்தவர்கள். அவர்களில் சிலர் இந்திய அளவில் புகழ் பெற்றவர்கள். காவிரி மண்ணுக்கு மட்டும் இந்தப் பெருமை …

சஞ்சாரம் விமர்சனம் Read More »

மதுரையில்

வதனம் இலக்கிய அமைப்பு மே 23 சனிக்கிழமை அன்று மதுரையில்  எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகளுடன் ஒரு நாள் என்ற கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில் எனது எட்டு சிறுகதை தொகுதிகள் குறித்து எட்டு எழுத்தாளர்கள் உரையாற்ற இருக்கிறார்கள் தோழர் எஸ்.ஏ.பெருமாள் தலைமை வகிக்கிறார். எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித் முன்னிலை வகிக்கிறார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் சிறப்புரை வழங்குகிறார்.  சிறப்பு அழைப்பாளர்களாக கவிஞர் தேவதச்சன், இயக்குனர் சீனுராமசாமி,  கவிஞர் தேவேந்திரபூபதி கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்வினை கவிஞர் ஆத்மார்த்தி ஒருங்கிணைப்பு …

மதுரையில் Read More »

எனக்குப் பிடித்த கதைகள் – 13

லெனினை வாங்குதல் – மிரோஸ்லாவ் பென்கோ தமிழில்: சுகுமாரன் மேற்படிப்புக்காக நான் அமெரிக்காவுக்குப் போகிறேன் என்பதைத் தெரிந்து கொண்டதும் தாத்தா எனக்கு ஒரு விடையளிப்புக் குறிப்பு எழுதினார். ‘புழுத்துப்போன முதலாளித்துவப் பன்றியே’ என்று தொடங்கியிருந்தது குறிப்பு. ‘விமானப் பயணம் பாதுகாப்பானதாக அமையட்டும். அன்புடன், தாத்தா’. 1991 ஆம் வருடத்திய தேர்தலில் விநியோகித்த சிவப்புநிறமான கசங்கிய வாக்குச்சீட்டில் அது எழுதப்பட்டிருந்தது. தாத்தாவின் கம்யூனிஸ்ட் தேர்தல் சேகரிப்பின் ஆதாரப் பொருள்களில் ஒன்று அது. லெனின்கிராடு கிராமத்தைச் சேர்ந்த எல்லாருடைய கையெழுத்தும்miro …

எனக்குப் பிடித்த கதைகள் – 13 Read More »

பிராட்பரியின் முன்னுரை

தமிழில் : கடுகு அகஸ்தியன் ••• A PASSION FOR BOOKS  என்ற புத்தகத்திற்கு எழுத்தாளர் ரே பிராட்பரி (RAY BRADBURY)  சிறப்பான முன்னுரை எழுதியுள்ளார்.  அதை நகைச்சுவை எழுத்தாளர் கடுகு அகஸ்தியன் தமிழில் மொழியாக்கம் செய்து தனது வலைப்பதிவில் ஏற்றியுள்ளார். இந்த முன்னுரையில்  தனது புகழ்பெற்ற நாவலான பாரன்ஹீட் 451யை எப்படி எழுதினேன் என்பதைரே பிராட்பரி விவரிக்கிறார். பாரன்ஹீட் 451  தற்போது க்ரியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. ••• ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் வருடம் ஃபாரன்ஹீட் 451 …

பிராட்பரியின் முன்னுரை Read More »

எனக்குப் பிடித்த கதைகள் – 12

தழும்புள்ள  மனிதன் – சாமர்செட் மாம் தமிழில்: வெ.சந்திரமோகன் பெரிய பிறைப் போல நெற்றியின் ஓரத்திலிருந்து தாவாங்கட்டை வரை ஓடிய பெரிய சிவப்புத் தழும்பு தான் அவனை கவனிக்கச் செய்தது. கடுமையான காயம் ஒன்று தான் இந்தத் தழும்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஒரு பட்டாக் கத்தி அல்லது செல்லின் ஒரு துண்டாக இருக்கக்கூடும். வட்டவடிவமான, பெருத்த,  நல்ல சிரிப்புடன் கூடிய முகத்துக்கு அது பொருத்தமாயில்லை. சிறிய, கவனம் ஈர்க்காத தன்மைகளுடன் அவன் இருந்தான். …

எனக்குப் பிடித்த கதைகள் – 12 Read More »