admin

தனஞ்ஜெயன்

யூடிவி தனஞ்ஜெயன்  தமிழ் சினிமாவை ஆவணப்படுத்துவதில் தீவிர நாட்டம் கொண்டவர். திரைப்படத்துறையில் பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிவரும் இவர்  Best of Tamil Cinema: 1931 to 2010 என்ற  நூல் ஒன்றினை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில் இவர் எழுதியுள்ள பிரைட் ஆப் தமிழ்சினிமா, கோவா திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.  இந்த நூலை நேற்றிரவு வாசித்தேன். தமிழ் சினிமாவை ஆவணப்படுத்துவதில் நாம் எப்போதுமே அக்கறையின்றி இருக்கிறோம் என்ற ஆதங்கம் நீண்ட காலமாகவே எனக்கிருக்கிறது. திரைப்படத்துறையும், …

தனஞ்ஜெயன் Read More »

நினைவின் குரல்

இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பரிந்துரைப்  படங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் அமரோஸ் பெரோஸ், பேபல் உள்ளிட்ட முக்கியப் படங்களை இயக்கிய அலெஜாந்ரோ கொன்ஸாலேஸ் இன்னாரிட்டோ இயக்கியுள்ள பேர்ட்மேன் (Birdman) படம் பார்த்தேன். ஆஸ்கார் ஆஸ்கார் பட்டியலில் ஒன்பது பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  நிச்சயம் பரிசுகளை அள்ளிக் கொண்டு போக உள்ளது என்பது உறுதி. இப்படத்தின் ஒளிப்பதிவு அபாரமானது. Emmanuel Lubezki இதன் கேமிராமேன் ஒரு ஷாட் இரண்டு நிமிசம் முதல் ஒன்பது நிமிசம் வரை …

நினைவின் குரல் Read More »

புத்தகக் கண்காட்சியில்

சென்னை புத்தகக் கண்காட்சியில் நாளை 17ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜென் கதைகள் குறித்துப் புத்தன் சொல்லாத கதைகள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன் . கண்காட்சி வளாக அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது *** கடந்த இரண்டு நாட்களாகப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் 1)    பௌன்சர் -அலெக்ஸாண்ட்ரோ ஜோடோரோவ்ஸ்கி – முழுநீள கிராபிக் நாவல். – லயன் காமிக்ஸ் 2)    காளிதாசனின் கதை – சைலேஷ் -பப்ளிகேஷன்ஸ் டிவிசன் 3)    கூண்டுப்பறவை ஏன் …

புத்தகக் கண்காட்சியில் Read More »

உண்மையின் தோழன்

சமஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான யாருடைய எலிகள் நாம் நூலை வாசித்தேன், சமகாலப்பிரச்சனைகள் குறித்து வெகுதீர்க்கமாக எழுதப்பட்ட கட்டுரைகள் இவைகள். வேறுவேறு தளங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்றாலும் அதன் அடிப்படையாக இயங்குவது நீதியுணர்வும் அறச்சீற்றமும் தான். சமூகவெளியில் நடக்கின்ற வன்முறைகள், அரசியல் வெறியாட்டங்கள், ஒடுக்குமுறைகளைக் கண்டுகொள்ளாமல் போகிற பொதுபுத்தியின் மீது விழும் சவுக்கடிகள் தான் இந்தக் கட்டுரைகள் சமஸின் கட்டுரைகள் பிரச்சனைகளை மட்டும் கவனம் கொள்பவையில்லை, மாறாக அது எப்படி உருவானது, எங்கே அதன் வேர்கள் புதையுண்டிருக்கின்றன, …

உண்மையின் தோழன் Read More »

கண்டிக்கிறேன்

நண்பர் பெருமாள்முருகனின் மீது தொடர்ந்து நடத்தப்படும் ஒடுக்குமுறைகளை வன்மையாக கண்டிக்கிறேன். அவரது எழுத்துரிமையை காக்க ,கருத்துரிமைக்கு ஆதரவாக படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டுகிறேன் Thanks : The New Indian Express-Vellore

புத்தகக் கண்காட்சி

நேற்றும் இன்றும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன், நேற்று மிக அதிகமான கூட்டம், புத்தகங்களைத் தேடிப்பார்க்க முடியவில்லை, ஆகவே இன்று மதியம் இரண்டு மணிக்குச் சென்று இரவு வரை சுற்றிக் கொண்டிருந்தேன். இன்று நான் வாங்கிய சில புத்தகங்கள் 1. புதுமைப்பித்தனின் சம்சாரப் பந்தம் – கமலா புதுமைப்பித்தன்– பரிசல் வெளியீடு 2. ஃ பாரென்ஹீட் 451 –ரே பிராட்பரி –தமிழில் வெ.ஸ்ரீராம் –க்ரியா பதிப்பகம். 3. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி– சுயசரிதை –அவ்வை இல்லம் 4. குழந்தைகளின் …

புத்தகக் கண்காட்சி Read More »

தொலைக்காட்சி ஒளிபரப்பு

சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு சன் நியூஸ் தொலைக்காட்சி தினமும் மதியம் 3 மணிமுதல் 4 மணி வரை ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சி  ஒன்றினைத் தயாரித்து வழங்குகிறது இதில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டிவி சேனலில் புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெறுவது இதுவே முதல்முறை நாளை சனிக்கிழமை 10. 1. 2015 மதியம் 3 மணிக்கு உயிர்மையின் சார்பில் எனது சஞ்சாரம் நாவல் வெளியீட்டு நிகழ்வு ஒளிபரப்பாகிறது இந்நிகழ்வில் நண்பர் மனுஷ்யபுத்திரன் …

தொலைக்காட்சி ஒளிபரப்பு Read More »

கி.ரா.வைக் கொண்டாடுவோம்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் படைப்புலகம் குறித்து விரிவான உரை ஒன்றினை நாளை நிகழ்த்துகிறேன் நோபல் பரிசு பெறத் தகுதியான அந்த மகத்தான எழுத்தாளரைக் கொண்டாடும்  விதமாக அவரது பன்முக ஆளுமை குறித்தும்,  படைப்புகள் குறித்தும்  பேச இருக்கிறேன் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

சலுகை விலையில்

2013 வரை நான் எழுதிய 230 சிறுகதைகளைத் தொகுத்து உயிர்மை பதிப்பகம் மூன்று பெரும் தொகுதிகளாக வெளியிட்டுள்ளது நாளை  இதன் வெளியீட்டு விழா மாலை ஆறுமணி அளவில் ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. 1656 பக்கங்கள் கொண்ட இந்த மூன்று தொகுதிகளும் ஒன்று சேர்ந்து விலை  ரூ 1550  . இதனை ரூ 1000 ற்கு சலுகை விலையில் தருவதற்கு உயிர்மை முன்வந்துள்ளது ஜனவரி 12 வரை சலுகை விலையில் புத்தகங்கள் கிடைக்கும்.

விழா

2013 வரை வெளியாகியுள்ள எனது சிறுகதைகள் யாவும் ஒன்றாகத் தொகுக்கபட்டு மூன்று தனித்தொகுதிகளாக வெளியாக உள்ளன. அத்துடன் சிறார்களுக்காக எழுதியுள்ள நாவல், உலகசினிமா குறித்த கட்டுரைத் தொகுதி உள்ளிட்ட புத்தகங்கள் ஜனவரி 8ம் தேதி வியாழன் மாலை சென்னை, ரஷ்யக்கலாச்சார மையத்தில்  வெளியிடப்பட உள்ளன. நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறேன்