admin

தேர்தல் ஒவியங்கள்

பிரிட்டீஷ் ஒவியரான வில்லியம் ஹோகார்த் (William Hogarth) மிக முக்கியமான ஒவியர், கேலிச்சித்திரக்காரர், காமிக்ஸ் புத்தகங்களின் முன்னோடி, சமூகவிமர்சகர், அரசியல் கேலிச்சித்திரங்களை வரைவதில் சிறப்பானவர், 1720ல் லத்தீன் ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர் ஹோகார்த், செதுக்கோவியங்களில் தீவிரப்பயிற்சி பெற்று தேர்ந்த செதுக்கோவியக் கலைஞராக திகழ்ந்தார், சூதாட்டம், கள்ளச்சந்தை, மிருகங்களை சித்ரவதை செய்வது, அரசியலில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி வெளிப்படையான கண்டனத்துடன் ஒவியங்களை வரைந்திருக்கிறார் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரில் நடைபெற்ற தேர்தல் குறித்து கேலியான நான்கு செதுக்கோவியங்களை ஹோகார்த் வரைந்திருக்கிறார், 1755ல் …

தேர்தல் ஒவியங்கள் Read More »

பிறமொழிகளில்

ஜுனியர் விகடனில் நான் எழுதி வரும் எனது இந்தியாவின் முதல்பாகம் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது, புத்தகம் வெளியான நாள் முதல் இன்றுவரை தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், வாழ்த்துகள் எனக்கு வந்தவண்ணம் இருக்கின்றன, வரலாற்றை வாசிப்பதில் உள்ள விருப்பமும், அறியப்படாத உண்மைகளை நோக்கிய வாசகர்களின் தேடுதலும் இப்பத்தியைத் தொடர்ந்து எழுதுவதற்கு மிகுந்த உத்வேகம் தருகின்றது சிறப்பான வடிவமைப்புடன், நேர்த்தியாக உருவாக்கபட்டுள்ள எனது இந்தியா விகடன் பிரசுர வெளியீடாக வந்துள்ளது, எனது இந்தியாவிற்கான அறிமுகக் கூட்டம் நான்கு …

பிறமொழிகளில் Read More »

பென்குவின் தொகைநூல்

சென்னை நகரைப்பற்றி எழுத்தாளர் அம்பை தொகுத்துள்ள The Unhurried City: Writings on Chennai நூலை பென்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது, இந்த நூலில் மிதந்து செல்லும் அறைகள் என்ற எனது கட்டுரையை அம்பை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் சென்னையின் வரலாற்றையும் சென்னை நகரைப் பற்றிய பல்வேறு நினைவுகளையும், படைப்பு இலக்கியங்களையும் உள்ளடக்கிய சிறப்பான தொகுப்பு  இது •••

பாலாவின் பரதேசி

பாலாவின் பரதேசி திரைப்படத்தை சற்றுமுன்பு பார்த்துவிட்டு திரும்பினேன், தமிழ் சினிமா பெருமைப்படக்கூடிய உன்னதமான திரைப்படமது, உலக சினிமா அரங்கில் தனிப்பெரும் இயக்குனராக பாலா ஒளிர்கிறார், இந்திய சினிமாவில் இது போல ஒரு திரைப்படம் இதுவரை வந்ததில்லை, பாலாவின் சினிமா பயணத்தில் இது ஒரு மைல்கல் நாம் அன்றாடம் குடிக்கும் தேநீருக்குப் பின்னே எத்தனையோ மனிதர்களின் கண்ணீர் கலந்துள்ளது என்ற உண்மையை முகத்தில் அறைவது போல காட்சிபடுத்தியுள்ளது பரதேசி, தேயிலைதோட்டங்களில் புதையுண்டு போன மனிதர்களின் வாழ்க்கையை அதன் சகல …

பாலாவின் பரதேசி Read More »

ஒஹெரு வாழ்கிறாள்

இதிகாசங்களின் தனித்தன்மை உணர்ச்சிகளைக் கையாளும் முறையாகும், குறிப்பாக பிரிவை, மரணத்தை, நிர்கதியை, பெருங்கோபத்தை, அதனால் ஏற்படும் மனக்கொந்தளிப்புகளை நுட்பமாகவும் நேர்த்தியாகவும்  குரலை உயர்த்தாமல் ஆழமாக மனதில் உணர்த்துவதாகும். மகாபாரதமும் ராமாயணமும் இதில் பெரும் சாதனையைப் புரிந்திருக்கின்றன, அதனால் தான் நூற்றாண்டுகளாக அவை மீள்வாசிப்புக்கு உள்ளாகிக் கொண்டேயிருக்கின்றன, அத்தோடு காவியநிகழ்வுகளைக் குறித்து  புதிய கண்ணோட்டத்தில் படைப்புகள் வெளியாகி வருவதும் இதன்பொருட்டே, மகாகவி பாஷனின் சமஸ்கிருத நாடகமான உறுபங்கம் (Urubhangam )துரியோதனனைப் பற்றிய பொதுப்பிம்பத்தை மாற்றியமைக்க கூடியது. இதிகாசம் காட்டும் …

ஒஹெரு வாழ்கிறாள் Read More »

கண்மூடிப் பறத்தல்

இயக்குனர் பெர்க்மென் தனது முதிய வயதில் அளித்த ஒரு நேர்காணலில் தான் கண்களை மூடிக் கொண்டால் தலைக்குள் கூட்டம் கூட்டமாக வெண்ணிறமான பறவைகள் பறப்பதாகவும், அவற்றை மனதிற்குள்ளாக எண்ணிக் கொணடிருப்பதே தனது வேலை எனவும், ஒருவேளை பறவைகள் தனது கண்ணில் இருந்து மறைந்துவிட்டால் தனது வாழ்க்கை முடிந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார், இதை வாசிக்கையில் எனக்கு ஜோர்ஜ் லூயி போர்ஹெஸின் பறவைகள் கதை நினைவிற்கு வந்து போனது, இது முதுமையின் பிரச்சனை மட்டுமில்லை, ஆழமான ஒரு ஆன்மீக அனுபவம், …

கண்மூடிப் பறத்தல் Read More »

வம்சி புத்தக வெளியீடு

குழந்தைகளுக்காக நான் தொகுத்து வெளியான கால்முளைத்த கதைகள் நூலை மூன்றாம் வகுப்பு படிக்கும் சைதன்யா ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார், இவர் நண்பர் வினோத்தின் மகள், வினோத் இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர், ஒரு எளிய பயிற்சி போலத் துவங்கி சில மாதங்களில் முழு நூலையும் சைதன்யா மொழியாக்கம் செய்து முடித்துவிட்டார். Nothing but water என்ற அந்த நூலின் வெளியீட்டு விழா வருகின்ற 9 ம் தேதி மாலை சென்னை அண்ணா சாலை புக் பாயிண்ட் அரங்கில் …

வம்சி புத்தக வெளியீடு Read More »

கடவுளின் செய்தி

இந்த உலகிற்கு கடவுள் அவ்வப்போது ஏதாவது செய்தி அனுப்பிக் கொண்டேயிருக்கிறார், அந்தச்  செய்தி, யார் வழியாக, எப்படி வருகிறது என்பதைக் கண்டு கொள்வது கடினமானது என்று ஆப்ரிக்க மக்கள் நம்புகிறார்கள் ஒரு பெண் சிங்கத்திற்கும் மான்குட்டிக்கும் இடையில் உருவான பாசத்தைப் பற்றிய  Heart of lioness என்ற அனிமல் பிளானெட்டின் ஆவணப்படத்தில் கென்யாவை சேர்ந்த ஒரு பழங்குடி மனிதன் பெண்சிங்கம் மான்குட்டியை தனது பிள்ளையைப் போல நேசிப்பது என்பது  கடவுள் இந்த உலகிற்குச் சொல்லி அனுப்பிய செய்தியே …

கடவுளின் செய்தி Read More »

தேநீர்கலை

ஒககூரா எழுதிய ஜப்பானிய நூலான The Book of tea யை வாசித்துக் கொண்டிருந்தேன், தேநீரைப்பற்றி எவ்வளவு நுட்பமாக, கவித்துவமாக, அற்புதமாக எழுதியிருக்கிறார் என்ற வியப்பு அடங்கவேயில்லை, கவிதை நூல்களை வாசிப்பதைப் போல சொல் சொல்லாக ருசித்து வாசிக்க வேண்டிய புத்தகமிது புத்தகத்தை வாசிக்க வாசிக்க உடனே டீக்குடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது, ஜப்பானியர்கள் டீக்குடிப்பதை மகத்தான தியானம் என்கிறார்கள், டீ தயாரிப்பதும், பரிமாறப்படுவதும் கலைவெளிப்பாடாகும், எனது வெளிநாட்டுப் பயணத்தில் ஜப்பானிய தேநீர்கடைகளில் தேநீர் குடித்திருக்கிறேன், உண்மையில் …

தேநீர்கலை Read More »

கன்பூசியஸ்

சீனாவின் புகழ்பெற்ற தத்துவ ஞானியான கன்பூசியஸின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கபட்ட கன்பூசியஸ் என்ற திரைப்படத்தைப் பார்த்தேன் ஆழமற்ற, மேலோட்டமான திரைப்படம், கன்பூசியஸின் அரசியல் வாழ்க்கையைப் பிரதானப்படுத்தி அவரது ஞானத்தேடுதலை அதிகம் கண்டுகொள்ளாமல் நகர்ந்து போய்விட்டது திரைப்படம் சாக்ரடீஸ் போலவே கன்பூசியஸ் இளைஞர்களிடம் போதனை செய்திருக்கிறார், கல்விநிலையத்தை உருவாக்கி அங்கே சமகாலப் பிரச்சனைகள் குறித்த வாதபிரதிவாதங்களை நிகழ்த்தியிருக்கிறார், அதிகாரத்துடன் மோதி தனது கருத்துகளில் உறுதியாக நின்றிருக்கிறார். கன்பூசியஸ்க்குப் பன்முகங்களிருக்கின்றன, அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி, …

கன்பூசியஸ் Read More »